முருங்கை ஒரு கோடைகால பயிர். இது வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. மேலும், வறட்சியைத் தாங்கி வளர்வதுடன் அதிக விளைச்சலும் கொடுக்கக்கூடியது. பூக்கும் தருணத்தில் மழை இருந்தால் விளைச்சல் மிகவும் பாதிக்கப் படும். இப்பயிருக்கு நல்ல வளமான வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் மண் நிலம் சாகுபடிக்கு ஏற்றவை. முருங்கை இரண்டு முறையில் பயிர் பெருக்கம் செய்யப் படுகிறது. பல்லாண்டு முருங்கை தண்டு போத்து மூலமாகவும், செடி முருங்கை விதைகள் மூலமாகவும் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. செடி முருங்கை கோடை காலத்தில் பூப்பதற்கு ஏற்ப செப்டம்பர் – அக்டோபர் (புரட்டாசி – ஐப்பசி) மாதங்களில் பயிரிடுவது நல்லது. மேலும், ஜுலை (ஆடிப்பட்டம்) மாதத்திலும் விதைகளை நடவு செய்யலாம். செடி முருங்கையில் நன்கு முற்றிய காய்களை அறுவடை செய்து, காய வைத்து விதை களை பிரித்தெடுக்க வேண்டும். தரமான விதைகளை தேர்வு செய்து சுமார் 15 செ.மீ நீளமும், 10 செ.மீ அகலமும் உள்ள மக்கும் பைகளில் விதைத்து நாற்றுக்களாக வளர்த்து ஒரு மாதம் முடிந்த பின்பு நடவினை மேற்கொள்ளலாம். வழக்கமான நீர் மேலாண்மை, களை மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்