மாடித்தோட்டம் பராமரிப்பு குறிப்புகள் நாம் எப்பொழுதும் மாடித்தோட்டத்துக்குள் நுழைஞ்சா செடிகளே நம்மளோடு பேசும். செடிக்கு தண்ணி பற்றாக்குறையா, எந்தச் செடிக்கு என்ன நோய் தாக்கியிருக்கு, ஏன் வளர்ச்சி குறைவாக இருக்குங்கிற விஷயத்த சொல்லிடும். செடிக்குத் தேவையானதைச் செய்தாலே செடி வளர்ந்துவிடும். காலை 8 மணிக்குள்ளும், மாலை 4.30 மணிக்கு மேலும் தண்ணி விடணும். கோடைக்காலத்தில தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் ஆடிப்பட்டத்தில் மட்டும் மாடித்தோட்டம் அமைச்சு பிப்ரவரி வரை வெச்சு கோடைக் காலங்கள்ல வளர்ப்பதை தவிர்த்துவிடலாம். திரும்பவும் ஆடிப்பட்டத்தில் அமைத்துக் கொள்ளலாம். மாடித்தோட்டத்தில் பூச்சி நோய் பராமரிப்பு “இலையின் நிறத்தை வைத்தே அதில் என்ன நோய் தாக்கியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். செடியில் இலைப்பேன் தாக்குதல் இருந்தால் பூந்திக் கொட்டையைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி தெளித்தாலே போதும் கட்டுப்படும். பூஞ்சணத்தாக்குதல், பூச்சிகளுக்கு வராமல் தடுப்பதற்கும் 1 லிட்டர் தண்ணீருக்கு, 3 மி.லி வேப்ப எண்ணெய் என்கிற விகிதத்தில் கலந்து தெளித்தால் போதும். செடிகளின் அளவைப் பொறுத்து தயாரித்துக
மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு மக்களிடத்தில் எப்போதும் தாளாத ஈர்ப்பு உண்டு. இதோ, இந்த சீசனுக்கு வழக்கம்போல மாந்தோப்புகளில் மாம்பூக்கள், பிஞ்சுகளாக மாறி, காய்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லோருக்குமே தோட்டத்தில் மாம்பழங்களை விளைவித்துச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், சிலர் மாடித்தோட்டங்களில் மாம்பழங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் வளர்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், மாடித்தோட்டங்களில் என்ன விதமான மாம்பழங்களை விளைவிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . இந்த ரகங்கள் எல்லாம் சிறப்பு! ``இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. இவற்றில் வணிக ரீதியாக 20 ரகங்கள் மட்டுமே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. வட இந்தியாவில் தஷேஹரி, லாங்கரா, பாம்பே கிரீன் வகைகள்; தென் இந்தியாவில் பங்கனப்பள்ளி, நீலம், காலாபாடி, ருமானி மற்றும் மல்கோவா வகைகள்; மேற்கு இந்தியாவில் அல்போன்சா, கேசர், மான்குராட், வன்ரான், லாங்க்ரா வகைகள்; கிழக்கு இந்தியாவில் சர்தாலு, சௌசா, மால்டா போன்ற வகைகள் வ