Skip to main content

தென்னை பாலை உதிர்வதை தடுப்பது எப்படி

குறும்பை எதனால் உதிர்கிறது 




Coconut cultivation tips


தென்னையில் குரும்பை உதிர்வது என்பது ஒரு நாளில் நடக்கும் விஷயமில்லை அது தென்னையோட மொத்த பராமரிப்பு அல்லது அதனுடைய சத்தை பொறுத்தது  நாம் மண்ணுக்கேற்ற மாதிரி அடிப்படை சத்துக்கள் கொடுக்காம வெறும் தண்ணிய மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தோம்னா அந்த பயிர்ல காய்கள் நிற்பதற்கான காரியங்கள் எதுவும் நடக்காது 


இடுபொருள் கொடுக்கணும் - Organic Fertilizer


ஒரு மாதத்துக்கு அல்லது குறைந்தபச்சம் ஒரு வாரத்துக்கு ஒருமுறைன்னு  ஒரு இடுபொருள் கொடுக்கணும் உதாரணமாக ஜீவாமிர்தம் கொடுத்தால் ஒரு மரத்துக்கு குறைந்தபாசம் 3 லிட்டர் கொடுக்கலாம் , அதேகபச்சமாக 5 லிட்டர். அடுத்தவாரம் மீன் அமிலம் ,அடுத்தவாரம் அடுத்தவாரம் பஞ்சகாவியா , அடுத்து EM  கரைசல் இந்த மாதிரி மூணு வாரத்துக்கு மூணு கொடுகிறோம்னு வைங்க ஒவ்வொண்றும் ஒரு ஒரு மரத்துக்கு 20 மில்லி அளவுல தரணும் . அல்லது ஏதாவது ஒரு பொருள்ளக்கூட அந்த அளவுக்கு கொடுக்கலாம் , ஆனால் கட்டாயமாக கொடுக்கணும் . என்ன சொல்ல வாரேன்னா வெறும் தண்ணியாக கொடுக்காமல் அதனுடன் கலந்து கொடுத்து வாரம் வாரம் தென்னை மரத்தை கவனிக்க வேண்டும் .


சூடோமோனஸ் 




பொதுவாக இப்படி கொடுக்க ஆரம்பித்தாலே மரம் தெளிவாயிடும் மரத்துக்கு தேவையான அணைத்து சத்துக்களும் கிடைக்க ஆரம்பித்துவிடும் இப்ப மாதம் ஒருமுறை ஏதாவது ஒரு நேரத்தில  20 மில் சூடோமோனசை தண்ணியில் கலந்து வேரை  சுற்றி ஊற்றிவிடவேண்டும் அப்ப நமக்கு வேரில் இருக்ககூடிய பூஞ்சை தாக்குதல்கள் ,நோய்கள் இதெல்லாம் போயிருச்சனா கொடுக்கற பொருள் கேட்க்கும் அப்ப தென்னை நமக்கு முழுசா நல்ல வளரும் . இந்த மாதிரி நேரத்துல


எருக்கு இலை கரைசல்



 எருக்கு இலை கரைசல் 200 லிட்டர் drum பத்து கிலோ அளவுள்ள உடைச்சா பால் வரக்கூடிய இளம் எருக்கு   தண்டு, காய், இலை நுனிப்பகுதி குட்டி குட்டி பகுதியா நறுக்கி உள்ள போட்டு 200 லிட்டர் தண்ணீரில் 5 நாள் ஊறவைக்கலாம்  அந்த தண்ணீரை மரத்துக்கு 5 லிட்டர்னு தரையில ஊற்றலாம் இப்படி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செய்யும்போது . ஒரு மாதத்திலேயே வித்யாசம் தெரியும் குரும்பைகள் கொட்டுவது நிக்கும்.


போராக்ஸ்


அல்லது என்னுடைய பகுதியில எருக்கு இலை கிடைக்கலனா கடைகளில் போராக்ஸ் அப்படினு ஒரு பொருள் கிடைக்கும் அதை 100 கிராம் வாங்கி 5 அல்லது 10 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து குழி தோண்டி உள்ள போட்டு  மூடி தண்ணீர் கொடுக்கலாம் இது மாசத்துக்கு ஒருதடவை கொடுக்கலாம் .இதே மாதிரி ஐந்து மாசத்துக்கு தொடர்ந்து பண்ணலாம் . எருக்கு இலை கரைசலும் இது மாதிரி கொடுக்கலாம் . இப்படி கொடுக்கும்போது நீங்கள் பயிரிட்டுருக்கும் ரகத்திற்கு ஏற்றார் போல் காய்கள் வெட்டுக்கு வருமோ அது வந்துவிடும் 


செம்மண் நிலம்  -  Red soil 


வருடம் முழுவதும் காய் வரக்கூடிய 3 அல்லது 4 வருடத்துக்கு அதிகமான தென்னை மரங்கள் எல்லாத்துலயுமே இந்தமாதிரி இடுபொருட்களை தொடர்ந்து கொடுப்பது முக்கியம். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒரு மரத்திற்கு ஒன்றரை கிலோவிற்கு கல்லு உப்பு இருக்குள்ள அதை எடுத்து மண்ணை லைட்டா தோண்டி போட்டு நீர் விடலாம் இது செம்மண் நிலத்துக்கு உபயோகமா இருக்கும். சாம்பல் இருந்தால் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது 40 ஒரு முறை செம்மண் நிலம்னா இரண்டு கை எடுக்கற அளவுல எடுத்து அதை வட்ட பாத்தில போட்டு தண்ணீர் கொடுக்கலாம். 


பொட்டாஷ் பாக்ட்ரியா - Potash bacteria


அல்லது பொட்டாஷ் பாக்ட்ரியா 20 மில்லி தன்னீர்ல கலந்து பூமில கொடுக்கலாம் இதெல்லாம் என்ன செய்யும்னா மரத்தை கொஞ்சம் வலுவாக்கும். நிறைய பேரோட தென்னை மரங்கள்ல தேங்காய் விழுவதற்க்கு காரணம் என்னான்னா பாலைகளுடன் ஒட்டியிருக்கக்கூடிய தேங்காய்கள்ல ஒரு இஸ்த்திரத்தன்மை இல்லாமல் இருப்பது அதை கட்டுப்படுத்த கொடுப்பது சாம்பல் 


செம்மண் நிலமாக இருந்தால் 200 லிட்டருக்கு 3 கிலோ செவத்துக்கு அடிக்கிற சுண்ணாம்பு தண்ணீரில் கலந்து இரன்டு அல்லது மூணு மாதத்திற்கு ஒரு முறை ஒரு மரத்திற்கு 2 லிட்டர் தரையில ஊற்றிவிடலாம் இதனால் மரத்திற்கு தேவையான சுண்ணாம்பு சத்தும் கிடைக்கும் 


இதெல்லாம் செய்வதால் பொதுவா மரத்திற்கு தேவையான அனைத்தும் கொடுத்துவிடுவோம் இதனால் பாலை விழுவது குறைந்து காய்கள் நன்றாக காய்க்கும் 



Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...