Skip to main content

Posts

பந்தலில் இருக்கக்கூடிய கொடி வளரனும் அல்லது தரையில் இருக்கக்கூடிய கொடி வளர என்ன வேண்டும்

What should be the flag grower who may be in the pandal நமக்கு தேவையான   முக்கியமான விஷயம் மீன் அமிலம் அதுதான் முதலில் வேண்டும் அடுத்து ஊட்டம் ஏற்றிய தொழு உரம் அல்லது கணம் ஏற்றிய ஜீவாமிர்தம் மூணாவது பஞ்சகாவியா நாலாவது இ . எம்  கரைசல் இதை எல்லாம் சீரான இடைவெளியில் கொடுக்கவேண்டும் . மீன் அமிலம் ஒவ்வொரு தூருக்கும் குறைந்தபச்சம் 10 மில்லி கொடுக்க வேண்டும் . அதாவது 100 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து அதை எடுத்து ஒவ்வொரு தூருக்கும் ஒரு லிட்டர் ஊற்றி விடவேண்டும் கண ஜீவாமிர்தமாக இருந்தால் ஒரு கிலோ அளவிற்கு வைக்கலாம் . அதேபோல்  ஊட்டமேற்றிய தொழு உரம் ஒரு கிலோ வைக்கலாம் வாய்ப்புக்கிடைத்தால் 2 கிலோ கூட வைக்கலாம் பஞ்சகாவியாவை தெளித்து பயன்படுத்திக்கொள்ளலாம் . இ எம் கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் பந்தல் காய்கறி நன்றாக வளர்ந்திருந்தால் 2 லிட்டரும் கலக்கலாம் . அடுத்து ஜீவாமிர்தம் இருந்தால் ஒவ்வொரு தூருக்கும் ஒரு லிட்டர் ஊற்றவேண்டும் நல்ல பலன்களை கொடுக்கும் .     இது எல்லாம் கொடுப்பதற்கு முன்னாடி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் ...

சத்துள்ள பால் பெற மாடுகளுக்கு அளிக்க வேண்டிய தீவனங்கள்

Feeds to be fed to cows to get nutritious milk பொதுவாக பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன. இதில் புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும்.   இவற்றை தவிர கொழுப்பின் அளவைக்கொண்டு பாலுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது.  பொதுவாக, பசும்பாலில் 3.5 சதவீத கொழுப்பும், 8.5 சதவீத கொழுப்பற்ற திடப்பொருட்களும் இருக்க வேண்டும். பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை சில வழிகளில் அதிகரிக்கலாம். கொழுப்பற்ற திடப்பொருளை அதிகரிக்க வழிகள்   1 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்புத் தீவனம் கொடுப்பது மற்றும் கலப்புத் தீவனத்தில் மாவுச்சத்துக்களின் அளவை அதிகரிக்கும் நிலையில் பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.  12 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பால் கறக்க வேண்டும். மடியில் பாலை சேர விடக்கூடாது. சினை மாடுகளுக்கு 8 மாத சினைக்காலம் முதல் 2 கிலோ அடர்தீவனம் கொடுத்தால் பாலின் உற்பத்தியும், கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும். கொழுப்பு சத்து   சில மாடுகளின் பாலில் குறைந்த அளவு ...

துளசி செடி - நீங்கள் நல்ல வருமானத்தை ஈட்டலாம்

Basil - You can earn a good income மூலிகை செடியின் ராணி என்று அழைக்கப்படுகிறது. பல பயன்பாடுகளுக்காக பல நூற்றாண்டுகளாக பயிர் செய்யப்பட்டு வருகிறது .கிராம்பை போன்று இதிலும் யூஜெனோல்என்னை இருக்கிறது அதை விட 70 சதவீதம் அதிகம் இருக்கிறது . துளசி இலைகள் பல மருத்துவ பயன்பாட்டிற்க்காக அதிகம் தேவைபடுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் துளசி வளர்க்கப்படுகிறது . இந்த துளசி செடியை மருந்துக்காக பயிர் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கிறது . குறைந்த நேரம் குறைந்த செலவு அதிக லாபம் எடுக்கலாம்  மூன்றே மாதத்தில் 15 முதல் 20000 வரை செலவு செய்து அதிகமாக  லாபம் எடுக்க முடியும்   மருந்து மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு தேவை என்பதால் துளசியின் தேவை எப்பொழுதுமே இருந்துகொண்டிருக்கும் . ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயிர் செய்யப்படுகிறது . செடியாகவும் அல்லது நாற்றாகவும் பயிர்செய்யப்படுகிறது . ஒரு ஹெக்ட்டருக்கு 10 கிலோ விதை தேவைப்படும் துளசி இயற்கையிலே மருத்துவகுணம் இருப்பதால் பூச்சி நலிதக்கம் அதிகம் இருக்காது . நீங்கள் நல்ல வருமானத்தை ஈட்டலாம் துளசி செடியில் இரண்டு விதமாக வருமானம் ஈட்டலாம்  ...

கீரையில் வெட்டுக்கிளி மற்றும் பூச்சி கட்டுப்பாடு

 Locust and pest control in lettuce கீரையை பொறுத்தவரை விற்பனை பொருள் இலைகள் அப்ப அந்த இலைகள் ஓட்டைகள் இல்லாமல் எந்த ஒரு பூச்சி தாக்குதல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் அதை விற்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் . வெட்டுக்கிளி கீரையோட இலைகளை ஓட்டை விழுவதற்கு முக்கிய கரணம் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள். அதை வரவிடாமல் முதலில் தடுக்கவேண்டும் இரண்டாவது சாதாரண பூச்சிகள் தாக்குதல் இருக்கும்அதை கட்டுப்படுத்துவது  மூணாவது தேவையான இடுபொருட்கள் கொடுப்பது இந்த மூன்றும்தான் அடிப்படை . சரியான இடுபொருட்கள் கொடுப்பதால் ஒரே மாதிரி உயரம் மற்றும் அளவு கொண்டுவரமுடியும் அப்படி செய்வதற்கு தரை அதிகமான நைட்ரஜன் சத்துக்களோடும் மற்றும் சாம்பல் சத்து தேவை அது இருந்தால் பொதுவான வளர்ச்சி நன்றாக இருக்கும்  கீரைகளில் ஓட்டை வெட்டுகிளிகளாலும் பறக்க கூடிய பூச்சிகளாலும் வரக்கூடியது இதற்கு இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் பயன்படுத்துவது நல்ல பலன் தரும். இதில் இரண்டு நன்மை உள்ளது அதோட காட்டத்தன்மை பூச்சிகளை அண்டவிடாது . மற்றும் நாளைக்கே இதை விற்பனை செய்யவேண்டும் என்றால் அதோட தாக்கம் இதில் இருக்காது . வேப்பெண்ணை ...

அகத்தி மற்றும் வேலி மசால் செடி விதை நேர்த்தி செய்தல்

Agathi and Veli Masaal Seed Treatment அகத்தியில் விதை நேர்த்தி அகத்தியில் சாதாரணமாக விதை நேர்த்தி செய்யலாம் . அகத்தி விதைகளை ஒரு பேப்பர்ல போட்டுவிட்டு பாதிக்கப்பட்ட விதைகளை எடுத்து விட வேண்டும் பூஞ்சை வளைந்தது நெளிந்தது உடைந்தது எடுத்து விடவேண்டும்.  பின்பு நீர் ஊற்றி கழுவவேண்டும் கழுவிய ஈரத்தோடு 10 கிராம் அசோஸ் பயிரில்லம் , பாஸ்போ பாக்டீரியா 30 கிராம் போட்டு அதோடு தேவையான அளவு வடி கட்டிய அரிசிக்கஞ்சியை போட்டு மெதுவா பெரட்டி காயவைக்க வேண்டும். வேலி மசால் விதை நேர்த்தி வேலி மசால் விதையை 5 நிமிசம் இளம் பதத்தில்  சூடு உள்ள நீரில் ஊறவைக்க வேண்டும், பின்பு அதை எடுத்து சாதாரண தண்ணீரில் குறைந்தபச்சம் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊற வைக்கும் பொழுது 10 கிராம் அசோஸ் பயிரில்லம் , பாஸ்போ பாக்டீரியா 30 கிராம் போட்டு ஊறவைக்கலாம் . ஒரு 2 மணிநேரம் நிழலில் வைத்து பின்பு வடிகட்டி விதைக்கலாம் . முளைப்பு திறன் நன்றாக இருக்கும்  ஆரம்பத்தில் இரண்டு விதைகளையும் பயிர் செய்யும்போது அடி உரம் சரியாக இருக்கவேண்டும் . அடி உரம் இல்லையெனில் இடுபொருட்கள் சரியான முறையில் தெளித்த...

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2021 ஆம் ஆண்டில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது .

Tamil Nadu Agricultural University has introduced new varieties as Pongal gift in the year 2021. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2021 ஆம் ஆண்டில் பொங்கல் பரிசாக புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது . நெல் - கோ 54 நெல் - ஏடிடீ 55 நெல் - டிஆர்ஒய் 4 கேழ்வரகு ஏடிஎல் 1 வரகு ஏடிஎல் 1 உளுந்து கோ 7 விஎம்ஆர் (கத்திரி) 2 பாலில்லா பழா பிஎல்ஆர் 3 குடம்புள்ளி பிபிஐ(கு) 1 விளாம்பழம் டபில்யுஎப்எல் 3 மலைவேம்பு எம்டிபி 3 வேளாண்மை துறையில் 6 ரகங்களும் தோட்டக்கலை துறையில் நான்கு ரகங்களும் மற்றும் வனவியல் துறையில் 1 ரகங்களும் வெளியிடப்பட்டுயிருக்கின்றன . மூன்று நெல் ரகங்கள்  கோ 54  சொர்ணவாரி / கார் /குருவை /மற்றும் நவரை பட்டத்திற்கு ஏற்றது 110 முதல் 115 வயது கொண்டது சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 4600 கிலோ சராசரியாக கொடுக்கக்கூடியது பூச்சி மற்றும் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு தன்மை கொண்டது. ADT 55  கார் மற்றும் குருவை பட்டத்திற்கு ஏற்றது 110 முதல் 115 வயது கொண்டது சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 6000 கிலோ வரை சராசரியாக எடுக்கலாம் சம்பா பருவத்தில் திருநெல்வேலி, தென்காசி, காவிரி டெல்டா மண்டலம்பகுதிகளில்...

விவசாயத்தில் சோறு வடித்த கஞ்சியின் பயன்பாடுகள் மற்றும் அதன் பயன்கள் என்ன

What are the uses of Rice porridge in agriculture and its benefits? விதை நேர்த்தி வடிகட்டிய கஞ்சியை பொறுத்தவரை நாலா ஒட்டும் திரவம் . நாம் செய்யக்கூடிய விதை நேர்த்தியை உயிர் உங்களோட அதையும் சேர்த்து கொடுக்கும் போது அதனுடன் ஒட்டும் அதனாலதான் அது ஒரு ஒட்டும் திரவமாக இருக்கு .மிக குறைந்த விலையில் சிறப்பாக செயல் படக்கூடிய திரவம்  Sooty Mould விதை நேர்த்தியை தவிர்த்து பயன்படக்கூடிய இடங்கள் என்று பார்த்தால் . இத்திரவம் ஒட்டி காய்ந்து ஒட்டி விழக்கூடியது . பொதுவா இலைகளில் ஒட்டி இருக்கும் பூஞ்சாண தொற்று மற்றும் வெள்ளை ஈ மீது தெளித்தால் அரிசி கஞ்சி காய்ந்து இவற்றை எடுத்துகொண்டு கிழே விழ வாய்ப்புள்ளது . முக்கியமா வெள்ளை ஈ தாக்குதல் முடிந்தவுடன் கருப்பாக இருக்கும் "sooty mould " என்று சொல்வார்கள் அதை எடுக்க இதை தெளிக்கலாம்.இப்படி இலைகள் தண்டுகள் மேல் உள்ள பிரச்சனைகளை தண்ணீர் ஊற்றி கழுவிவிட முடியாது இப்படி அடித்து விட்டால் நல்ல பலன் இருக்கும் .அரிசி வடிகட்டிய கஞ்சி நல்ல வளர்ச்சியூக்கியும் கூட , சாதத்தில் இருக்கக்கூடிய அதிகமான கார்போ ஹைட்ரட்  கலந்திருக்க வாய்ப்புள்ளது இதை நேரடியாக கொடுத்தால...

பறவை காய்ச்சல் நோய் வந்தால் என்ன செய்வது

What to do if bird flu comes கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் பறவை காய்ச்சலும் நோயும் தாக்க ஆரம்பித்துள்ளது . தற்போது வரை பஞ்சாப் ,ராஜஸ்தான் , கேரளா போன்ற மாநிலங்கள் பறவை காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . ராஜஸ்தானில் மயில்கள் காகங்கள் திடீரென இறந்ததற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது .  What is bird flu? இந்தவகை காய்ச்சல் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா A வகை வைரசால் ஏற்படுகிறது . இதனால் பலவகையான பறவைகள் பாதிக்கப்படுகின்றன காட்டில் வாழக்கூடிய பறவைகள் , வான் கோழி , காடை , கோழி மற்றும் வாத்துகள் இநோய்யால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன  எப்படி பரவுகின்றது  பறவைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறைவைகளிடமிருந்து வெளிப்படும் எச்சில் , மலம்  போன்றவற்றால் எளிதில் பரவும்  மேலும் நன்றாக உள்ள பறவைகளுக்கு  நோய் பாதிக்கப்பட்ட உணவு , நீர் , மற்றும் பொருட்கள் மூலமும் பரவும் . இந்த நோய் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. ஆனால், பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் பணிபுரியும் நபர்கள் முறையான  சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் இதை தடுக்கலாம் . ...

காய்கறிப் பயிர்கள் பயிர் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Things to look out for when growing vegetable crops வயல் தயாரிப்பு 1.பசுந்தாள் உரப்பயிர் செய்து பூக்கும் நிலையில் மடக்கி உழுது விடுங்கள். 2. மக்கிய தொழு உரம் 7டன் அளவுக்கு ஒரு ஏக்கருக்கு கொடுங்கள். 3. டிரைக்கோடிர்மா விரிடி 2 கிலோவை தொழு உரத்தோடு கலந்து கொடுப்பது அவசியம். இது பயிர் பாதுகாப்பில் பூசானங்களின் தாக்குதலை தடுக்கும். 4. மண் புழுதி படும் படியாக உழவு செய்வது அவசியம். 5. சொட்டுநீர் பாசனம் அமைப்பது செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும். 6. 4' ஒரு பார் அமைத்து கொள்வது அறுவடை செய்ய வசதியாக இருக்கும். நாற்றுகள் நடவு 1. நல்ல தரமான விளைச்சல் கொடுக்கும் ரகங்களை தேர்வு செய்வது நல்லது. 2. வியாபார நோக்கில் பயிர் செய்யும் போது ஹைபிரீட் விதைகளை பயன்படுத்துங்கள். 3. சந்தை வாய்ப்பு உள்ள ரகங்களை தேர்வு செய்வது நல்லது. 4. 28 நாள் வயதுடைய நாற்றுகள் நடவு செய்யுங்கள். 5. கத்தரிக்கு 4'×4' , தக்காளி 2 1/2'×2 1/2', வெண்டை, மிளகாய் 1 1/2'×1 1/2' என்ற இடைவெளி அவசியம். 6. நாற்றுகளை பஞ்சகவியம், அல்லது ஜீவாமிர்தம் கொண்டு விதை நேர்த்தி செய்வது நடவு செய்யுங்கள். 7. தக்காளி...

மானாவாரி மக்காசோளம் சாகுபடி

Rainfed Maize Cultivation மானாவாரியாக இருக்கக்கூடிய பெருவாரியான நிலப்பரப்புகளில் மக்காச்சோளம் எளிமையாக  பயிரிடப்படுகிறது . இது மானாவாரி நிலங்களில் நீண்டகாலமா வறட்சியை இருக்கிற நிலங்களில் கொஞ்சம் மழை பெய்தாலும் உழுது நமக்காகவும் நம் கால்நடைகளுக்காகவும் வளர்க்கக்கூடிய பயிர் .மானாவாரி நிலத்தில் குறைந்தபச்சம் ஒரு ஹெக்ட்ர்க்கு இரண்டு டன் சோளம் கிடைக்கவேண்டும் . ஒரு ஏக்கர்ன்னு எடுத்துக்கிட்டா கூட 800 கிலோ கிடைக்கவேண்டும் . சோளத்தட்டை 3500 முதல் 4500 கிலோவாரை கிடைக்கவேண்டும் .  மக்காசோள  விதை நேர்த்தி பொதுவா சில விவசாயிகள் சோள விதையை வாங்கிட்டு வந்து சோதனை செய்யாமல் நிலத்தை உழுது விதைத்துவிடுவார்கள் , இது தவறு . முதலில் என்ன செய்யவேண்டும் , வாங்கி வரும் விதையை பரப்பி வைத்து சரியில்லாத விதையை நீக்கவேண்டும் முக்கியமா பூஞ்சாணம் உள்ளது , பாதிக்கப்பட்டது போன்ற விதைகளை நீக்கிவிட வேண்டும் . ஒரு ஏக்கருக்கு 6 கிலோ சோள விதை தேவைப்படும் கிலோவிற்க்கு பவுடராக இருந்தால் 20 கிராம் சூடோமோனஸ் 200 கிராம் அசோஸ்பயிரில்லம் 50 கிராம் இந்த கலவையில் கலந்து இதனுடன் அரிசிக்கஞ்சி கலந்து ( கஞ்சி கலப்பதால் ...

தென்னை மரக்கன்று நடும் முறை

Coconut sapling planting method   ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இருக்ககூடிய மரம் இருக்கவேண்டிய மரம்மும் கூட , இந்த தென்னை மரக்கன்றை எப்படி நடுவது என்று பார்ப்போம் . இந்த தென்னை மரத்தோட தூர் பகுதி ஒரு ஆண்டிற்க்கு ஒரு கண அடி வரை வளர்ச்சி அடையும் . அப்போது , கிட்டத்தட்ட அய்ந்தாயிரம் முதல் ஆறாயிரம் வரை சல்லி வேர்கள் தோன்றும் அவை பக்கவாட்டாக சென்று மரத்தை தாங்கி பிடிக்கும். தென்னை மரக்கன்றை எப்படி நடுவது முதலில் 3*3*3 அடிக்கு குழி எடுக்கவேண்டும் மறுநாள் முக்கால் குழி  அளவிற்க்கு மண்ணை மறுபடியும் இழுத்துவிட வேண்டும் பின்பு காலில் கொஞ்சம் மிதித்து விடுங்கள் . பிறகு நடுப்பகுதியில் நெத்தை வைக்கவேண்டும் , கன்றோட பக்கவாட்டு பகுதியில் மண்ணை கொஞ்சம் இழுத்துவிட்டு அதில் குறைந்தபச்சம் 5 கிலோ மக்குண தொழு உரம் , 20 கிராம் சூடோமோனஸ் இரண்டையும் கலந்து சுற்றி வரை போட்டுவிடுங்கள் . உரம் தொழு உரம் கிடைக்கவில்லையெனில் அசோஸ்பயிரில்லம் 200 கிராம் , பாஸ்போபாக்டீரியா 100 கிராம் இதோட சூடோமோனஸ் கலந்து குழியோட எல்லா பகுதிகளிலும் போட்டு விட்டு மிச்சமண்ணை இழுத்து தென்னை கன்று உயரமாகவும் அதிலிருந்து மூணு அடிக்கு வட்...