Skip to main content

Posts

Showing posts with the label தென்னை கேள்வி - பதில்

12 வருடம் ஆன தென்னை மரத்திற்கு என்ன ஆர்கானிக் உரம் வைக்களாம்.

12 வருடம் ஆன தென்னை மரத்திற்கு என்ன ஆர்கானிக் உரம் வைக்களாம். காய்கள் மிகவும் கம்மியாகவே இருக்கின்றன. குறும்பல் பிடிக்கவே இல்லை. பதில் -1 சானி ஊரம் கோழி உரம் மற்றும் கொழுஞ்சி இலை மற்றும் மரம் இலைகள் வைத்து 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பதில் -2 எருகன் இலை இடவும். பஞ்சகவ்யம். ஒரு லிட்டர் தண்ணீர் மூன்று லிட்டர் கலந்து வேரில் கட்டவும் பதில் -3 பதில் -4 சானம் 20 கிலோ அசோஸ்பைரில்லம் அரை கிலோ பாஸ்போபேக்டிரியா அரை கிலோ எருக்கு இலை மற்றும் தென்னைமர கழிவுகளை அரைவட்ட பாத்தி எடுத்து உறம் வைத்து நீர் பாய்ச்சுங்கள் பதில் -5 100grams seaweed gel மரத்தில் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் கிணப் பாரையால் குழிஎடுத்து போடவும்

தென்னை கேள்வி - பதில்

நண்பர்கள் யாரவ்து சொல்லுங்கள் எதற்கு எப்படி இழைகள் நொடிந்து காணப்படுகிறது..மேலும் ஒரு மரத்தில் எப்போது பூ விட்டுருகிறது. இப்ப நல்ல காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும்..  பதில் - 1  சார் இதுகுறித்து நம்ம வேளாண்மை குரூப்ல பல பதிவுகள் இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் பதிவு போடும் முன்பு தென்னை குறித்த முந்திய பதிவுகளை பார்க்கலாம். குருத்து வண்டு உள்ளது. மணல் குருத்தில் போடலாம். பச்சை சாணி அல்லது குப்பை மேடு அருகில் இல்லாது இருப்பது நல்லது அல்லது சாணிகுப்பை மக்கிய பின்னர் இடவேண்டும் போதிய அளவு தண்ணீர் இல்லை. மரத்திற்க்கு 60-80 லிட் தண்ணீர் தினசரி தேவை. மரத்தை சுற்றி எருக்கு போடவும். நீர் பற்றாகுறை எனில் சோற்று கற்றாழை இர்ணடு , பப்பாளி ஒன்று வைக்கலாம். ஒரு மரத்திதை சுற்றி எருக்கை, பப்பாளி, சோற்று கற்றாழை, சப்பாத்தி கள்ளி மரத்தை சுற்றி மூடாக்கு தண்ணீர் 60 லிட் போதுமானது. பதில் - 2 முதல் பாளை இப்படி த்தான் இருக்கும் அடுத்த அடுத்த பாளை நல்லதாக இருக்கும் தண்ணீர் அளவை கூட்டவும்  பதில் - 3  தண்ணீர் பாசனத்தை கூட்டவும்.. காண்டாமிருகம் வண்டு தாக்குதல் போல் தெரிகிறது. எனவே, ரசக்கற்பூரம்...