Skip to main content

Posts

Showing posts with the label ஊடுபயிர்

ஊடுபயிர் விவசாயம் - நெல்லி

என்னுடைய நிலத்தில் சமீபத்தில் 500 நெல்லி கன்று வைத்தேன். ஒரு மாதம் ஆகிறது. அதன் வட்டபாத்தியில் பூசணி சுரக்காய் போன்ற கொடி வகை காய்கறி வளர்க்கலாம்? இதனால் நெல்லிக்கு ஏதேனும் பாதிப்பு வருமா? தாராளமாக வளர்க்கலாம் பயிர்கள் நன்றாக கைவிரித்து வளர்ந்து நிழல் கட்டி , நிழலால் பயிர்கள் வளராது என்ற சூழ்நிலை வரும்போது மட்டும் நீங்கள் ஊடுபயிரை நிறுத்தினால் போதும் . மற்றபடி எல்ல கலகட்டத்திலயும் ஊடுபயிர் போடுவது நல்லது . நெல்லியை பொறுத்தவரை இடைவெளி அதிகமாக இருக்கும் இந்தமாதிரி ஊடுபயிர் போடும்பொழுது அது கலைகளை தடுப்பதுடன் ஒரு உயிர் மூடாக்காக செயல்படும் . இரண்டாவதாக ஒரு உபரி வருமானம் கிடைக்கும் , தண்ணீரையும் வீணாக்காமல் பயன்படுத்தலாம். மனவளமும் பெருகும் 

ஊடுபயிர்

A) ஊடுபயிர்-1 B) ஊடுபயிர்-2 C) ஊடுபயிர்-3 Your browser does not support iframes. The contact form cannot be displayed. Please use another contact method (phone, fax etc)

ஊடுபயிர்-3

எந்தெந்த பயிரில் என்ன ஊடுபயிர்? சோளத்தில்  ஊடுபயிர்கள்:  சோளத்துடன் அவரையை 4:1 என்ற விகிதத்தில் விதைத்து சோளத்தண்டு புழுவின் சேதத்தை யும், நிலக்கடலையுடன் கம்பு பயிரை 6:1 என்ற விகித்தில் விதைப்பதன் மூலம் சுருள் பூச்சியின் சேதத்தை குறைக்கலாம் . கரும்பில் ஊடுபயிர்கள்:  கரும்பில் தக்கை பூண்டு ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் கரும்பு தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம். கரும்பு பயிரில் சோயாபீன்ஸை ஊடுபயிராக சாகுபடி செய்வதால் இரண்டிலும் லாபத்தை பெறலாம்.   கரும்பு பயிரில் வெங்காய பயிரை பயிரிட்டு இடைக்கணு புழு தாக்குதலை குறைத்து விடலாம். மக்காசோளத்தில் ஊடுபயிர்கள்:  மக்காசோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதால் மூலம் புரோடீனியா புழுக்களை கட்டுப்படுத்த முடியும்.   மக்காசோளத்தில் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதால் குருத்து  ஈ மற்றும் தண்டு துளப்பனின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்.  மக்காச்சோளத்துடன் உளுந்து ,பச்சை பயிறு,தட்டை பயிறு ,சோயாமொச்சை போன்ற பயிறுவகைப் பயிர்களை ஊடுபயிராக மானாவாரி நிலங்களில் பயிரிடலாம். வெங்காயத்தில் ஊடுபயிர்கள்: வெங்காயத்தை தாக்கும் வ...

ஊடுபயிர்-2

எந்தெந்த பயிரில் என்ன ஊடுபயிர்? நெல்லில் ஊடுபயிர்கள் வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை பயறு விதைக்க வேண்டும்.இந்த தட்டை பயறில் நெற்பயிரை தாக்காத  அசுவினிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும்.இந்த பொறிவண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது. நெற்பயிரில் ஊடுபயிராக மணிலா அகத்தி, பயறு வகைகள் (வரப்பு பயிர் ), வெண்டை கிளைரிசிடியா போன்றவற்றை பயிரிட்டு லாபம் பெறலாம். நிலக்கடலையில் ஊடுபயிர்கள் நிலக்கடலையில் ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால்  புரோடீனியா  புழுக்களை கவர்ந்து அழிக்கலாம் . நிலக்கடலையோடு 250 கிராம் கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைத்து நிலக்கடலையை தாக்கும் சுருள் பூச்சி , இலைப்பேன்  மற்றும் அந்துப்பூச்சியின் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். 10 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை என்ற அளவில் ஊடு பயிராக செய்து பொறிவண்டுகளின் பெருக்கத்தை அதிகரிக்கலாம் .   எந்தெந்த பயிரில் என்ன ஊடுபயிர்? துவரையில் ஊடுபயிர்கள்: துவரை,பாச...

ஊடுபயிர்-1 - ஊடுபயிர் என்றால் என்ன

Intercropping ஊடுபயிர் ஊடுபயிர் என்பது விவசாயம் செய்தலில் முதன்மைப்பயிரின் இடையேயுள்ள இடத்தில குறிகிய காலப்பயிராக சாகுபடி செய்யும் முறைக்கு ஊடுபயிர் சாகுபடி என்று பெயர். ஊடுபயிர் சாகுபடி என்பது குறுகிய காலத்தில் வருமானம் எடுக்கின்ற ஒரு யுக்தி. ஊடுபயிர் பிரதான பயிருக்குத் துணைபோகும் தவிர பயிரின் விளைச்சலை கெடுக்காது .தனிப்பயிருக்குள் பயிரிடப்படும் பயிர்களை எல்லாம் ஊடுபயிர் என்று அழைக்கிறோம். உதாரணம் கடலைக்குள் துவரை ,தென்னைக்குள் உளுந்து,வாழை. ஊடுபயிரின் நன்மைகள் ஊடுபயிர் ஓன்று இல்லாமல் போயிருந்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அடுத்த வேலை என்பது இல்லாமல் போயிருக்கும். வறட்சி,ஆள்பற்றாக்குறை ,நோய் தாக்குதல் ,விலையின்மை என ஆயிரத்தெட்டு காரணங்களால் சவால்களை சந்தித்தபடி விவசாயம் செய்து வரும் வேளாண்குடிகளை நம்பிக்கையோடு வைத்திருப்பதே இந்த ஊடுபயிர் தான்.இந்த முறையில் தனிப்பயிர் சாகுபடியை விட குறிப்பிட்ட நிலத்தில் ,குறிப்பிட்ட காலத்தில் கூடுதல் வருவாய் பெறலாம்.நிலப்பரப்பு,நீர்,உரம் ஆகிய அனைத்தும் வீணாக்காமல் சீராக பயன்படுத்தலாம். இதனால் களை செடிகளும் குறைகிறது.ஊடுபயிர் சாகுபடியினால் குறைந்...