Skip to main content

Posts

Showing posts with the label Livestock

ஆடு வளர்ப்பில் லாபம் பெற என்ன செய்யலாம் part-1

goat rearing part - 1  ஆடு வளர்ப்பை ஒரு சரியான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் விவசாயிகளின் ATM மிஷின் என்று சொல்லலாம்,  அந்த அளவிற்க்கு விவசயிகளுக்கு வருமானத்தை கொடுக்கக்கூடியது . விவசாயத்தோடு உப தொழில்தான் கால்நடை வளர்ப்பு ஆனால் விவசாயத்தின் மகசூல் குறையும் போது நமக்கு கைகொடுத்து நல்ல லாபத்தை தருவது இந்த கால்நடை வளர்ப்பே . இன்றய இளைஞர்களில் கோழி வளர்ப்பு தொழிலுக்கு அப்புறம் அதிகம் இருப்பது ஆடு வளர்ப்புதான் ஆனால் 10 பேர் இந்த தொழிலை ஆரம்பித்தாள் 2 பேர்தான் தொடர்ந்து நடத்துகின்றனர் மற்றவர்களால் அது முடியவில்லை இதற்கான காரணம் என்று பார்த்தல் போதிய அனுபவம் இன்மை , எடுத்தவுடன் சரியான பயிற்சி மற்றும் ஆலோசகர்கள் இல்லாமல் பெரிய முதலீடு செய்வது  போன்ற காரணங்களை  சொல்லலாம்  ஆடு வளர்ப்பை பொறுத்தவரை நல்ல லாபகரமான தொழில் இதில் நஷ்டம் வராமல் லாபம் பெற சில தொழில் நுட்பங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம் . எந்த ஆடு ரகத்தை தேர்ந்தெடுக்கலாம் ஆடு வளர்ப்பை பொறுத்தவரை முதலில் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது எந்த ரக ஆடுகள் வாங்கலாம் எந்த ஆடு வேகமாக எடைபோடும் , நம்முட...

கோழி வளர்ப்பும் வங்கிகளின் கடன் உதவியும்

project report for poultry farm for bank loan இந்தியாவில் கறிக்காக உற்பத்தி செய்யப்படும் கோழிகளின் என்னிக்கை ஒன்பது சதவிகிதத்தில் வளர்ந்துகொண்டிருகிறது கடந்த பத்து ஆண்டுகளில் இறைச்சி சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த கோழிவளர்ப்பு தொழிலை ஊக்குவித்து கடன் வழங்குவதால் தொழிலை உருவாக்கி விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கலாம் என்பதற்காக அரசாங்கம் பல திட்டங்களை உருவாக்கி இருக்கிறது .  நீங்கள் எந்த ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தாலும் இரண்டு விஷயங்கள் முக்கியமாக தேவை ஓன்று அனுபவம் (நீங்கள் வங்கியில் லோன் கேட்கும்போது அனுபவம் இல்லையெனில் உங்கள் கடன் கொடுக்க மறுக்கலாம் ) மற்றொன்று முதலீடு. இந்த கோழி பண்ணை ஆரம்பிப்பதற்காக வங்கிகள் பல்வேறு கடன்கள் கொடுக்கின்றன .   திட்ட அறிக்கை (project report) எந்த ஒரு வங்கிக்கு சென்று கோழி வளர்ப்பதற்காக கடன் கேட்டால் வங்கியின் மேலாளர் உடனே கொடுத்து விடமாட்டார் பல விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வார் உங்களுக்கு அனுபவம் இருகிறதா அல்லது சான்றிதழ் இருகிறதா  , உங்களால் கடனை தவணை காலத்திற்குள் திருப்பி செலுத்தமுடியுமா அனை...

கறவை மாடுகளில் ஏற்படும் கருச் சிதைவு நோய் - ஒரு கண்ணோட்டம்

Miscarriage in dairy cows - an overview கன்று ஈனும் தேதிக்கு முன்பாகவே முழுமையாக வளர்ச்சியடையாத இறந்துப்போன அல்லது உயிரோடிருக்கும் கன்றினை வீசிவிடுதல் . முதல் மற்றும் இரண்டாவது மாதம் கர்ப்பகாலத்தில் உண்டாகும் கருச்சிதைவு பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை . மாடுகள் வழக்கம் போல் வலும்புக்கான அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கிவிடும் . ஆதலால் 120 நாட்கள் முதல் 270 நாட்களுக்குள் ஏற்படும் கருச்சிதைவு அல்லது கன்று வீச்சு பொதுவாக அனைவராலும் எளிதில் கண்டறிப்படுகிறது . மாட்டுப் பண்ணைகளில் ஒன்று , முதல் இரண்டு சதவிகிதக் கருச்சிதைவு பெரும்பாலும் பெரிதாக எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை . ஆனால் , அதுவே ஐந்து விகிதத்திற்கு மேல் உண்டாகுமேயானால் எச்சரிக்கைக்கான அறிகுறி கருதி தகுந்த பாதுகாப்பு மற்றும் தடுப்பு வழிமுறைகளை உடனடியாக தகுந்த கால்நடை மருத்துவம் மூலம் செயல்படுத்துவது மிக முக்கியமாகும் .  நோய்க் காரணிகள்:   கருச்சிதைவு காரணிகள் இருவகைப் படும் . ஒன்று தொற்று காரணிகள் , மற்ரொண்டு தொற்று அல்லது காரணிகள் . தொற்று காரணிகளால் ஏற்படும் கருச்சிதைவு இது என பத்து சதவிகிததிற்கு மேல் கருச்சிதை...

ஆடுகளின் பல்வேறு பருவங்களில் தீவனம் அளிக்கும் முறைகள்

Methods of feeding goats in different seasons ஆடு வளர்ப்பு தொழில் நிலமற்றவர்களில் தொடங்கி பெரிய பண்ணையாளர்கள் வரை மேற்கொள்ளக் கூடிய ஓர் எளிய தொழிலாகும் . ஆடு வளர்ப்பில் இலாபம் அதிகரிக்க தீவன மேலாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது . உற்பத்தி செலவில் 65 - 70 சதவீதம் தீவனத்திற்காக மட்டும் செலவிட நேரிடுகிறது . ஆகையால் , தீவனத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் . ஆடுகளின் வயது , உற்பத்தித் திறன் , அதன் பல்வேறு பருவங்களின் வளர்ச்சி வீதம் போன்றவைகளை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்துகளின் தேவைக்கேற்ப தீவனத்தில் மாற்றம் செய்து சரிவிகித தீவனம் அளிக்கும் பொழுது உற்பத்தி செலவு குறைந்து ஆடு வளர்பினால் இலாபம் அடையலாம் .  ஆடுகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்:   ஆடுகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு எரிசக்தி , புரதச்சத்து , நார்ச்சத்து , கொழுப்புச்சத்து , உயிர்ச்சத்து , தாது உப்புக்கள் மற்றும் தண்ணீர் மிக முக்கியமானவையாகும் . ஆடுகளின் வளர்ப்பு முறைக்கேற்ப அதன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி வேறுபடுகிறது . உதாரணமாக , மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு தேவையான அளவிற்கு புரதச் சத்துக்கள் , தா...

ஆடு வளர்ப்பு - ஆடுகளை சந்தையில் வாங்கப்போறீங்களா இதையெல்லாம் கட்டாயம் கவனிங்க

Goat rearing  -    If you are going to buy goats in the market, you must pay attention to all these       விவசாய உப தொழில்களில் முக்கியமானது ஆடு வளர்ப்பு. நீங்களும் , ஆடு வாங்கி வளர்க்கலாம்னு ஆசை இருந்தா சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் . நீங்கள் சந்தையில் ஆடுவாங்க முடிவு செய்துவிட்டால் வாங்க வேண்டிய அட்டை சற்று தூரத்தில் நின்று கவனிக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆடுகள் நன்றாக நடக்கிறதா அல்லது காலில் ஏதாவது அடிபட்டு இருகிறதா என்று தெரியும் . ஆடுகள் மேயும் போது முற்களோ அல்லது குச்சியோ குத்தி கண்பார்வை குறைவாக உள்ள வாய்ப்புள்ளது இதனை கண்டறிய உங்கள் ஆல்காட்டி விரலை ஆட்டின் கண்களை குத்துவதுபோல் செல்லுங்கள் ஆடு கண்களை திருப்பிக்கொண்டாள் கண்கள் நல்ல நிலையில் உள்ளன . ஆடுகளின் உதட்டில் கொப்புளங்கள் இருந்தால் அது ஆட்டம்மையின் அறிகுறிகளாக இருக்கலாம் , மருவா கொப்பளமா என்று சரியாக பார்த்து வாங்கவேண்டும் .ஆடுகள் முடியை தடவி பார்க்கும்பொழுது சொறி சிரங்கு போன்றவை இல்லாமல் இருக்கவேண்டும் . ஆடு வாங்கும் போது அதன் கழிவு எப்படி இருகின்றது...

ஆடு வளர்ப்பில் வெற்றி பெற என்ன செய்யலாம்

                            goat rearing கோழி வளர்ப்பு அல்லது மாடு வளர்ப்பு இது இரண்டையும் விட குறுகிய காலத்தில் (ஓன்றை முதல் இரண்டு)  அதிக லாபம் தரக்கூடியது இந்த ஆடு வளர்ப்பு . வறட்சியான பகுதிகளில் கூட நம்மால் ஆடுகளை வளர்க்க முடியும் இதனால்தான் ஆடுகளை நம்மால் குறைந்த வருமானத்தில் வளர்த்து அதிக லாபம் அடைய முடியும் இந்த கட்டுரையில் ஆடு வளர்ப்பில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்  இடத்தேர்வு இந்த இடைத்தேர்வை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் கோழி அல்லது மாடு வளர்ப்புபோல் ஒரு பெரிய அளவு இடம் இருக்காது என்றாலும் , ஆடு இருக்கும் இடம் கொஞ்சம் வார்ம் ஆக இருந்தால் நல்லது . ஆடு எப்பவுமே ஒரு கூட்டமாக வாழும் இயல்புடையது எனவே ஆட்டு பண்ணை ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் குறைந்தது 3 முதல் 5 ஆடு வரை வாங்கி வளர்க்கலாம் .  உணவு மற்றும் மேய்ச்சலுக்காக இடம்  ஆடு வளர்ப்பிற்கு அதிகம் இடம் தேவை இல்லை என்றாலும் , அதன்  மேய்ச்சலுக்கான இடம் கொஞ்சம் அதிகம் தேவை படும் . புற்கள் மற்றும் களைகள் நிறைந்த ப...

organic poultry farming in tamilnadu

இயற்கை முறையில் கோழி வளர்ப்பது எப்படி  விவசாயம் சார்ந்த தொழில்களில் முக்கிய பங்கு வகிப்பது கோழி வளர்ப்பு . மக்களுக்கு குறைந்த செலவில் அதிக புரத சத்து உள்ள இறைச்சி என்றால் அது கோழிதான் . தமிழ் நாட்டை பொறுத்தவரை எண்ணிக்கை என்பது மிக அதிகம் அதேபோல் இயற்கையாக விளைந்த உணவுகளை எடுத்துகொள்வோரின் எணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது இதனால் இறைச்சியிலும் இயற்கை இறைச்சியை தேட ஆரம்பித்துவிட்டார்கள் .  இந்தியாவை தவிர்த்து கிட்டத்தட்ட 130 நாடுகளில் ஆர்கானிக் கோழி இறைச்சி தேவையோ அல்லது தட்டுபாடோ இருக்கிறது எனவே இந்திய அரசாங்கம் ஆர்கானிக் கோழி வளர்ப்பிற்கு ஊக்குவிக்க ஒரு கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளது . ஆர்கானிக் முறையில் பிராய்லர் கோழி வளர்த்தால் ஒரு விலை அதுவே நாட்டுக்கோழி வளர்த்தால் சற்று கூடுதல் விலை அதுவே ஏற்றுமதி செய்தால் ஒருவிலை  நாம் இந்த கட்டுரையில் இயற்கை முறையில் கோழி வளர்ப்பது எப்படி மற்றும் சான்றிதழ் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்  இயற்கை முறையில் கோழி வளர்ப்பு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க , ஒரு கோழியை நீங்க எப்பவும் எப்படி வளர்ப்பிங்களோ அப்படித்தான் ...

வெற்றிகரமாக பால் பண்ணையை நடத்த 5 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்

These 5 things to keep in mind if you want to run your dairy successfully நீங்கள் வெற்றிகரமாக உங்கள் பால் பண்ணையை நடத்த வேண்டும் என்றால் இந்த 5 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் ஒரு பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்தவேண்டுமென்றால் நீங்கள் செய்கின்ற சோதனை மிக அவசியம்மானது . மனிதன் ஆனாலும் சரி விலங்குகள் அனாலும் சரி புதுவிதமான நோய்கள் வந்துகொண்டே இருக்கின்றன  அதனால் மாடு , ஆடு போன்றவற்றின் சுகாதார நிலையை அடிக்கடி கண்காணிப்பது முக்கியம் . உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவது பிரச்சினையின் ஆரம்ப கட்டங்களில் சரியான நடவடிக்கை எடுக்க உதவும். ஒரு கால்நடைக்கு எப்போதுவேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புள்ளது, அந்தமாதிரி சமயத்தில் கால்நடை மருத்துவரை அணுகவேண்டியுள்ளது . சில சமயம் அதிகம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து மீண்டு வர சில காலம் பிடிக்கும் , அதே சமயம் பால் உற்பத்தி பாதிக்கப்படும் . நோய் அதிகமானால் கால் நடை இறந்து போகவும் வாய்ப்புள்ளது . இதையெல்லாம் தவிர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாடுகளை சோதனை செய்வது அவசியமாகிறது . ஒரு ஐந்து விதமான சோதனைகள் பற்ற...

சத்துள்ள பால் பெற மாடுகளுக்கு அளிக்க வேண்டிய தீவனங்கள்

Feeds to be fed to cows to get nutritious milk பொதுவாக பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன. இதில் புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும்.   இவற்றை தவிர கொழுப்பின் அளவைக்கொண்டு பாலுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது.  பொதுவாக, பசும்பாலில் 3.5 சதவீத கொழுப்பும், 8.5 சதவீத கொழுப்பற்ற திடப்பொருட்களும் இருக்க வேண்டும். பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை சில வழிகளில் அதிகரிக்கலாம். கொழுப்பற்ற திடப்பொருளை அதிகரிக்க வழிகள்   1 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்புத் தீவனம் கொடுப்பது மற்றும் கலப்புத் தீவனத்தில் மாவுச்சத்துக்களின் அளவை அதிகரிக்கும் நிலையில் பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.  12 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பால் கறக்க வேண்டும். மடியில் பாலை சேர விடக்கூடாது. சினை மாடுகளுக்கு 8 மாத சினைக்காலம் முதல் 2 கிலோ அடர்தீவனம் கொடுத்தால் பாலின் உற்பத்தியும், கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும். கொழுப்பு சத்து   சில மாடுகளின் பாலில் குறைந்த அளவு ...

பறவை காய்ச்சல் நோய் வந்தால் என்ன செய்வது

What to do if bird flu comes கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் பறவை காய்ச்சலும் நோயும் தாக்க ஆரம்பித்துள்ளது . தற்போது வரை பஞ்சாப் ,ராஜஸ்தான் , கேரளா போன்ற மாநிலங்கள் பறவை காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . ராஜஸ்தானில் மயில்கள் காகங்கள் திடீரென இறந்ததற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது .  What is bird flu? இந்தவகை காய்ச்சல் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா A வகை வைரசால் ஏற்படுகிறது . இதனால் பலவகையான பறவைகள் பாதிக்கப்படுகின்றன காட்டில் வாழக்கூடிய பறவைகள் , வான் கோழி , காடை , கோழி மற்றும் வாத்துகள் இநோய்யால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன  எப்படி பரவுகின்றது  பறவைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறைவைகளிடமிருந்து வெளிப்படும் எச்சில் , மலம்  போன்றவற்றால் எளிதில் பரவும்  மேலும் நன்றாக உள்ள பறவைகளுக்கு  நோய் பாதிக்கப்பட்ட உணவு , நீர் , மற்றும் பொருட்கள் மூலமும் பரவும் . இந்த நோய் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. ஆனால், பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் பணிபுரியும் நபர்கள் முறையான  சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் இதை தடுக்கலாம் . ...

வெள்ளாட்டை ஐந்து முறைகளில் வளர்க்கலாம்

Goats can be reared in five ways இந்தியாவில் 97 சதவீத கிராமங்களில் அவசியம் வெள்ளாடு இருக்கும். வெள்ளாடு வளர்ப்புக்கு குறைந்த முதலீடு போதுமானது. விரைவில் வருமானம் தரக்கூடியது. வெள்ளாட்டுக் கறி எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது.  வெள்ளாட்டை ஐந்து முறைகளில் வளர்க்கலாம் 1. தானே மேய்ந்து வரும் சுய மேய்ச்சல் ( *Uncontrolled Grazing* ) 2. கொட்டகையும் மேய்ச்சல் இணைந்த முறை ( *Semi Intensive* ) 3. கயிறு கட்டி மேய்ச்சல் ( *Tatnering* ) 4. கொட்டகை முறை வளர்ப்பு ( *Stall Fed System)*  5. ஆழ்கூள முறை வளர்ப்பு ( *Deep Litter System)* 1. சுய மேச்சல்   இதுதான் தமிழ்நாட்டில் இயல்புக்கு ஏற்ற வளர்ப்பு முறை அதிகமான ஆடுகளை இந்த முறையில்தான் வளர்க்கப்படுகின்றன. அதிகாலையில் பட்டியலில் இருந்து வெளியில் விடப்படும் ஆடுகள் காடு, மேடுகள் வயல்வெளிகளில் பரவலாக மேய்ச்சல் விடுபட்ட பட்டியில் அடைக்கபடும். 2. கொட்டகையும் மேய்ச்சல் இணைந்த முறை இந்த முறையில் பகல் நேரங்களில் மேய்ச்சல், இரவு நேரங்களில் கொட்டகையில் அடைத்து  புல், உலர் தீவனம், அடர் தீவனம் கொடுக்கப்படும். 3.கயிறு கட்டி மேய்ச்சல் குறைந்த எண்ணிக்...

ஆடு வளர்ப்பு கேள்வி - பதில்

Goat breeding question and answer ஆட்டின் காலில் புண் உள்ளது? செருமல் இருக்கிறது தீர்வு என்ன? பதில் : புண் உள்ள காலில் மஞ்சள், வேப்பிலையை அரைத்து தடவவும். ஈக்கள் உட்காராதவாறு புண்ணை சுற்றி வேப்பண்ணெயை தடவவும். இருமல் இருப்பதற்கு குடற்புழு நீக்கம் செய்வது நல்லது. குடற்புழு நீக்கம் செய்ய அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அணுகி மருத்துவரின் அறிவுரைபடி குடற்புழு நீக்கம் செய்யுங்கள். கேள்வி  தலச்சேரி ஆடுகள் எங்கே கிடைக்கும்? பதில்  கேரளாவில் உள்ள தலச்சேரி என்னும் இடத்தில் இந்த இன ஆடுகள் கிடைக்கும் மற்றும் சென்னையில் உள்ள காட்டான் குளத்து¡ர் கால்நடை பண்ணையில் கிடைக்கும். முகவரி : கிருஷி விக்யான் கேந்திர (KVK), காட்டுப்பாக்கம் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம், தொலைபேசி எண்: 044-27452371 கேள்வி  ஆட்டிற்கு நாக்கில் கொப்பளம் போல் உள்ளது, காய்ச்சல் மற்றும் தீனி எடுக்கவில்லை? பதில்  ஆட்டின் உதட்டில் கொப்பளம் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். அது அம்மை நோயா என்று கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற்று கொள்ளவும். மேலும் நாக்கில் கொப்பளம் இருப்பின் போரிக் ஆஸிட் பவுடர்யைய...

வெள்ளாடுகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

What are the differences between goats and sheep? 1. வெள்ளாடுகள் நீண்ட கால்களுடனும், மெலிந்த உடலுடனும் உயரமாகக் காணப்படும். ஆனால் பொதுவாக செம்மறி ஆடுகள் குட்டையான கால்களுடனும், தடித்த உடலமைப்புடனும் இருக்கும். 2. செம்மறிக் கடாக்களுக்கு வெள்ளாட்டுக் கடா போன்று கெட்ட நாற்றம் இருக்காது. 3. வெள்ளாடுகளுக்குத் தாடி இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இருக்காது. 4. வெள்ளாடுகளின் வால் தூக்கி இருக்கும். செம்மறி ஆடுகளின் வால் தொங்கிக் கொண்டு இருக்கும். 5. வெள்ளாடுகள் நிமிர்ந்து நடந்து செல்லும். செம்மறி ஆடுகள் குனிந்து செல்லும். 6. செம்மறி ஆடுகளுக்குப் பக்க வாட்டில் திருகிய கொம்புகள் உள்ளன. வெள்ளாடுகளுக்கு நேரான அல்லது பின்னோக்கி வளைந்த கொம்புகள் உள்ளன. இனப் பெருக்கமும் - Goat breeding வெள்ளாடுகளில், பிட்டியூட்டரி என்னும் நாளமில்லாச் சுரப்பி, வெள்ளாடுகள் குட்டி போடுவதை முறைப்படுத்துகின்றது. பிறந்த குட்டிகள் நன்கு உயிர்வாழ ஏற்றக் கால நிலை இருக்க வேண்டும். நமது இந்திய நாட்டின் சமுனாபாரியுத் பீட்டல் இன வெள்ளாடுகளும் சூலை முதல் செப்டம்பர் வரை சினைப் பருவத்திற்கு வரும். பார்பாரி, வங்காளக் கறுப்பு, நம் த...