Skip to main content

Posts

Showing posts from December, 2020

பயிருக்கு தேவைப்படும் சத்துக்கள் மற்றும் சத்துக்களை கொடுக்கக்கூடிய தாவரங்கள்

Plants that can provide the nutrients and nutrients the crop needs பயிர்களின் வளர்ச்சிக்கு  16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் . பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள்  பேரூட்டச்சத்துக்கள் எனப்படும்.  பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்கள்  நுண்ணூட்டச்சத்துக்கள்  எனப்படும். A. பேரூட்டச்சத்துக்கள் தழைச்சத்து (N) மணிச்சத்து ((P) சாம்பல்சத்து (K) B. இரண்டாம் நிலை பேரூட்ட சத்து சுண்ணாம்புச்சத்து (Ca) கந்தகசத்து (Sulphur) மெக்னீசியம் சத்து(Mg) முதலியன அதிகளவில் தேவைப்படும் எனவே இவை *இரண்டாம் நிலை பேரூட்டச்சத்துக்கள்* எனப்படும்.  C. நுண்ணூட்டச்சத்து இரும்புச்சத்து (Fe) துத்தநாக சத்து (Zn) மாங்கனீசு சத்து (Mn) மாலிப்டின சத்து (Mo) தாமிர சத்து (Cu) போரான் சத்து (B) பயிர்களுக்கு குறைந்த அளவே  தேவைப்படுவதால் இவை நுண்ணூட்டச்சத்துக்கள்எனப்படும். D. பயிர் விளைவிக்கும் சத்துக்கள் குளோரின் சத்து சோடியம் சத்து அலுமினியம் சத்து சிலிகான்சத்து - வளர்ச்சிக்கு மிக மிகச் குறைந்த அளவே தேவைப்படும் இவை  பயிர் விளைவிக்கும் சத்துக்கள் எனப்படும்  தாவரத்தில் உள்ள சத்துக்கள் & பயன்கள் ஆவ

2021 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கான சிறந்த விவசாய மொபைல் ஆப்கள் பற்றி பார்ப்போம்

 Let’s see about the best agricultural mobile apps for farmers in 2021 நமது கிராமத்தில்  உள்ள மக்கள் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருககிறார்கள் . பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் நடத்திய  ஒருஆய்வின் படி 2020 குள் 48 சதவீதம் கிராம மக்கள்  டிஜிட்டலை நோக்கி செல்வது அதிகரித்துள்ளனர் என்று சொல்கிறார்கள்  . அதே சமயம் 58 % மக்கள் விவசாயத்தையே  தங்கள் வாழ்வாதாரம்மாக  நம்பி உள்ளனர் . விவசாய ஆஃப்கள்  வந்த பின்பு விவசாயிகளுக்கு வழிகாட்ட சுலபமான ஒரு ஊடகமாக அது மாறியுள்ளது  . பயிர் அல்லது காய்கறி, வேளாண்மை, பயிர் சாகுபடி, விதைத்தல் அல்லது அறுவடை செய்வதற்கான சரியான விஞ்ஞான வழியை இது வழங்குகிறது. பூச்சி மற்றும் நோய்களுக்கான பிரச்சனைகளையும்  மருந்துகளையும்  மற்றும் சரி செய்வதற்கான சரியான வழிமுறைகளை இந்த விவசாய ஆப்கள் தருகின்றன . இந்த விவசாய ஆஃப்கள்  விவசாயிகளுக்கு சிறந்த நண்பனாக விவசாயத்துக்கு உதவி செய்கிறது . நீங்கள் எந்த ஒரு பணமும் செலவு செய்யாமல் சுலபமாக கூகிள் PLAY STORE ல்  டவுன்லோட் செய்யலாம் . இந்தியாவின் சிறந்த விவசாய ஆஃப்களை பார்ப்போம் தற்பொழுது இந்த ஆஃப்கள் தமிழ் மொழியிலும் பார்க்க முடி

வேளாண்மையில் உள்ள திட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோமா

Let us know about the Schemes in agriculture இந்தியா பெருமளவு அதன் பொருளாதாரத்திற்கு விவசாயத்தையே நம்பி இருக்கிறது.  கடந்த ஆண்டு உணவுதானியன்கள் உற்பத்தி மட்டும் 275 மில்லியனும் தோட்டக்கலை உற்பத்தி 300 மில்லியனையும் தாண்டியது . கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 99 வாட்டர் ப்ராஜெக்ட் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. பருப்பு வகைகள் மற்றும் என்னை வித்துக்களின் உற்பத்தி 38 சதவீதம் அதிகரித்துள்ளது . பால் பதப்படுத்தும் உள்கட்டமைப்புகாக 11000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது . இயற்கை மற்றும் அங்கக விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது . கடந்த பத்தாண்டுகளில் விவசாயம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 11.7 சதவீதத்திலிருந்து 13.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது . சோலார் பம்ப் திட்டம் PMKUSAM இருப்பது லச்சம் விவசாயிகளை சென்றடைந்திருகிறது . விவசாயிகளுக்கென கிசான் ரயில் திட்டம் , 2025 க்குள் பால் உற்பத்தியை இரண்டுமடங்காகுவது , பயிர் சேதத்தை தடுக்கும் திட்டம் என பல திட்டங்கள் இந்தியாவில் உள்ளன அவற்றை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்  PM KISAN MAAN DHAN YOJANA  விவசாயிகளுக்கு பென்ஷன் தருவதற்காக தொடங்கப்பட்ட திட்டமாகும் ஒவ்வொ

pasumai vikatan 10-01-21 PDF

  பசுமை விகடன் 10-01-21 PDF Click Here Link  You have to wait 15 seconds. Download Timer JavaScript needs to be enabled in order to be able to download.

கொய்யா இயற்கை விவசாயம் - கொய்யா கன்று நடும் வழிமுறை

கொய்யா கன்று நடும்  வழிமுறை - Guava seedling planting method கொய்யா செடியின் ஆரம்பகால வேர்கள்   கொய்யா கன்று நடும்பொழுது கண்டிப்பாக 2*2*2 அடி குறைந்த பச்சமாக அதிகபச்சமாக 3*3*3 அடி எடுக்கலாம் சரளை மண்ணாக இருந்தால் அதிகமாக எடுப்பது நல்லது குழி ஆழமாக எடுப்பதும் நல்லது அப்படி எடுப்பதால் செடியின் ஆரம்பகால வேர்கள் நகர்ந்து போவதற்க்கு வசதியாக இருக்கும். குழி தோன்றிவிட்டு இரண்டு நாட்கள் வைத்திருந்து அந்த மண்ணை திருப்பி இழுத்து விடவேண்டும் ஒரு முக்கால் குழி மூட வேண்டும்  சூடோமோனஸ் 10 கிராம் இப்பொழுது கொய்யா நாற்றை நடுவில் வைத்துவிட்டு அந்த குழி 3*3*3 அடி இருக்கும் காய்ந்த நாடு மாட்டு சாணம் அதுகூட சூடோமோனஸ் 10 கிராம் அல்லது அசோஸ்பைரில்லும் 50 கிராம் பாஸ்போபாக்ட்ரியா 50 கிராம் 10 கிராம் சூடோமோனஸ் இத கலந்து குழியோட வெளி விளிம்புல சுத்திவர போட்டு இப்போ மண்ணை இழுத்துவிட்டு மண்ணை இறுக்கமாக அழுத்திவிடவேண்டும்  மிச்ச மண்ணை வைத்து  ஆறடி விட்டமுள்ள ஒரு வட்டப்பாத்தி போடலாம் . முடித்தவுடன் உயிர் தண்ணிர் கொடுக்க வேண்டும் மற்றும் மூணாவது நாளும் கொடுக்க வேண்டும் 

வேம் என்றால் என்ன - Vesicular - Arbuscular Mycorrhiza VAM

Vesicular - Arbuscular Mycorrhiza வேம் என்ன வேலை செய்யும் - VAM what works வேம் என்பது ஒரு பூஞ்சை ஆகும் இது பூமியில் உரக்க நிலையில் உள்ள மணிச்சத்தை உடைத்து வேர்களுக்கு கொடுப்பதால் வேர்கள் அதிகமாக பிரிந்து அதிகமாக வளர்ந்து பயிர்கள் பூமியிலிருந்து அதிக சத்துகளை எடுத்துக்கொள்ள உதவுகிறது. இதை கொடுத்தால் எந்த பயிரெல்லாம் பூமிக்குள் விளைகிறதோ உதாரணமாக கேரட் , நிலக்கடலை , உருளைக்கிழங்கு இந்த மாதிரி பூமிக்குள் விளைய கூடிய அனைத்துவித கிழங்கு வகைகள் மற்றும் தாவர வகைகளுக்கு உதவுகிறது . மணிச்சத்து மட்டும்மல்ல நுண்ணூட்ட சத்துக்களான துத்தநாக சத்து , தாமிர சத்து மற்றும் கால்சியம் சத்து இதையெல்லாம் பூமியில் இருந்து எடுத்து வேர்களுக்கு சுலபமான வழியில் கொடுக்கிறது  இந்த வேம் வேம்மை எங்கே  பார்க்கலாம் இந்த வேம்மை எங்கே அதிகமாக பார்க்கலாம் என்றால் சோளம் அல்லது வெள்ளை சோளம் போட்ட வயல்களில் அந்த பயிர்கள் முடிந்த பின்பு அடுத்த பயிர்களில் விளைச்சல் நன்றாக இருக்கும் அதற்கு காரணம் சோளதின் வேர்களில் உள்ள இயற்கையில் உருவாக கூடிய இந்த பூஞ்சைகள் பூமியில் தங்கி அடுத்து பயிருக்கு வேண்டிய சத்துகளை இந்த வேம் பூஞ்சை கொட

நேரடி களப் பயிற்சி களைக்கொல்லி இல்லா வேளாண் நுட்பங்கள்

Agricultural techniques without herbicides ஈஷா விவசாய இயக்கம் வழங்கும். *களை செலவு இல்லா விவசாயம் சாத்தியமே!* நேரடி களப் பயிற்சி. களைக்கொல்லி இல்லா வேளாண் நுட்பங்கள். இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள். நடவு முதல் அறுவடை வரை களை செலவு இல்லா வேளாண் நுட்பங்கள். களை மேலாண்மையின் மூலம் மண்ணை வளப்படுத்தும் சாத்தியம். நீர் தேவையை குறைக்கும் களை மேலாண்மை. மஞ்சள், வாழை, கரும்பு பயிர்களில் இந்த நுட்பங்களை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பண்ணையில் நேரடி களப் பயிற்சி. நாள்: 03-01-21 ஞாயிறு நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. இடம்: வேளாண் சோலை, ஈஷா இயற்கை விவசாய பண்ணை, மேவானி கிராமம்,  கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம். முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: 83000 93777. உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக ரூபாய் 400 விதம் பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம். நஞ்சில்லா உணவிற்கும்.. நோயில்லா வாழ்விற்கும்..

இணையவழி நேரலை நிகழ்ச்சி - பலே பல பயிர் சாகுபடி

பலே பல பயிர் சாகுபடி முருகன், முன்னோடி விவசாயி, தஞ்சாவூர். தஞ்சாவூர் உச்சிமாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். 3 ஏக்கர் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் இவர், வாழை, கரும்பு, காய்கறிகள் எனப் பல பயிர் சாகுபடி செய்து வருகிறார். தான் விளைவிக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டி இவரே நேரடியாக விற்பனை செய்து வருகிறார். அதன் மூலம் மாதம் 60,000 ரூபாய் லாபம் ஈட்டி வருகிறார். அவரது அனுபவங்களை, வாசகர்களோடு பகிர்ந்துக்கொள்ள இருக்கிறார். அவரது பண்ணை மற்றும் செயல்பாடுகளை வாசகர்கள் காணும் வகையில் நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பசுமை விகடன். LINK You have to wait 15 seconds. Download Timer JavaScript needs to be enabled in order to be able to download. நேரடி விற்பனையில் மாதம் 60,000 லாபம்...'பலே' பயிர் சாகுபடி' என்ற கட்டுரை இந்த இதழில் அட்டைப்பட கட்டுரையாக இடம்பெறுள்ளது. அந்தத் தோட்டத்தை வாசகர்கள் நேரலையில் பார்வையிடலாம். 10.01.2021 அன்று மாலை 03 மணியிலிருந்து 05 மணிவரை தோட்டத்திலிருந்து நேரலை நிகழ்ச்சி நடைபெறும். அதில் கலந்துகொண்டு உங்கள் சந்தேகங்களைச் சம்பந்த

Online Webinar மாடுகளில் பெரியம்மை நோய் தாக்கத்தினால் ஏற்படும் தொடர் பாதிப்புகள்

Your Farm  *யுவர்பார்ம், எபிடி சக்தி டைரி மற்றும் சித்தர் ஐந்திணை பெருவாழ்வு ஆய்வு மையம்* இணைந்து நடத்தும் *கால்நடை பண்ணையாளர்களுடன் நேரடி கருத்துரை*(Webinar In Google Meet). *பேராசிரியர் புண்ணியமூர்த்தி* அவர்களின்  *மாடுகளில் பெரியம்மை நோய் தாக்கத்தினால் ஏற்படும் தொடர் பாதிப்புகள்*( online meeting is coming up on ) நாள்: *27-12-2020 (மாலை 07:00-07:30)* சந்திப்பில் பங்கேற்க Google Meet:👉  https://meet.google.com/rki-akmx-oup முன்பதிவிற்கு Google Form:👉 https://forms.gle/tMpVrqmuqL3qBLfL6  YouTubeல் காண: https://youtu.be/LEOV5gAcEM4

இணையதள கருத்தரங்கம் - இன்று ஒரு தொழில்நுட்பம்

ONLINE WEBINAR  *"இன்று ஒரு தொழில்நுட்பம்"* *Topic: 108*  *"Role of Bio-pesticides in Agriculture"*                  (on zoom) *Date : 26.12.2020 (Sat)* *Time : 11-00 am* *Presenter :* Shri K Rasu,  Former DDA, Chennai  You have to wait 15 seconds. Download Timer JavaScript needs to be enabled in order to be able to download.

அக்ரிசக்தியின் 30வது மின்னிதழ்

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 அக்ரிசக்தி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாதனைத் தமிழர் - ஜவகர் அலி, ரப்பர் தொழிலில் தேவைப்படும் கொள்கை மாற்றங்கள், கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய் - ஒரு பார்வை, நெற்பயிரில் துத்தநாக சத்துப் பற்றாக்குறையும் அதன் மேலாண்மை முறைகளும், சூரியகாந்தியில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், டிஜிட்டல் விவசாயம் தொடர், தென்னை நார்க்கழிவு மட்கு உரம் தயாரித்தல், மனித - விலங்கு மோதலை தடுக்கும் மியாவாக்கி முறை,  அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த ந

இயற்கை நிலக்கடலை சாகுபடி மேலாண்மை

Organic Groundnut Cultivation Management கடலை செடி  வெட்டுக்கிளி தாக்குதல்  இலைகள் ஓட்டை ஓட்டையாக இருந்தால் வெட்டுக்கிளி தாக்குதலாக இருக்கலாம் அல்லது கடலை இலைகளை கடிக்க கூடிய  சில பூச்சிகளோட  தாக்குதலாக இருக்கலாம். அந்த ஓட்டையை நாம் சரி பண்ணியாக வேண்டும் , இல்லையெனில் அது வைரஸ் தாக்குதல் அளவுக்கு கொண்டுபோய்விடும் . இதனால் பூக்காது அதனால் காய்கள் வராது. இதற்க்கு கரைசல்கள் எதாவது கொடுக்கலாம் வேப்பெண்ணை கரைசல் , ஐந்திலை , பத்திலை  கஷாயம் , அல்லது அக்னி அஸ்திரம் , கற்பூரக்கரைசலை எட்டு நாளைக்கு ஒரு முறை தெளிக்கலாம் கொஞ்சம் செலவானாலும் கடலை செடிக்கு இதை செய்வது முக்கியம்  பூஞ்சை தாக்குதல்  கடலை செடியின் இலைகள் மஞ்சளும் பச்சையுமாக இருந்தால் பூஞ்சாண தாக்குதலாக இருக்கலாம் இது அடுத்த கட்டமாக சிகப்பு புள்ளி  வரலாம் அல்லது கருப்பு புள்ளி வரலாம் இதுவும் வேர் மற்றும் காய் வளர்ச்சியை பாதிக்கும் இதற்க்கு சூடோமோனஸ் மற்றும் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இது இரண்டையும் 10 லிட்டருக்கு ஐம்பது ஐம்பது மில்லி கலந்து தெளிக்கலாம். இரவை பயிர் தரைவழியும் கொடுக்க முடியும்மென்றால் ஒவ்வொரு லிட்டர் தண்ணீரில் கலந்து தரைவழி ஊற

இயற்கை அவரை விவசாயம் - அவரை செடியில் காய்ப்புழு , அசுவினி மற்றும் கதிர் நாவாய் பூச்சி கட்டுப்பாடு

  Cultivation of Organic beans - control of nematode aphid and radish beetle pest in bean plant பட்டை அவரை செடியில் காய்ப்புழு, அசுவினி மற்றும் நாவாய்(ரப்பர் போன்று பிஞ்சுகள் உள்ளது) போன்றவற்றில் இருந்து காக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளது.  இயற்கைவழி தீர்வு  காய்ப்புழுவை கட்டுப்படுத்த   அக்னி அஸ்த்திரம் அல்லது கற்பூரக்கரைசல் தெளிப்பது நல்லபலன்கள்தரும் அஷ்வினி அல்லது கதிர்நாவாய் பூச்சியென்றால் வேப்பஎண்ணெய் கரைசல், பொன்னீம் , வசம்பு கரைசல் , ஐந்திலை கரைசல் ,பத்தில்லை கரைசல் , இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் ,அக்னி அஸ்த்திரம் மற்றும்  கற்பூரக்கரைசல் இதில் எதுவேண்டுமானாலும் பயன்படுத்தலாம் . இதில் அஸ்வினிக்கு கொஞ்சம் அழுத்தமாக அடிக்கவேண்டும் ஏன்னெனில் அஸ்வினி பூச்சியின் தாக்குதல் கடுமையாக இருக்கும் . உதாரணமா அவரைச்செடியில நுனியில காம்பில் அஸ்வினி பூச்சி இருக்கறதோட  அளவு கொஞ்சமாக இருக்கிறதென்றால் போக போக அதன் அளவு அதிகமாகும் ஒன்றின் மேல் ஓன்று இருக்கும் முதல்வரிசை கருப்பாகவும் அதன்மேல் இனொருவரிசை உட்காந்து , அதன்மேலும் ஒருவரிசை இருக்கும் இப்படி அஸ்வினி பூச்சி அடுக்கு அடுக்காய் இருக்கும் எனவே

மாட்டு சந்தை - மாடு விற்பனை டிசம்பர் மாதம் - 2

மாட்டு சந்தை குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.  மாட்டு சந்தை 24.12.2020 Update 1)  தென்காசி மாவட்டத்திற்குள் மட்டும் குழந்தை பாலுக்காக நாட்டு மாடு வேண்டுவோர் உடனடியாக தொடர்பு கொள்ளவும்... பால்: கிடெரி கன்றுக்கு போக ஒரு வேளைக்கு 2லி Call: 8610133616 2) விற்பனைக்கு - அழகிய காங்கேயம் ஜோடி காளைக்கன்று தொடர்பு கொள்ளவும் - 9943346684 ,9360039419 நல்ல குணம் , சுழி சுத்தம் , ( அனுசரித்து தரப்படும் )... விலை 35000... மேட்டூர் , சேலம் மாவட்டம் . 3) புதிய வரவு விற்பனைக்கு அழகிய காராம் பசு கிடாரி...9943716311..9626616311 4) நாட்டு மாடு இன்னும் 15 நாட்களில் கன்று ஈன்று விடும் .8344613607 5) புது வரவு: 4 ஆம் ஈத்து காரி மாடு,நல்ல குணம்,சுழி சுத்தம்,அதிக கறவை தரும்(நாள் ஒன்றுக்கு 6 லிட்டர்),கால் அனைக்க தேவையில்லை,தொடர்புக்கு:7904479681,9677815