Skip to main content

Posts

நெற்பயிரில் பாக்டீரியல் குலை நோய்

 paddy pest and diseases - Bacterial blight இந்த நோயோட தாக்கம் முதலில் எங்கிருந்து வரும் என்றால் நாம் நெல் விதையை விதைநேர்த்தி சரியாக  செய்யாமல் விதைத்தால் வரும் . அல்லது சரியாக பண்படாத அல்லது சரியாக முளைக்காத விதை நெல்லாக இருந்தால் அதிலிருந்து வரும் . இதை சரி செய்வதற்கு விதைப்பதற்கு முன்பு நெல் விதையை தரையில் பரப்பி சரியில்லாத விதைகள் பூஞ்சை பிடித்த விதைகள் போன்றவற்றை நீக்கி விடவேண்டும்  நெல் விதை நேர்த்தி ஒருகிலோ விதை நெல்லுக்கு பவுடராக இருந்தால் 10 கிராம் திரவமாக இருந்தால் 6 மில்லி சூடோமோனஸ் அல்லது விரிடி அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ மற்றும் 30 கிராம் அசோஸ் பயிரிலும் உடன் கலந்துசெய்யலாம்  நெல் பற்றிய மற்ற கட்டுரைகள் - Click Here   முதலில் விதை நெல்லை தண்ணீரில் கலந்து அழுக்கை நீக்கிவிடவேண்டும். அடுத்து சூடோமோனஸ் மற்றும் அசோஸ் பயிரிலும் கலந்து நன்றாக பிரட்டிவிடவேண்டும் . பிரட்டி விடுவதை  கடினமாக செய்க்கூடாது விதை முனை மழுங்கி விடும் ஒரு அகலமான கரண்டியில் செய்யலாம்  நிலம்  ஏற்கனவே பாக்டீரியல் குலை நோய்  வந்த நிலமாக இருந்தாலோ அல்லது நீங்...

மாடி தோட்டத்தில் கீரை வளர்ப்பு - சில நுணுக்கங்கள்

Growing lettuce in the terrace garden - some tricks கட்டு பத்து ரூபாயில் கிடைக்கக்கூடிய மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் கீரை . கீரையை நம் தேவைக்கேற்ப வீட்டுத்தோட்டத்திலேயே வளர்க்கலாம் . மற்ற  காய்கறிகளை விட கீரை வளர்ப்பது கொஞ்சம் சுலபம் அதில் சில நுணுக்கங்கள் பற்றி பார்ப்போம் . பேக் -Bag மற்ற செடிகள் போல் இல்லாமல் கீரைகளை நாம் நெருக்கமாக வளர்க்க முடியும் . அதே சமயம் நாம் கொஞ்சம் பெரிய சைஸ் பைகளை தேர்தெடுப்பது நல்லது அப்பொழுதுதான் குறைந்த இடத்தில் அதிக கீரைகளை நாம் வளர்க்கமுடியும்  Bag size                      18 x 9 Inch                                     6 x 4 x 1 feet கீரை வகைகள்  கீரையை பொறுத்தவரை பல வகையான வகைகள் உள்ளன அதில் உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் . அதை நீங்கள் இரண்டு விதமாக செய்யலாம் அதில் ஒரு முறை மட்டும் அறுவடை செய்யக்கூடிய கீரைகள் (தண்டு கீரை) மற்றொன்று பலமுறை அறுவடை செ...

மாமரத்தில் பூச்சி தாக்குதல் - cultivation of mango

cultivation of mango பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நீண்ட காலா அடிப்படையில் நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும் . அதாவது செப்டம்பர் மாதத்தில் இருந்தே வேலமர பட்டை கரைசல் , அக்னிஅஸ்திரம் ,கற்பூரக்கரைசல் இதில் ஏதாவது ஒன்றை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து கொண்டே வரவேண்டும் . மாமரம் பற்றிய மற்ற கட்டுரைகள் - Click Here  ஜூன் ஜூலை மாதங்களில் மாதம் ஒரு முறை தெளிக்கலாம் . அதுவே அக்டோபர் மாதத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம் இப்படி செய்வதால் பெரிய குறைபாடுகளில் இருந்து தப்பிக்கலாம் . அதிகப்படியான பூச்சிகளிடம் இருந்து மாம்பழத்தை காப்பாற்ற பெவேரியா பேசியானா வெர்டிசீலியம் லக்கானி இரண்டு திரவத்தை வாங்கி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து 1 வது மற்றும் 10 அல்லது 12 வது நாள் தெளிக்கலாம் . உங்களால் ஒரு முறைதான் தெளிக்க முடியும் என்றால் 75 மில்லி கலந்து தெளிக்கலாம் . மேலிருந்து நன்றாக நனைத்து விட்டு தெளிக்க வேண்டும்  மாம்பிஞ்சு உதிர்வு எப்படி கட்டுப்படுத்தலாம்   G.M Smart Vivasayi E-mail - imperialhorticulturetips@gmail.com Contact- +919003395600

கத்தரிக்காய் - ஆந்தராக்னோஸ் மற்றும் நுன்னூட்ட சத்து குறைபாடு

Cultivation of brinjal கத்தரி செடிகளோட இருக்கக்கூடிய கலைச்செடிகளில் இருந்து பரவக்கூடிய அதிக பூஞ்சிகளால இந்த கத்தரிக்காய் செடி தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது செடிகளுக்கு மேல் தண்ணீர் பாய்ச்சுவது , ஸ்ப்ரிங்ளர் மூலம் அல்லது தெளிக்கும் போதோ நாம் தெளிக்கும் தண்ணீர் சரியாக காயாமல் இருந்தால் இந்த பூஞ்சைகளோட தாக்கம் இருக்கும் இது கொஞ்சம் வேகமாக பரவக்கூடிய பூஞ்சை தாக்கமாகும் . கட்டுப்படுத்த வேளைகளில் தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்கலாம் காலை நேரத்தில் நீர் பாய்ச்சலாம் இப்படி செய்வதால் பயிருக்கு தேவையான நீர் போக மற்றவை ஆவியாகிவிடும் ஈரம் இருக்காது அதனால் பூஞ்சை தொற்றும்  இருக்காது . Related post    கத்தரிக்காய் Pest And diseases  Vegetables சூடோமோனாஸ் , விரிடி, பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இந்த முன்றில் ஏதாவது இரண்டு முக்கியமா சூடோமோனஸ் மற்றும் ட்ரைகோடெர்மா விரிடி அல்லது சூடோமோனஸ் மற்றும் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இப்படி ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் 25 +25 மில்லி கலந்து தெளிக்கலாம் இதுவே கொஞ்சம் அதிகம் வந்துவிட்டது எனில் 50+50 மில்லி கலந்து ஸ்ப்ரே பண்ணலாம்  ஒரு ஏக்கருக்கு ஒரு ல...

இயற்கை முறையில் களை கட்டுப்பாடு - களைக்கொல்லி

organic weed control ஒரு களை அதோட பயன்பாடு என்பது மிக அதிகம் , களை  உணவாக பயன்படுகிறது , களை மருந்தாக பயன்படுகிறது , களை அழகு பொருட்கள் செய்ய பயன்படுகிறது இப்படி களைகளோட பயன்கள் இருக்கத்தான் செய்கிறது . ஆனால் களை கட்டுப்பாடு என்பது எங்கே வருகிறது என்று பார்த்தால் , உங்களுடைய முக்கிய பயிரின் இடையே வளரும் போது அது களையாகிறது இந்த கட்டுரையில் நாம் எப்படி இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம் . முதலில் ஒரு களை ஏன் அகற்றப்பட வேண்டும் களையோட முக்கிய போட்டி என்று எடுத்துக்கொண்டால் அது இடம் ஒரு சதுர அடியில் கிட்டத்தட்ட 500 முதல் 600 பல்வேறு வகையான களை விதைகள் உள்ளன . இந்த விதைகள் எந்த நேரத்தில் முளைக்கும் என்று சொல்ல முடியாது அது மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்தது . அடுத்து நீர் , உரம் என அனைத்திற்கும் களை போட்டிபோடும் . பூச்சி நோய் உருவாக்கத்திற்கும் களை  முக்கிய பங்குவகிக்கிறது எனவே முதலில் களைகள் அகற்ற படவேண்டும் என்பது முக்கியமாகிறது . விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த நேரடி கள பயிற்சிகள் ஆன்லைன் பயிற்சிகள் பற்றிய விவரங்கள்- JOIN Here  உழவு ஒரு களையை கட்...

மாதுளை பழத்தில் கரும்புள்ளி எதனால் வருகிறது

pomegranate pest and disease management  தமிழ் அதிகப்படியாக விற்க கூடிய பழங்களில்  ஓன்று இந்த மாதுளை . அந்த பழத்தில் கரும்புள்ளியோ அல்லது துளையோ இருந்தால் அது விற்பனையாகாது அதனால் அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம் . இலை புள்ளி நோய்  மாதுளையில் இலை புள்ளி நோய் அல்லது பழத்தில் புள்ளி நோய் இவை பொதுவாக பூஞ்சைகளால் உருவாகிறது இது எப்படி இருக்குமென்றால் படத்தில் இருப்பதுபோல் கருப்பாக இருக்கும். மேல் பகுதி நொழு நொழு போன்று இருக்கும்  சின்னதாக ஒரு துளை இருக்கும் அப்படி இருந்தால் அது பூசைகள் தாக்குதலுக்குள்ளானது . அதுவே துளை இருந்து கரும்படலமாக பரவினால் காய் துளைப்பானாக இருக்கும் (படத்தில் காண்க ). பொதுவாக மாதுளை பழத்தில் விற்பனை பொருள் அதன் தோல்தான் , அதில் கரும்புள்ளி இல்லாமல் இருந்தால்தான் விற்க முடியும் . எனவே இதை கட்டுப்படுத்த  பாலிதீன் பேப்பர் பழத்தை மூடாமல் அப்படியே வைக்கிறீர்கள் என்றால் அதற்கு சரியான நேரத்தில், சரியான அளவில் நீங்கள்  பூஞ்சாண கொல்லிகளும் காய்ப்புழுவிற்கான தடுப்பு நடவெடிக்கை எடுக்கவேண்டும் அப்படி எடுத்தால் நீங்கள் ஓப்பனில் வ...

தோட்டத்தில் எறும்புகளை கட்டுப்படுத்த சில டிப்ஸ்

ant control for garden முதலில் உங்கள் தோட்டத்தில் விவசாயம் இருக்கா அல்லது வெறும் நிலமா என்று பாருங்கள் . வெறும் நிலமாக இருந்தால் செய்யவேண்டியது நன்றாக உழவேண்டும் . நன்றாக பிரட்டி போட்டு உழவேண்டும் ஏறும்போட புற்றை ஆய்வு செய்தால் 3 முதல் 4 அடிவரை வளைந்து நெளிந்து நல்ல கட்டமைப்புடன் இருக்கும் எனவே இதன் முட்டைகள் எல்லாவற்றையும் அளிக்கவேண்டுமென்றால் அதற்கு வேளாண்துறையிலோ அல்லது வெளியிலோ மோல்ட் ப்லோட் கலப்பை இருக்கும் இந்த கலப்பையை பயன்படுத்தினால் கீழ் இருந்து 2 அடி காலத்திற்கு தோண்டி மண்ணை திருப்பி போடும் இதனால் எறும்பு புற்று அழியும் . கால்நடை மற்றும் விவசாயம் சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க் Part - 5 அதுவே செடிகள் இருக்கு என்றால் அதன் புத்து எங்கே இருக்குனு பாருங்கள் புற்று இருந்தால் நீரை நன்றாககொதிக்கவைத்துசுடுதண்ணீரை.   புற்றுக்குள் ஊற்றி விடுங்கள் அழிந்து போகும் ஆனால் இந்த முறையை செடி அருகில் இருந்தால் பயன்படுத்த வேண்டாம் . செடிக்கு அருகில் எறும்பு புற்று இருந்தால் 10 லிட்டர் நீருக்கு 1கிலோ வசம்பை இடித்து போட்டு ஒரு நாள் ஊற வைக்கவேண்டும் பின்பு அதை புற்றில் ஊற்றுங்கள் எறும்புக...

ஒரு விவசாயியும் ஒரு வெப்சைட் டெக்னாலஜியும்

New Agriculture Technology  இன்றைய காலகட்டத்தில் ஒரு டெக்னாலஜியோட தாக்கம் என்பது எல்லா இடத்திலும் இருக்கு . நீங்கள் ஒரு பொருளை வாங்கினாலும் சரி விற்றாலும் சரி அதை நாம் இருந்த இடத்திலே நாம் செய்ய முடியும் , ஒரு விஷயத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்மென்றாலும் அது உங்கள் உள்ளங்கைக்கே வந்துவிடும் . இது விவசாயத்திற்கும் பொருந்தும். உங்களுடைய பயிரை ஒரு பூச்சி தாக்கியிருந்தால் என்ன செய்லாம்  ஒரு வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம் அல்லது ஒரு போட்டோ எடுத்து அதை பேஸ் புக்கிலோ , வாட்ஸ் ஆப்பிளோ அல்லது அல்லது அது சார்ந்த ஆஃப்ல பதிவு செய்தால் அதற்க்கான பதில் அடுத்த 5 நிமிடத்தில் கிடைத்துவிடும் . விவசாயத்தை பொறுத்தவரை உழுவதிலிருந்து அறுவடை வரை டெக்னாலஜியின் தாக்கம் இருக்கும். ஆனால்  உங்கள் விவசாயத்தின் வெற்றியை நிர்ணையிக்க போவது அறுவடைக்கு பின் உள்ள விற்பனைதான் இந்த கட்டுரையில் நாம் எப்படி ஒரு இணையத்தளத்தில் விற்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . ஏன் விற்பனையை இணையதளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் காய்கறிகளாகவும் அல்லது தானிய பயிர்களாகவும் இருந்தாலும் சரி நேரடியாக சந்தையில் கொண்டுபோய் நேர...

மாட்டு சந்தை - மாடு விற்பனை மார்ச் பார்ட் - 4

குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 21/03/2021 Updated 1) விற்பனைக்கு : 3 ஆம் ஈத்து, அழகிய பெருங்கூட்டு மயிலை மாடு காளைக் கன்று கன்று ஈன்றி 3 நாட்கள் ஆகிறது பால் 3 லிட்டர் விலை -55000 தொடர்புக்கு: Alagu Farms Pollachi பேச:9942384512 2) காரிமாடு விற்பனை க்கு... ஒரு வாரத்தில் கன்று ஈனும் நான்காம் ஈத்து விலை : 56,000 தொடர்புக்கு : 8056377617 கண்ணம்பாளையம், சூலூர், கோவை 3) விற்பனைக்கு: பல் போடாத தலை ஈத்து அழகிய பால் வர்க்க மயிலை கிடாரி, இன்னும் 1வாரத்தில் கன்று ஈனும், நல்ல சாதுவான குணம், சுழி சுத்தம், பெண்கள் பிடிக்கலாம், இடம்: அந்தியூர் அருகில் (ஈரோடு மாவட்டம்), விலை 44,000, போன்: 86680 21530, 99523 98524, குறிப்பு: இதன் தாய் நல்ல பால் வர்க்கம் (நேரம் 3.5லி), தாயின் புகைப்படம் பார்வைக்கு மட்டும். 4) புங்கனூர் மாடுகள் வ...

முருங்கை மரமும் மதிப்புகூட்டலும்

drumstick benefits and value added  விவசாயத்தில் நீங்கள் சுலபமாக ஒரு ஸ்டார்ட் அப் (Start -Up ) ஆரம்பிக்க வேண்டுமென்றால் தாராளமாக நீங்கள் முருங்கையை தேர்வு செய்யலாம். கீரை வகைகள் பொறுத்தவரை எல்லாமே சத்து மிகுந்ததுதான் ஆரோக்யமானதுதான் மேலும் மருத்துவக்குணமும் கொண்டதுதான் ஆனால் முருங்கை மட்டும் விவசாயிடமும்  சரி மக்களிடையேயும் ஒரு தனிப்பட்ட வரவேற்பு இருக்கும் . கீரை வகைகள் என்று பொதுவாக எடுத்துக்கொண்டால், ஒரு  போகத்திற்கு மட்டும் பலன் தரக்கூடிய அரைக்கீரை முளைக்கீரை உள்ளன. சில கீரைகள் நாம் வெட்ட வெட்ட முளைக்க கூடியது உதாரணமாக பொன்னகன்னி கீரை . ஆனால் மேல் சொன்ன இந்த இரண்டு வகை கீரைகளில் இலை மட்டுமே பிரதான விற்பனை அல்லது சாப்பிடும் பொருளாக இருக்கும் . ஆனால் முருங்கை எடுத்துக்கொண்டால் பல வருடம் பலன்தரக்கூடியதாகவும் , இலை , காய் மற்றும் பூக்களும் விதைகளும் கூட விற்பனை பொருளாக இருக்கும் . நாம் இந்த கட்டுரையில் முருங்கை மட்டும் மதிப்பு கூட்டல் பற்றி பார்ப்போம் . முருங்கை இலை மற்றும் முருங்கை இலைப்பொடி காய் மற்றும் பூக்களை விட அதிகம் சத்து நிறைந்தது முருங்கை இலைகள்தான் கரோட்டி...