Skip to main content

Posts

Showing posts with the label களைகள்

களைகள் என்பது என்ன-2

வேர்களை வைத்து களைகள் பற்றி சென்ற தொடரில் எனக்கு தெரிந்த வரை பதிவு செய்தேன். விடுபட்ட ஒரு செய்தி. ஆழமாக வேர் செல்லும் களைகள் இன்னுமொரு அற்புதத்தை அடி மண்ணில் நடத்துகிறது.   களைகளின் வேர் பகுதி அந்த ஆழமான பகுதியில் சிதைந்து மக்கு நிலையை உருவாக்குறது என்பது தான் அந்த செய்தி. வளர்ந்த களைகள் மண்ணின் கலக்கும் போது அதில் உள்ள சத்துக்களை மண்ணில் கலந்து விடுகிறது என பார்த்தோம். இது மண்ணை வளமாக்குகிறது. இந்த களை செடிகள் முளைத்து நான்கு இலை நிலையில் மண்ணில் கலந்தால் அது நுண்ணுயிர்களுக்கு பிடித்தமான உணவாகிறது. இது நுண்ணுயிர்கள் பெருக்கத்தை அதிகரிக்கும். அதற்கு தான் அந்த காலத்தில் "போக்கு போக உழவு என சொல்லுவார்கள் ". அதாவது களைகள் முளைக்க,முளைக்க உழவு செய்வது. இதில் இரண்டு நன்மைகள். ஒன்று மேலே சொன்னது போல நுண்ணுயிர் பெருக்கம். இரண்டு களைகளின் விதைகள் அழிவது மூலம் களை கட்டுப்பாட்டில் இருக்கும். இங்கே இன்னுமொரு ஆச்சரியமான செய்தி. களைகளின் சந்ததி தொடர இயற்கை அதற்கு எப்படி உதவுகிறது என பாருங்கள். ஒருமுறை உருவாகும் விதைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் முளைப்பதில்லையாம். அந்த விதைகள் கொஞ்சம் கொஞ்சம...

களைகள் என்பது என்ன - 1

பயிர்களுக்கு நட்பா, மாற்றா? களைகள் மண்ணின் மருத்துவர் என சொல்லுவார்கள். ஏன், எப்படி?! உங்கள் வயலில் என்ன என்ன களைகள் வளர்ந்திருக்கிறது, பக்கத்து தோட்டத்தில் என்ன என்ன வளர்ந்து வருகிறது என பொறுமையுடன் கவனியுங்கள். சில களைகள் பொதுவானதாக இருக்கும். ஆனால் உங்கள் வயலில் இருக்கும் மற்ற களைகள், அடுத்த வயலில் உள்ள களைகளுக்கு மாறுபடும். ஏன் ஒரு வயலுக்கும், அடுத்த வயலுக்கும் களைகள் வித்தியாசப் படுகிறது என யோசித்தது உண்டா? பொதுவாக மண்ணை மேம்படுத்தும் வகையில் தான் களைகள் தோன்றும். எந்த சத்துக்கள் குறைந்து இருக்கிறதோ அதை ஈடு செய்யும் வகையில் தான் களைகள் தோன்றும். அடுத்து திரு அரசூர் செல்வம் அவர்கள் ஒருமுறை சொன்னதை கேட்டிருக்கிறேன். களைகளை வேரின் அமைப்பை கொண்டும் பகுத்து பார்க்கலாம். 1. ஆணிவேர் உள்ளவைகள். 2. கிளைவேர்கள் உள்ளது. 3. இந்த இரண்டும் அல்லாத சல்லிவேர்களை கொண்டதாக இருக்கும். கவனித்துப் பாருங்கள். சில வயல்களில் ஆணி வேர் களைகள் அதிகம் தோன்றும். இதன் வேர்கள் அதிக ஆழம் செல்லக் கூடியது. சில வயல்களில் ஆணி வேர் களைகளை பார்க்க இயலாது. கிளை வேர்கள் உடைய களைகள் அதிகம் இருக்கும். சில வயல்களில் இந்த இர...