Skip to main content

Posts

Showing posts with the label மாடு

கறவை மாடுகளில் ஏற்படும் கருச் சிதைவு நோய் - ஒரு கண்ணோட்டம்

Miscarriage in dairy cows - an overview கன்று ஈனும் தேதிக்கு முன்பாகவே முழுமையாக வளர்ச்சியடையாத இறந்துப்போன அல்லது உயிரோடிருக்கும் கன்றினை வீசிவிடுதல் . முதல் மற்றும் இரண்டாவது மாதம் கர்ப்பகாலத்தில் உண்டாகும் கருச்சிதைவு பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை . மாடுகள் வழக்கம் போல் வலும்புக்கான அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கிவிடும் . ஆதலால் 120 நாட்கள் முதல் 270 நாட்களுக்குள் ஏற்படும் கருச்சிதைவு அல்லது கன்று வீச்சு பொதுவாக அனைவராலும் எளிதில் கண்டறிப்படுகிறது . மாட்டுப் பண்ணைகளில் ஒன்று , முதல் இரண்டு சதவிகிதக் கருச்சிதைவு பெரும்பாலும் பெரிதாக எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை . ஆனால் , அதுவே ஐந்து விகிதத்திற்கு மேல் உண்டாகுமேயானால் எச்சரிக்கைக்கான அறிகுறி கருதி தகுந்த பாதுகாப்பு மற்றும் தடுப்பு வழிமுறைகளை உடனடியாக தகுந்த கால்நடை மருத்துவம் மூலம் செயல்படுத்துவது மிக முக்கியமாகும் .  நோய்க் காரணிகள்:   கருச்சிதைவு காரணிகள் இருவகைப் படும் . ஒன்று தொற்று காரணிகள் , மற்ரொண்டு தொற்று அல்லது காரணிகள் . தொற்று காரணிகளால் ஏற்படும் கருச்சிதைவு இது என பத்து சதவிகிததிற்கு மேல் கருச்சிதை...

சத்துள்ள பால் பெற மாடுகளுக்கு அளிக்க வேண்டிய தீவனங்கள்

Feeds to be fed to cows to get nutritious milk பொதுவாக பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன. இதில் புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும்.   இவற்றை தவிர கொழுப்பின் அளவைக்கொண்டு பாலுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது.  பொதுவாக, பசும்பாலில் 3.5 சதவீத கொழுப்பும், 8.5 சதவீத கொழுப்பற்ற திடப்பொருட்களும் இருக்க வேண்டும். பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை சில வழிகளில் அதிகரிக்கலாம். கொழுப்பற்ற திடப்பொருளை அதிகரிக்க வழிகள்   1 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்புத் தீவனம் கொடுப்பது மற்றும் கலப்புத் தீவனத்தில் மாவுச்சத்துக்களின் அளவை அதிகரிக்கும் நிலையில் பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.  12 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பால் கறக்க வேண்டும். மடியில் பாலை சேர விடக்கூடாது. சினை மாடுகளுக்கு 8 மாத சினைக்காலம் முதல் 2 கிலோ அடர்தீவனம் கொடுத்தால் பாலின் உற்பத்தியும், கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும். கொழுப்பு சத்து   சில மாடுகளின் பாலில் குறைந்த அளவு ...

புதிய கறவை மாடு பண்ணைக்கு வாங்குவதும் சேர்ப்பதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

புதிதாக வாங்கப்படும் கறவை மாடுகளின் மூலம் பண்ணைக்குள் நோய் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது. நல்ல தரமான ஆரோக்கியமான கறவை மாடுகளை தேர்வு செய்து ,உரிய பண்ணை மேலாண்மையை  கடைபிடிப்பதன் மூலம் நோய் தாக்குதல்களைத் தவிர்க்கலாம்.வயதினை கணக்கிட்டு கறவை மாடுகள் வாங்குவதும் அவசியமாகும். புதிதாக கறவை மாடு வாங்கும்போது அப்பகுதியின் தட்ப வெப்ப நிலை, பசுந்தீவனம் மற்றும் பால் விற்பனை வாய்ப்புகள் ஆகியவற்றை மனதில் கொண்டு வாங்க வேண்டும்.தமது பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் அல்லது வேளாண் அறிவியல் நிலைய ஆலோசனை பெற்ற பின்னர் எந்த இனத்தை வாங்கலாம் என்று முடிவு செய்யலாம். காசநோய்,ஜோன்ஸ் நோய்,கன்று வீச்சு நோய் போன்ற நோய் கண்டறியும் சோதனை செய்யப்படும்,அரசு மற்றும் தனியார் பண்ணைகளில் மாடு வாங்குவது நன்று. மேற்கூறிய முறையில் மாடு வாங்க இயலாதவர்கள் கிராம புறங்களில் விற்பவர் வீடுகளுக்கே நேரடியாக சென்று வாங்குவது சிறப்பு. சந்தை மற்றும் திருவிழாக்களில் மாடு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மாடு வாங்கும்போது கணிக்க வேண்டியவை  கண்கள்: பசுவின் கண்கள் பளபளப்பாகவும் ,தெளிவாகவும்,நீர் வடியாமலும், மருக்கள் இல்லாமலும் ...