Skip to main content

Posts

Showing posts with the label பஞ்சகாவ்யா

பஞ்சகாவ்யா

பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடிய இயற்கை ஊட்டச் சத்து உரமாக விளங்குவது பஞ்சகவ்யம். இதைக் கொண்டு பயிர்களையும், ம ண்ணின் தன்மையையும் மேம்படுத்தலாம். உணவுப் பயிர்களில் பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கை ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் கேடு விளைவிப்பதாக உள்ளன. இதில் இருந்து மீளும் வகையில் விவசாயிகளுக்கு இயற்கை வழியாகவும், பசுமாட்டின் வாயிலாகவும் கிடைக்கப் பெரும் பஞ்சகவ்யம் பயனுள்ளதாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சகவ்யம் தயாரிக்கத் தேவையானவை: 1.பசுவின் புது சாணம் 5 கிலோ. 2. பசுவின் கோமியம் 3 லிட்டர், 3. பசு மாட்டுப் பால் 2 லிட்டர், 4. பசுந்தயிர் 2 லிட்டர், 5. பசு நெய் 1 லிட்டர், 6. கரும்புச் சாறு 3 லிட்டர், 7. இளநீர் 2 லிட்டர், 8. வாழைப்பழம் 12, 9. கள் (கிடைக்கும் இடங்களில்) 2 லிட்டர் கரும்புச் சாறு கிடைக்கவில்லையென்றால் 500 கிராம் நாட்டுச் சர்க்கரையுடன் 200 கிராம் ஈஸ்டு சேர்த்து 3 லிட்டர் நீரில் ஊற வைத்தால் 30 நிமிடங்களில் அதே தன்மையுடைய கரைசல் கிடைக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை: பசுவின் புது சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை நன்கு கல...