Skip to main content

ஆடு வளர்ப்பில் லாபம் பெற என்ன செய்யலாம் part-1

goat rearing part - 1 



ஆடு வளர்ப்பை ஒரு சரியான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் விவசாயிகளின் ATM மிஷின் என்று சொல்லலாம்,  அந்த அளவிற்க்கு விவசயிகளுக்கு வருமானத்தை கொடுக்கக்கூடியது . விவசாயத்தோடு உப தொழில்தான் கால்நடை வளர்ப்பு ஆனால் விவசாயத்தின் மகசூல் குறையும் போது நமக்கு கைகொடுத்து நல்ல லாபத்தை தருவது இந்த கால்நடை வளர்ப்பே . இன்றய இளைஞர்களில் கோழி வளர்ப்பு தொழிலுக்கு அப்புறம் அதிகம் இருப்பது ஆடு வளர்ப்புதான் ஆனால் 10 பேர் இந்த தொழிலை ஆரம்பித்தாள் 2 பேர்தான் தொடர்ந்து நடத்துகின்றனர் மற்றவர்களால் அது முடியவில்லை இதற்கான காரணம் என்று பார்த்தல் போதிய அனுபவம் இன்மை , எடுத்தவுடன் சரியான பயிற்சி மற்றும் ஆலோசகர்கள் இல்லாமல் பெரிய முதலீடு செய்வது  போன்ற காரணங்களை  சொல்லலாம்  ஆடு வளர்ப்பை பொறுத்தவரை நல்ல லாபகரமான தொழில் இதில் நஷ்டம் வராமல் லாபம் பெற சில தொழில் நுட்பங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம் .

எந்த ஆடு ரகத்தை தேர்ந்தெடுக்கலாம்



ஆடு வளர்ப்பை பொறுத்தவரை முதலில் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது எந்த ரக ஆடுகள் வாங்கலாம் எந்த ஆடு வேகமாக எடைபோடும் , நம்முடைய வளர்ப்பு முறைக்கு சாதகமாக இருக்குமா , அல்லது நம்முடைய தட்பவெப்ப நிலைக்கு ஏற்றதாக இருக்கவேண்டும் இப்படி தேர்ந்தெடுப்பது நல்லது .


அடுத்ததாக எந்த ரக ஆடுகள் வளர்ப்பதற்கு எளிமையா இருக்கும் , எந்த ரக ஆடுகள் அதிகமாக விற்பனை ஆகிறது இந்த இரண்டு விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் .



தமிழ் நாட்டை பொறுத்தவரை நாட்டு ஆடுகளான கன்னி ஆடு , கொடி ஆடு , சேலம் கருப்பு ஆடு, மோளை ஆடுகள்  போன்ற ஆடுகள் மாவட்ட வாரியாக இருக்கிறது சிவகங்கை , ராமநாதபுரம் விழுப்புரம் பகுதிகளில் கன்னி மற்றும் கொடி  ஆடுகளோட விற்பனை அதிகமாக இருக்கும் . சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் சேலம் கருப்பு ஆடுகளின் விற்பனை அதிகமாக இருக்கும் .


தலைச்சேரி ஆடு 


தமிழ் நாடு முழுவதும் தெரிந்த ரகம் , அதிக விற்பனை வாய்ப்புள்ள ரகம் , இரண்டு குட்டி போடக்கூடியரகம் இரண்டு குட்டி போட்டாலும் பால் கொடுப்பதில் எந்த பிரச்னையும் வராது  . பிறந்த குட்டியோட எடை 2 கிலோ வரை இருக்கும் மூன்று மாத குட்டி 11 கிலோ எடை வரைகூட வாய்ப்புள்ளது இது தீவனத்தை பொறுத்து வேறுபடலாம் . இந்த தளிச்சேரி ஆடுகள் ஆறு மாதம் வரும்பொழுது சராசரியாக 15 கிலோ வரை எட்டும் 9 வது மாதத்தில் 20 கிலோ எடை வரை போகும் . நல்ல தாய்மை பண்பு உடையது .



காது ஆடு என்று அழைக்கப்படும் ஜமுனாபாரி ஆடுகள் அதிக பால் வளம் கொண்டவை ஒரு சில பகுதிகளில் மட்டுமே இதன் விற்பனை வாய்ப்பு அதிகமாக இருக்கிறது . வெளிநாட்டு ரகம் என்று பார்த்தால் போயர் ரக ஆடுகள் நல்ல பெரிதாக கன்னுகுட்டி மாதிரி வளரும் . விற்பனை வாய்ப்பு என்பது மிக குறைவு இந்த ரகத்தில். தீவன  மாற்று திறன் இருக்கக்கூடியது , வேகமாக அதிக எடையை அடையக்கூடியது 


வெள்ளாடு வளர்ப்பின் சிறப்புகள் 


குறைந்த முதலீட்டில் சிறந்த சுய தொழில் ஆரம்பிக்க வேண்டுமென்றால் வெளாடு வளர்ப்பை தேர்வு செய்யலாம் . இந்த வெளாடுகள் சராசரியாக 2 குட்டிகள் வரை ஈனும் தன்மை கொண்டது . பெட்டை ஆடுகள் 1 வருடத்திற்கு அப்புறம் குட்டிகள் ஈன ஆரம்பிக்கும் , 2 வருடத்திற்கு மூன்று முறை வரை குட்டிகள் ஈனும் . இதை தவிர்த்து இறைச்சி , பால் , மற்றும் தோல் விற்பனை செய்யலாம் . ஆட்டு புழுக்கை உரமாக பயன்படுத்தப்படுவதால் அதையும் விற்பனை செய்யலாம் .


ஆடுகளை எப்படி தேர்ந்தெடுக்கலாம் 


ஒரு பண்ணை ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது மிக முக்கியம் . நீங்கள் குட்டி ஆட்டுக்களாக வாங்கி அதைவளர்த்து இனப்பெருக்கம் செய்து விற்கலாம் அல்லது பெரிய ஆடுகளாக வாங்கி அந்த ஆடுகள் மூலம் இனப்பெருக்கம் செய்து குட்டிகளாகவோ இறைச்சிக்காகவோ விற்கலாம் .

ஆடுகளை எப்படி தேர்ந்தெடுக்கலாம்


கிடா ஆடுகள் 


கிடா ஆடுகள் வாங்கும் போது நல்ல கூடுதலான உயரம் , அகன்ற மார்புகள் கால்களோடு பலம் , நீளமான உடல் வாகு போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் . ஆணுறுப்புகள் பெருத்து உடலோடு ஒட்டியிருக்க வேண்டும் விதை பை 25 முதல் 35 சுற்றளவு இருக்கவேண்டும் .


பெட்டை ஆடுகள் 


பெட்டை ஆடுகளின் தோல் நல்ல மினு மினுப்பாக இருந்தாலே ஆடு ஆரோக்கியமானதாக இருக்கு என்று அர்த்தம்  . அடுத்து முகப்பகுதியில் , சலியில்லாமல் நன்றாக மூச்சு விடுகிறதா என்று பார்த்து கொள்ளவேண்டும் . அசை போடக்கூடிய பண்புகள் இருக்க என்பதையும் கவனிக்க வேண்டும் . கண் பகுதி பாருங்கள் சிகப்பாக இருந்தால் நல்ல ரத்த ஓட்டம் உள்ள ஆடு .


ஒரு மாவட்டத்திலிருந்து தூரமாய் போய் வாங்குவதை விட உங்கள் மாவட்டத்திலேயே ஆடுகள் வாங்குவது நன்றாக இருக்கும் . முடிந்தளவு சந்தைகளில் ஆடு வாங்குவதை தவிர்த்துவிடவும் , சந்தைகளில் விற்கப்படும் ஆடுகள் 75 சதவீதம் இறைச்சிக்காக விற்கப்படுகின்றன . நீங்கள் பண்ணைகளிலோ அல்லது விவசாயிகளிடமோ வாங்குவது நல்லது .

         G.M






Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...