Natural method marigold crop management உலகம் முழுவதும் , வருடம் முழுவதும் பயிர் செய்யக்கூடிய மலர்களில் சாமந்தி பூவும் ஓன்று . அதன் நிறம் மனதிற்குள் அதிக சந்தோசத்தை ஏற்படுத்துகிறது .இந்த பூவில் 33 வகைகள் உள்ளன . தமிழ்நாட்டில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது . காய்கறி பயிர்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க வரப்பு ஓரங்களில் பயிர் செய்யப்படுகிறது . தமிழ் நாட்டில் பயிர்செய்யப்படும் ரகங்கள் கோ1, கோ 2 மற்றும் எம்.டி.யு 1 இதில் கோ 1 , எம்.டி.யு 1 மஞ்சள் நிற பூக்களை கொடுக்கும் கோ 2 கருபழுப்பு நிறத்தில் பூக்களை கொடுக்கும் கார அமிலத்தன்மை 6 ல் இருந்து 7 வரை இருக்கலாம் எல்லா வகை மண் வகைகளில் வளர்க்கலாம் என்றாலும் நீர்தேக்கமுள்ள வடிகால் வசதி குறைவாக உள்ள களிமண் நிலங்கள் சாமந்தி பூவிற்கு ஏற்றது. பகல் பொழுது குறைவாகவும் இரவு நீண்டதாகவும் உள்ள காலங்களில் நன்றாக பூக்கும் . நிலத்தை குறைந்தது மூன்று முறை உழவேண்டும் கடேசி உழவின் போது இருபத்தைந்து டன் தொழு உரம் போடவேண்டும். நேரடி விதைப்பை விட நாற்று பாவி வயலில் நடுவது நல்லது செடிக்...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்