Skip to main content

Posts

Showing posts with the label cereal crops

கேழ்வரகு சாகுபடி

Agriculture In India-  Ragi / Finger millet களர் நிலத்தில் கூட நன்கு வளரக்கூடிய ஒரே  பயிர் கேழ்வரகு மட்டுமே. கர்நாடகத்தில் மட்டுமே அதிகம் பயிரிடப்படுகின்றது. வறட்சியை தாங்கி வளரும். அதிக கால்சியம் சத்து இருக்கக்கூடிய தானியம் இது தான்.  ரகம்  கோ 9,  கோ 13,  கோ.ஆர்.ஏ 14,  டி.ஆர்.ஒய் 1, பையூர் 1, பையூர் 2 ஒரு வித்திலை தாவரங்களில் சத்து குறைவாக தேவைப்படும் பயிரும் இதுதான். தழை சத்து மட்டும் சற்று கூடுதலாக தேவை. அதிக பட்சம் மூன்று அடி உயரம் வரை வளரும்.    பட்டம் என்று பார்த்தால் அதிகமாக தை மற்றும் மாசி. சில பகுதிகளில் சித்திரை மற்றும் வைகாசி  அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட்/ எக்டர் (600 கிராம்/எக்டர்) மற்றும் 3 பாக்கெட்/எக்டர் (600 கிராம்/எக்டர்) பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்யவும் அல்லது அசோபாஸ் (1200 கிராம்/எக்டர்) பயன்படுத்தவும் 3×8 அடி அளவில் மேட்டு பாத்திகளில் விதை தூவி நாற்று விடப் படுகிறது. ஏக்கருக்கு குறைந்தது ஒன்னரை கிலோ விதை போதுமானது. அதிக பட்சம் இரண்டு கிலோ . நேரடி விதைப்பாக இருந்தால் 3.5 கிலோ . பதினைந்து முதல் இருபது நாள் ந...

துவரை செடிகள் பூக்கும் சமயத்தில் செய்ய வேண்டியவை என்ன

What to do when flowering plants பூ காயாக மாறுவதற்கு சில காரியங்கள் செய்ய வேண்டும் அதே சமயம் புழு மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்துவதற்கும் சில விஷயங்கள் செய்ய வேண்டும் . முதலில் பஞ்சகாவிய  அல்லது தேமோர் கரைசல் அல்லது ஈ எம் கரைசல் ஏதாவது ஒன்றை அதிகாலை நேரத்திலோ இல்லை மாலை வேளைகளில் தெளித்து பூக்களை நிலை படுத்திக்கொள்ள வேண்டும் . பெவேரிய பேசியான மற்றும் வெர்டிசீலியம் லக்கானி ஏதாவது ஒன்றை 10 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது 12 நாட்களுக்கு ஒரு முறையோ தெளித்து புழு பூச்சி இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும். இரண்டையும் ஒரே சமயம் தெளிக்காமல் ஐந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம் . இது இல்லையென்றால் கற்பூரக்கரைசல் அக்னி அஸ்திரம் தெளிக்கலாம். இப்படி செய்வதால் பூக்கள் அதிகமாக பூத்து , காய்கள் நன்றாக பிடித்து நல்ல வருமானமும் கிடைக்கும்   

மானாவாரி மக்காசோளம் சாகுபடி

Rainfed Maize Cultivation மானாவாரியாக இருக்கக்கூடிய பெருவாரியான நிலப்பரப்புகளில் மக்காச்சோளம் எளிமையாக  பயிரிடப்படுகிறது . இது மானாவாரி நிலங்களில் நீண்டகாலமா வறட்சியை இருக்கிற நிலங்களில் கொஞ்சம் மழை பெய்தாலும் உழுது நமக்காகவும் நம் கால்நடைகளுக்காகவும் வளர்க்கக்கூடிய பயிர் .மானாவாரி நிலத்தில் குறைந்தபச்சம் ஒரு ஹெக்ட்ர்க்கு இரண்டு டன் சோளம் கிடைக்கவேண்டும் . ஒரு ஏக்கர்ன்னு எடுத்துக்கிட்டா கூட 800 கிலோ கிடைக்கவேண்டும் . சோளத்தட்டை 3500 முதல் 4500 கிலோவாரை கிடைக்கவேண்டும் .  மக்காசோள  விதை நேர்த்தி பொதுவா சில விவசாயிகள் சோள விதையை வாங்கிட்டு வந்து சோதனை செய்யாமல் நிலத்தை உழுது விதைத்துவிடுவார்கள் , இது தவறு . முதலில் என்ன செய்யவேண்டும் , வாங்கி வரும் விதையை பரப்பி வைத்து சரியில்லாத விதையை நீக்கவேண்டும் முக்கியமா பூஞ்சாணம் உள்ளது , பாதிக்கப்பட்டது போன்ற விதைகளை நீக்கிவிட வேண்டும் . ஒரு ஏக்கருக்கு 6 கிலோ சோள விதை தேவைப்படும் கிலோவிற்க்கு பவுடராக இருந்தால் 20 கிராம் சூடோமோனஸ் 200 கிராம் அசோஸ்பயிரில்லம் 50 கிராம் இந்த கலவையில் கலந்து இதனுடன் அரிசிக்கஞ்சி கலந்து ( கஞ்சி கலப்பதால் ...