Skip to main content

Posts

Showing posts from January, 2021

சத்துள்ள பால் பெற மாடுகளுக்கு அளிக்க வேண்டிய தீவனங்கள்

Feeds to be fed to cows to get nutritious milk பொதுவாக பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன. இதில் புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும்.   இவற்றை தவிர கொழுப்பின் அளவைக்கொண்டு பாலுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது.  பொதுவாக, பசும்பாலில் 3.5 சதவீத கொழுப்பும், 8.5 சதவீத கொழுப்பற்ற திடப்பொருட்களும் இருக்க வேண்டும். பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை சில வழிகளில் அதிகரிக்கலாம். கொழுப்பற்ற திடப்பொருளை அதிகரிக்க வழிகள்   1 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்புத் தீவனம் கொடுப்பது மற்றும் கலப்புத் தீவனத்தில் மாவுச்சத்துக்களின் அளவை அதிகரிக்கும் நிலையில் பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.  12 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பால் கறக்க வேண்டும். மடியில் பாலை சேர விடக்கூடாது. சினை மாடுகளுக்கு 8 மாத சினைக்காலம் முதல் 2 கிலோ அடர்தீவனம் கொடுத்தால் பாலின் உற்பத்தியும், கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும். கொழுப்பு சத்து   சில மாடுகளின் பாலில் குறைந்த அளவு கொழுப்பு சத்து இருப்பது அதன் மரபு பண்பா

துளசி செடி - நீங்கள் நல்ல வருமானத்தை ஈட்டலாம்

Basil - You can earn a good income மூலிகை செடியின் ராணி என்று அழைக்கப்படுகிறது. பல பயன்பாடுகளுக்காக பல நூற்றாண்டுகளாக பயிர் செய்யப்பட்டு வருகிறது .கிராம்பை போன்று இதிலும் யூஜெனோல்என்னை இருக்கிறது அதை விட 70 சதவீதம் அதிகம் இருக்கிறது . துளசி இலைகள் பல மருத்துவ பயன்பாட்டிற்க்காக அதிகம் தேவைபடுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் துளசி வளர்க்கப்படுகிறது . இந்த துளசி செடியை மருந்துக்காக பயிர் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கிறது . குறைந்த நேரம் குறைந்த செலவு அதிக லாபம் எடுக்கலாம்  மூன்றே மாதத்தில் 15 முதல் 20000 வரை செலவு செய்து அதிகமாக  லாபம் எடுக்க முடியும்   மருந்து மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு தேவை என்பதால் துளசியின் தேவை எப்பொழுதுமே இருந்துகொண்டிருக்கும் . ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயிர் செய்யப்படுகிறது . செடியாகவும் அல்லது நாற்றாகவும் பயிர்செய்யப்படுகிறது . ஒரு ஹெக்ட்டருக்கு 10 கிலோ விதை தேவைப்படும் துளசி இயற்கையிலே மருத்துவகுணம் இருப்பதால் பூச்சி நலிதக்கம் அதிகம் இருக்காது . நீங்கள் நல்ல வருமானத்தை ஈட்டலாம் துளசி செடியில் இரண்டு விதமாக வருமானம் ஈட்டலாம்  ஓன்று விதை மற்றோன்று இலை

கீரையில் வெட்டுக்கிளி மற்றும் பூச்சி கட்டுப்பாடு

 Locust and pest control in lettuce கீரையை பொறுத்தவரை விற்பனை பொருள் இலைகள் அப்ப அந்த இலைகள் ஓட்டைகள் இல்லாமல் எந்த ஒரு பூச்சி தாக்குதல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் அதை விற்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் . வெட்டுக்கிளி கீரையோட இலைகளை ஓட்டை விழுவதற்கு முக்கிய கரணம் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள். அதை வரவிடாமல் முதலில் தடுக்கவேண்டும் இரண்டாவது சாதாரண பூச்சிகள் தாக்குதல் இருக்கும்அதை கட்டுப்படுத்துவது  மூணாவது தேவையான இடுபொருட்கள் கொடுப்பது இந்த மூன்றும்தான் அடிப்படை . சரியான இடுபொருட்கள் கொடுப்பதால் ஒரே மாதிரி உயரம் மற்றும் அளவு கொண்டுவரமுடியும் அப்படி செய்வதற்கு தரை அதிகமான நைட்ரஜன் சத்துக்களோடும் மற்றும் சாம்பல் சத்து தேவை அது இருந்தால் பொதுவான வளர்ச்சி நன்றாக இருக்கும்  கீரைகளில் ஓட்டை வெட்டுகிளிகளாலும் பறக்க கூடிய பூச்சிகளாலும் வரக்கூடியது இதற்கு இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் பயன்படுத்துவது நல்ல பலன் தரும். இதில் இரண்டு நன்மை உள்ளது அதோட காட்டத்தன்மை பூச்சிகளை அண்டவிடாது . மற்றும் நாளைக்கே இதை விற்பனை செய்யவேண்டும் என்றால் அதோட தாக்கம் இதில் இருக்காது . வேப்பெண்ணை கரைசல் கொடுக்க

அகத்தி மற்றும் வேலி மசால் செடி விதை நேர்த்தி செய்தல்

Agathi and Veli Masaal Seed Treatment அகத்தியில் விதை நேர்த்தி அகத்தியில் சாதாரணமாக விதை நேர்த்தி செய்யலாம் . அகத்தி விதைகளை ஒரு பேப்பர்ல போட்டுவிட்டு பாதிக்கப்பட்ட விதைகளை எடுத்து விட வேண்டும் பூஞ்சை வளைந்தது நெளிந்தது உடைந்தது எடுத்து விடவேண்டும்.  பின்பு நீர் ஊற்றி கழுவவேண்டும் கழுவிய ஈரத்தோடு 10 கிராம் அசோஸ் பயிரில்லம் , பாஸ்போ பாக்டீரியா 30 கிராம் போட்டு அதோடு தேவையான அளவு வடி கட்டிய அரிசிக்கஞ்சியை போட்டு மெதுவா பெரட்டி காயவைக்க வேண்டும். வேலி மசால் விதை நேர்த்தி வேலி மசால் விதையை 5 நிமிசம் இளம் பதத்தில்  சூடு உள்ள நீரில் ஊறவைக்க வேண்டும், பின்பு அதை எடுத்து சாதாரண தண்ணீரில் குறைந்தபச்சம் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊற வைக்கும் பொழுது 10 கிராம் அசோஸ் பயிரில்லம் , பாஸ்போ பாக்டீரியா 30 கிராம் போட்டு ஊறவைக்கலாம் . ஒரு 2 மணிநேரம் நிழலில் வைத்து பின்பு வடிகட்டி விதைக்கலாம் . முளைப்பு திறன் நன்றாக இருக்கும்  ஆரம்பத்தில் இரண்டு விதைகளையும் பயிர் செய்யும்போது அடி உரம் சரியாக இருக்கவேண்டும் . அடி உரம் இல்லையெனில் இடுபொருட்கள் சரியான முறையில் தெளித்து கொண்டு வரவேண்டும் .

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2021 ஆம் ஆண்டில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது .

Tamil Nadu Agricultural University has introduced new varieties as Pongal gift in the year 2021. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2021 ஆம் ஆண்டில் பொங்கல் பரிசாக புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது . நெல் - கோ 54 நெல் - ஏடிடீ 55 நெல் - டிஆர்ஒய் 4 கேழ்வரகு ஏடிஎல் 1 வரகு ஏடிஎல் 1 உளுந்து கோ 7 விஎம்ஆர் (கத்திரி) 2 பாலில்லா பழா பிஎல்ஆர் 3 குடம்புள்ளி பிபிஐ(கு) 1 விளாம்பழம் டபில்யுஎப்எல் 3 மலைவேம்பு எம்டிபி 3 வேளாண்மை துறையில் 6 ரகங்களும் தோட்டக்கலை துறையில் நான்கு ரகங்களும் மற்றும் வனவியல் துறையில் 1 ரகங்களும் வெளியிடப்பட்டுயிருக்கின்றன . மூன்று நெல் ரகங்கள்  கோ 54  சொர்ணவாரி / கார் /குருவை /மற்றும் நவரை பட்டத்திற்கு ஏற்றது 110 முதல் 115 வயது கொண்டது சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 4600 கிலோ சராசரியாக கொடுக்கக்கூடியது பூச்சி மற்றும் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு தன்மை கொண்டது. ADT 55  கார் மற்றும் குருவை பட்டத்திற்கு ஏற்றது 110 முதல் 115 வயது கொண்டது சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 6000 கிலோ வரை சராசரியாக எடுக்கலாம் சம்பா பருவத்தில் திருநெல்வேலி, தென்காசி, காவிரி டெல்டா மண்டலம்பகுதிகளில் ஏற்படும் பாக்

விவசாயத்தில் சோறு வடித்த கஞ்சியின் பயன்பாடுகள் மற்றும் அதன் பயன்கள் என்ன

What are the uses of Rice porridge in agriculture and its benefits? விதை நேர்த்தி வடிகட்டிய கஞ்சியை பொறுத்தவரை நாலா ஒட்டும் திரவம் . நாம் செய்யக்கூடிய விதை நேர்த்தியை உயிர் உங்களோட அதையும் சேர்த்து கொடுக்கும் போது அதனுடன் ஒட்டும் அதனாலதான் அது ஒரு ஒட்டும் திரவமாக இருக்கு .மிக குறைந்த விலையில் சிறப்பாக செயல் படக்கூடிய திரவம்  Sooty Mould விதை நேர்த்தியை தவிர்த்து பயன்படக்கூடிய இடங்கள் என்று பார்த்தால் . இத்திரவம் ஒட்டி காய்ந்து ஒட்டி விழக்கூடியது . பொதுவா இலைகளில் ஒட்டி இருக்கும் பூஞ்சாண தொற்று மற்றும் வெள்ளை ஈ மீது தெளித்தால் அரிசி கஞ்சி காய்ந்து இவற்றை எடுத்துகொண்டு கிழே விழ வாய்ப்புள்ளது . முக்கியமா வெள்ளை ஈ தாக்குதல் முடிந்தவுடன் கருப்பாக இருக்கும் "sooty mould " என்று சொல்வார்கள் அதை எடுக்க இதை தெளிக்கலாம்.இப்படி இலைகள் தண்டுகள் மேல் உள்ள பிரச்சனைகளை தண்ணீர் ஊற்றி கழுவிவிட முடியாது இப்படி அடித்து விட்டால் நல்ல பலன் இருக்கும் .அரிசி வடிகட்டிய கஞ்சி நல்ல வளர்ச்சியூக்கியும் கூட , சாதத்தில் இருக்கக்கூடிய அதிகமான கார்போ ஹைட்ரட்  கலந்திருக்க வாய்ப்புள்ளது இதை நேரடியாக கொடுத்தால

பறவை காய்ச்சல் நோய் வந்தால் என்ன செய்வது

What to do if bird flu comes கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் பறவை காய்ச்சலும் நோயும் தாக்க ஆரம்பித்துள்ளது . தற்போது வரை பஞ்சாப் ,ராஜஸ்தான் , கேரளா போன்ற மாநிலங்கள் பறவை காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . ராஜஸ்தானில் மயில்கள் காகங்கள் திடீரென இறந்ததற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது .  What is bird flu? இந்தவகை காய்ச்சல் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா A வகை வைரசால் ஏற்படுகிறது . இதனால் பலவகையான பறவைகள் பாதிக்கப்படுகின்றன காட்டில் வாழக்கூடிய பறவைகள் , வான் கோழி , காடை , கோழி மற்றும் வாத்துகள் இநோய்யால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன  எப்படி பரவுகின்றது  பறவைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறைவைகளிடமிருந்து வெளிப்படும் எச்சில் , மலம்  போன்றவற்றால் எளிதில் பரவும்  மேலும் நன்றாக உள்ள பறவைகளுக்கு  நோய் பாதிக்கப்பட்ட உணவு , நீர் , மற்றும் பொருட்கள் மூலமும் பரவும் . இந்த நோய் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. ஆனால், பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் பணிபுரியும் நபர்கள் முறையான  சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் இதை தடுக்கலாம் .   பண்ணையில் பின்பற்ற வேண்டிய வழி முறைக

காய்கறிப் பயிர்கள் பயிர் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Things to look out for when growing vegetable crops வயல் தயாரிப்பு 1.பசுந்தாள் உரப்பயிர் செய்து பூக்கும் நிலையில் மடக்கி உழுது விடுங்கள். 2. மக்கிய தொழு உரம் 7டன் அளவுக்கு ஒரு ஏக்கருக்கு கொடுங்கள். 3. டிரைக்கோடிர்மா விரிடி 2 கிலோவை தொழு உரத்தோடு கலந்து கொடுப்பது அவசியம். இது பயிர் பாதுகாப்பில் பூசானங்களின் தாக்குதலை தடுக்கும். 4. மண் புழுதி படும் படியாக உழவு செய்வது அவசியம். 5. சொட்டுநீர் பாசனம் அமைப்பது செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும். 6. 4' ஒரு பார் அமைத்து கொள்வது அறுவடை செய்ய வசதியாக இருக்கும். நாற்றுகள் நடவு 1. நல்ல தரமான விளைச்சல் கொடுக்கும் ரகங்களை தேர்வு செய்வது நல்லது. 2. வியாபார நோக்கில் பயிர் செய்யும் போது ஹைபிரீட் விதைகளை பயன்படுத்துங்கள். 3. சந்தை வாய்ப்பு உள்ள ரகங்களை தேர்வு செய்வது நல்லது. 4. 28 நாள் வயதுடைய நாற்றுகள் நடவு செய்யுங்கள். 5. கத்தரிக்கு 4'×4' , தக்காளி 2 1/2'×2 1/2', வெண்டை, மிளகாய் 1 1/2'×1 1/2' என்ற இடைவெளி அவசியம். 6. நாற்றுகளை பஞ்சகவியம், அல்லது ஜீவாமிர்தம் கொண்டு விதை நேர்த்தி செய்வது நடவு செய்யுங்கள். 7. தக்காளி

மானாவாரி மக்காசோளம் சாகுபடி

Rainfed Maize Cultivation மானாவாரியாக இருக்கக்கூடிய பெருவாரியான நிலப்பரப்புகளில் மக்காச்சோளம் எளிமையாக  பயிரிடப்படுகிறது . இது மானாவாரி நிலங்களில் நீண்டகாலமா வறட்சியை இருக்கிற நிலங்களில் கொஞ்சம் மழை பெய்தாலும் உழுது நமக்காகவும் நம் கால்நடைகளுக்காகவும் வளர்க்கக்கூடிய பயிர் .மானாவாரி நிலத்தில் குறைந்தபச்சம் ஒரு ஹெக்ட்ர்க்கு இரண்டு டன் சோளம் கிடைக்கவேண்டும் . ஒரு ஏக்கர்ன்னு எடுத்துக்கிட்டா கூட 800 கிலோ கிடைக்கவேண்டும் . சோளத்தட்டை 3500 முதல் 4500 கிலோவாரை கிடைக்கவேண்டும் .  மக்காசோள  விதை நேர்த்தி பொதுவா சில விவசாயிகள் சோள விதையை வாங்கிட்டு வந்து சோதனை செய்யாமல் நிலத்தை உழுது விதைத்துவிடுவார்கள் , இது தவறு . முதலில் என்ன செய்யவேண்டும் , வாங்கி வரும் விதையை பரப்பி வைத்து சரியில்லாத விதையை நீக்கவேண்டும் முக்கியமா பூஞ்சாணம் உள்ளது , பாதிக்கப்பட்டது போன்ற விதைகளை நீக்கிவிட வேண்டும் . ஒரு ஏக்கருக்கு 6 கிலோ சோள விதை தேவைப்படும் கிலோவிற்க்கு பவுடராக இருந்தால் 20 கிராம் சூடோமோனஸ் 200 கிராம் அசோஸ்பயிரில்லம் 50 கிராம் இந்த கலவையில் கலந்து இதனுடன் அரிசிக்கஞ்சி கலந்து ( கஞ்சி கலப்பதால் இந்த பொருட்கள்

தென்னை மரக்கன்று நடும் முறை

Coconut sapling planting method   ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இருக்ககூடிய மரம் இருக்கவேண்டிய மரம்மும் கூட , இந்த தென்னை மரக்கன்றை எப்படி நடுவது என்று பார்ப்போம் . இந்த தென்னை மரத்தோட தூர் பகுதி ஒரு ஆண்டிற்க்கு ஒரு கண அடி வரை வளர்ச்சி அடையும் . அப்போது , கிட்டத்தட்ட அய்ந்தாயிரம் முதல் ஆறாயிரம் வரை சல்லி வேர்கள் தோன்றும் அவை பக்கவாட்டாக சென்று மரத்தை தாங்கி பிடிக்கும். தென்னை மரக்கன்றை எப்படி நடுவது முதலில் 3*3*3 அடிக்கு குழி எடுக்கவேண்டும் மறுநாள் முக்கால் குழி  அளவிற்க்கு மண்ணை மறுபடியும் இழுத்துவிட வேண்டும் பின்பு காலில் கொஞ்சம் மிதித்து விடுங்கள் . பிறகு நடுப்பகுதியில் நெத்தை வைக்கவேண்டும் , கன்றோட பக்கவாட்டு பகுதியில் மண்ணை கொஞ்சம் இழுத்துவிட்டு அதில் குறைந்தபச்சம் 5 கிலோ மக்குண தொழு உரம் , 20 கிராம் சூடோமோனஸ் இரண்டையும் கலந்து சுற்றி வரை போட்டுவிடுங்கள் . உரம் தொழு உரம் கிடைக்கவில்லையெனில் அசோஸ்பயிரில்லம் 200 கிராம் , பாஸ்போபாக்டீரியா 100 கிராம் இதோட சூடோமோனஸ் கலந்து குழியோட எல்லா பகுதிகளிலும் போட்டு விட்டு மிச்சமண்ணை இழுத்து தென்னை கன்று உயரமாகவும் அதிலிருந்து மூணு அடிக்கு வட்டப்பாத்தி

வெண்டை செடியில் பச்சை தத்து பூச்சி

Bhendi leaf sucker insect organic management  வெண்டைக்காய் இலையாக இருந்தாலும் வெண்டைக்கையாக இருந்தாலும் நுனி முதல் அடி வரை மஞ்சளாக மாறிவிடும் . செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்  வெண்டைக்காய் நேராக இல்லாமல் வளைந்து காணப்படும் . பயிரின் அனைத்து சாரையும் உறுஞ்சி சாப்பிட்டுவிடும் மேலும் இப்பூச்சியின் மூலம் துங்ரோ வைரஸ் நோய் பரவுவதற்க்கும் வாய்ப்பிருக்கிறது . இயற்கை வழி தீர்வு  சோலார் விளக்கு பொறி வைக்கலாம் , அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு இடுவதன் மூலமும் இந்த பூச்சியை கட்டுப்படுத்தலாம் . ஒவ்வொரு ஏழு நாளைக்கு ஒரு முறையும் வேப்பெண்ணை கரைசல் ஐந்திலை கரைசல் , பதிலைக்கரைசல் , கற்பூரக்கரைசல் ,அக்கினி அஸ்திரம் இதில் ஏதாவது ஒன்றை தயார்பண்ணி கொடுத்துக்கொண்டே இருப்பது நல்லது .பொதுவா இப்படி செய்வதால் வெண்டை செடியை பூச்சிகள் காயப்படுத்தாமல் இருக்கும். உயிர்வழி தீர்வு    வெர்டிசீலியம் லக்கானி வாங்கி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து இழையோட முன்னும் பின்னும் படடுவதுபோல் தெளிக்கவேண்டும் முடிந்த அளவு இதையும் ஆறு நாளைக்கு ஒரு முறை தெளிக்கலாம்   எருக்கு கரைசல்  200 லிட்டர் ட்ரம்மில் எருக்கு இலை . பூ,காய் ,

நாம் தினமும் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறிவது எப்படி சில சுலபமான வழிகள்

Here are some easy ways on how to detect impurities in our daily foods நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் கலப்படம் இருப்பதாக வரும் செய்திகள் நம்மை அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் நாம் உணவுப்பொருள் வாங்குபவர்களிடம் நம்பகத்தன்மையை குலைக்கச்செய்கிறது . நாம் வாங்கும் உணவு பொருட்களில் கண்டுபுடிக்க சிலவழிமுறைகள் உள்ளன , அவற்றை பற்றித்தெரிந்து கொள்ளலாம் . பால் - Millk நாம் அன்றாட பயன்படுத்தும் முக்கியமான உணவுப்பொருள் . ஒரு பளபளப்பான சாய்தளத்தில் ஒரு சொட்டுப்பாலை விடுங்கள் கலப்படம் இல்லாத பாலாக இருந்தால் வெண்மை தடம் பதித்து மெதுவாக  கிழே இறங்கும் .தண்ணீர் கலந்திருந்தால் வேகமாக வழுக்கி ஓடும் . நெய் - Ghee ஒரு கண்ணாடி கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெயை விட்டு அதில் வேகவைத்து மசித்த உருளைகிழங்கை நன்றாக பிசைந்து அதில் அயோடினை இரண்டு சொட்டு விடவும் உருளை கிழங்கு நீல கலராக மாறினால் கலப்படம் உள்ளது . காபித்தூள் - Coffee powder  ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி ஒரு ஸ்பூன் காபித்தூளை போடுங்கள் அதில் காபித்தூள் சக்கரைத்தூள்  மாதிரி மிதந்தாள் சிக்கரி கலப்படம் உள்ளது   டீ தூள் - Tea ஒரு வடிகட்ட

வேலி ஓரங்களில் என்ன மரம் நடலாம்

What tree can be planted along the edges of the fence வேலி ஓரங்களில் மரக்கன்று வேலி ஓரங்களில் மரக்கன்று நடுவதற்க்கு முன் மண் அமைப்பை பார்த்துக்கொள்ளுங்கள் .  உதாரணமாக செம்மண் செம்மண் சரளை மணல் போன்ற அமைப்பு இருந்து தண்ணீர் அளவாகத்தான் பயன் படுத்துவீர்கள்  என்றால் எல்லா வகையான மரக்கன்றுகளும் நடலாம் . பொதுவா தமிழ் நாட்டோட மரத்தேவைக்காக வீடுகளுக்கும் அல்லது தொழிசாலைகளுக்கும் எல்லாத்தேவைகளுக்கும் ஏற்றமாதிரி எல்லா மரங்களும் வேலிப்பயிராக  நடலாம் . செம்மரம் , சந்தன மரம் , தேக்கு , குமிழ் , மகாகனி ,பெருமரம் , கரு மருது , நீர் மருது மற்றும் கருங்காலி  இதெல்லாம் பொதுவா நடக்கூடிய மரங்கள் . இதை தவிர்த்து ஒரே வகை மரங்கள் நடலாம் என்றால் மலை வேம்பு , ஆச்சா மற்றும் சவுக்கு மரங்கள் நடலாம் இதுஎல்லாமே வேலிகளில் நடக்கக்கூடிய பயிர்கள் . இடத்தை பொறுத்து சூழ்நிலையை பொறுத்து நடலாம் . நம்ம பாத்துகிற மாதிரி பாதுகாத்துகிற மாதிரி இருந்தால் சந்தனமரம் செம்மரம் மாதிரி உயர் ரக மரங்களை வைக்கலாம் . இல்லையென்றால் இது இரண்டும் நீங்கலாக மற்ற மரங்களை வைக்கலாம்  களிமண் நிலங்களில்  களிமண்ணாக இருந்தால் அல்லது கொஞ்சம் உப்புத்த

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி part 1

 Cultivation of tomatoes in a natural way தக்காளி பயிரின் வயது தக்காளி பயிரின் வயது குறைந்தபட்சம் 150 ஒரு சில பயிர்களில் 180 நாட்கள் , 5 முதல் ஆறு மாதம் வரை செய்ய வேண்டிய விவசாயம். நாட்டு விதைகளை தேர்ந்தெடுத்தால் குறைந்தபச்சம் 10 டன் அதுவே ஹைபிரிட் ஆக இருந்தால் 25 டன் மகசூல் எடுக்க வேண்டும் என ஒரு இலக்கை முடிவு செய்து கொள்ளவேண்டும் . இது எல்ல வகை மண்ணுக்கும் பொருந்தும் . தக்காளியை பொறுத்தவரை தழைச்சத்து ,சாம்பல்சத்து  இது இரண்டும் மிகவும் முக்கியம் .  பேரூட்ட சத்துக்களை 100 ஆக பிரித்தால் தழைச்சத்து 40 மணி சத்து 20 சாம்பல் சத்து 40 என்ற அளவில் கொடுக்கவேண்டும் . உங்களுக்கு சரியான விளைச்சல் கிடைக்கவில்லையென்றால் அதற்க்கு காரணம் சாம்பல் சத்தாக இருக்கும் . தக்காளி  விதைகள் தரமான விதைகள் வாங்க வேண்டும் . நாட்டு விதைகள் வாங்கினால் அதை போடுவதற்கு முன்னாள் வெள்ளை துணியில் பரப்பி பாதிக்கப்பட்ட விதைகளை ஒதுக்க வேண்டும். கறுப்பானது , வளைந்தது பூசணம் பூத்தது போன்ற தக்காளி விதைகளை அப்புறப்படுத்தவேண்டும் , ஹைபிரிட் விதை வாங்கினாலும் இதை செய்யவேண்டும் .  விதை நேர்த்தி  1 கிலோ தக்காளி விதைக்கு 10 கிராம்

செண்டு மல்லி பூஞ்சண நோய் தாக்குதலை கட்டுப்படுத்த

 To control the attack of chentu malli fungus செண்டு மல்லியில் இந்த காலகட்டத்தில் நவம்பர் , டிசம்பர்,ஜனவரி ,  மற்றும் பிப்ரவரி இந்த நான்கு மாதங்களில் அதிகமா வரக்கூடிய பிரச்சனை பூஞ்சாணம் நோய்தான் எந்த பூ பயிர்களுக்கும் இதுதான் அடிப்படையென்றாலும் செண்டுமல்லியில் சற்று கூடுதலாக இருக்கும் , ஏன்னென்றால் அதோட இலைகள் கரும்பச்சையாக  இருக்கும் , கொஞ்சம் நீர்குணம் அதிகமாக இருக்கும் அதேபோல் செண்டு மல்லி பூவிலும் நீர் தங்கியிருக்கும் அதனால் எளிமையா பூஞ்சாண நோய் தாக்கும்  தேவையான அளவு மட்டும் நீர் கொடுக்கவேண்டும் பத்து லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் 50 மில்லி பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் கலந்து தெளிக்கலாம் , இன்று தெளித்தால் பத்தாவது நாள் மறுபடியும் தெளிக்கவேண்டும் . இதேபோல் அரை லிட்டர் சூடோமோனஸ் , அரை லிட்டர் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் தரை வழி  கொடுக்கவேண்டும் . வெர்ட்டிசீலியம் லக்கானி 10 லிட்டருக்கு நல்ல பொறுமையா செண்டு மல்லி செடி மீது  படுவதுபோல் நன்றாக  நனச்சுவிட்டு தெளிக்கவேண்டும் . தெளிவாக அட்டவணை  1 வது  நாள் சூடோமோனஸ் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் தெளிக்கணும்  5வது  நாள்  வெர்ட்டிசீலியம் லக்கானி தெளிக்கணும் 

வீட்டு தோட்டத்திற்க்கு இயற்கை பூச்சி விரட்டி பப்பாளி இலைக் கரைசல்

Natural insect repellent papaya leaf solution for home garden பப்பாளி இலைக்  கரைசல்   நம் வாழ்க்கையில் விரும்பி சாப்பிட்ட பழங்களில் பப்பாளிக்கு எப்பவுமே ஒரு தனி இடம் உண்டு . பப்பாளியின் பச்சை இலை எப்பொழுதுமே நம் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் . பப்பாளியில் எப்பொழுதுமே வைட்டமின் A சத்து அதிகமாக காணப்படும் , இது நம் உடம்பிற்க்கு தேவையான ஒன்றாகும் ,  பப்பாளி அழுகு சாதன பொருளாகவும் பயன்படுகிறது. பப்பாளி சிறந்த பூச்சி விரட்டியாகவும், பயிர் வளர்ச்சியூக்கியாகவும்  செயல்படுகிறது . பப்பாளி சாற்றை தெளிப்பதால் வெள்ளை புள்ளி , ஏபிட்ஸ் , நத்தை , எறும்புகள் வராமல் தடுப்பதோடு like leaf blight, plant blight, leaf curling and rot போன்றவற்றையும் வராமல் தடுக்கிறது . பப்பாளி இலைக் கரைசல் எப்படி தயாரிப்பது  புதிதாக வந்த இலையை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது பெரிய இலையை சிறுதுண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளலாம் , அதில் அரை கப் தண்ணீரை ஊற்றி அதனுடன் 4 நறுக்கிய வெள்ளைப்பூண்டை போட்டு 12 மணிநேரம் வைக்கவேண்டும் .  பின்பு அதில் கொஞ்சம் நீரை ஊற்றி கையால் பிழிந்து வடிகட்டி பப்பாளி இலை சாற்றை எடுக்க வேண்டு

மரவள்ளி கிழங்கில் வைரஸ் நோயை இயற்கை முறை கட்டுப்பாடு

Natural method control of viral disease in cassava தவறான அல்லது நோய் தாக்கிய கட்டைகளை நடும்பொழுது  இந்த மாதிரியான பிரச்சனைகள் அதிகமாக வரும் . நோய் தாக்கிய கட்டைகளை முறைப்படுத்தாமலும் விதை நேர்த்தி பண்ணாமலும் நடுவதால் இந்த சிக்கல் அதிகமாக வரும். இலைப்புள்ளி ஆறாவது மாதம் ஏழாவது மாதம் இலைகளில் பிரவுன் நிறத்தில் இலைப்புள்ளி மாதிரி ஆரம்பித்து வளரும் , அதே போல் நரம்பு அடிஇலைகளில் மஞ்சளாகி சுறுங்குகிறதுபோல் இருக்கும் . இந்த சமயத்தில் மரவள்ளி கிழங்கை தோண்டி வெட்டி பார்த்தால் படத்தில் இருப்பதுபோல நடுப்பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் . பூச்சிகள் இருந்தால்  இதை சரி செய்வதற்க்கு 5 வது மற்றும் 6வது மாதத்தில் மிகவும் கவனம் எடுத்துக்கொண்டு இலைக்கு கீழ படரக்கூடிய பூச்சிகள் இருந்தால் அதை தடுத்தாலே இந்த நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் அது வராமல் இருப்பதற்க்கு எளிமையான வழி காதி சோப் 10 லிட்டருக்கு 50 கிராம் கலந்து தெளிக்கலாம் தெளித்த 7வது நாள் மறுபடியும் தெளிக்கலாம் . வேப்பிலை கரைசல், ஐந்திலை கஷாயம், பத்திலை கஷாயம் , அக்னி அஸ்திரம் ,கற்பூரக்கரைசல் இந்தமாதிரி தெளிப்பதால் பூச்சிகள் வராது , அப்படி வராமல்

மிளகாய் செடியில் மகசூலை அதிகரிக்க பத்து வழிகள்

Ten ways to increase the yield of chili plant உங்களுடைய மாடித்தோட்டத்திலோ அல்லது வீட்டின் பின்புறத்திலோ மிளகாய் செடி வளர்த்தால் மகசூலை அதிகரிக்க செடி வளர்க்கும் போது சில சின்ன விஷயங்களை கையாண்டால் நல்ல மகசூல் கிடைக்கும். என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம் . 1) நீங்கள் மிளகாய் நடுவதற்க்கு  முன் நடுமிடத்தில் வீட்டில் தயாரித்த இயற்கை உரங்களை போடலாம்.  பயன்படுத்திய  டி தூள் . முட்டை ஓடு மற்றும் வெங்காயத்தோல் எல்லாத்தையும் காயவைத்து கலந்து அதனுடன் தேங்காய் நார் மற்றும் மிளகாய்த்தூள் கலந்து நாடும் இடத்தை கிளரி தூவி விடலாம்  2) நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் காய்ந்த மிளகாயை விதைப்புக்கு எடுத்துக்கொள்ளலாம் விதைப்பதற்க்கு முன் தண்ணீரில் ஊறவைத்து மிதக்கும் விதைகளை எடுத்துவிட்டு மற்ற விதைகளை விதைப்புக்கு பயன்படுத்தலாம்  3) நீங்கள் தொட்டியில் வளர்த்தாலும் தரையில் வளர்த்தாலும் ஒரு இடத்தில இரண்டு செடி வைத்து வளருங்கள்  4) மிளகாய்ச்செடிக்கான உரங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம் . கடலை புண்ணாக்கில்   நேற்று வடித்த அரிசி கஞ்சியை ஊற்றி நன்றாக கலக்கி ஒருவாரம் வைத்திருக்க வேண்டும்  எட்டாவது நாள்  10 கப் தண்ணீர்

இயற்கை முறை நிலக்கடலை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை

Natural methods to look out for in groundnut cultivation நிலக்கடலை சாகுபடி  அசோஸ்பைரில்லம் ,  ரைசோபியம் விளையக்கூடிய நிலக்கடலை பூமிக்கு கீழே இருக்கு . ஆரம்பத்தில் அசோஸ்பைரில்லம் பயன்படுத்தலாம்  40 நாட்களுக்கு பிறகு வேளாண் அலுவலகம் அல்லது கடைகளில் ரைசோபியம் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்தனும். அசோஸ்பைரில்லம் பவுடரடாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணலோடு கலந்து தெளிக்கணும் . இதிலிருந்து 5 நாட்கள் கழித்து பாஸ்போ பாக்டீரியா ஏக்கருக்கு 2 கிலோ உங்கள் நிலைத்து மண்ணிலேயே கலந்து துவலாம் அல்லது தண்ணீர் வழியாக விடலாம். நிலக்கடலையின் வேர்களுக்கு இப்படி செய்வதால் நிலக்கடலையின் வேர்களுக்கு கிடப்பதை உறுதிப்படுத்தலாம் . இதில் சூடோமோனசை , விரிடி அல்லது பேசில்லஸ் சாப்ஸ்டில்ஸ்  தெளிச்சும் கொடுக்கணும் தரைவழியும் கொடுக்கணும் 15 நாட்களுக்கு அல்லது மாதம் ஒரு முறை கொடுக்க வேண்டும் . 10 லிட்டருக்கு 50 மில்லி அல்லது 100கிராம்  கலந்து தெளிக்கலாம் . தரை வழியென்றால் ஒரு ஏக்கருக்கு  ஒரு லிட்டர் கொடுக்க வேண்டும் . இப்படி நிலக்கடலைக்கு  செய்யும்போது  ஆரம்பத்துல ஒரு இரண்டு தடவை கொடுக்கிறோம். 30 வது  நாள் வேம்  இருந

வாழை பழத்தில் ஏன் கருப்பு வருகிறது அதற்க்கு என்ன காரணம். சரி செய்வது எப்படி?

What is the reason why the banana fruit is black? How to fix? தோல் மட்டுமே கருப்பாக இருந்தால் இரண்டு விதமான ஆய்வுகள் செய்யலாம் , தோலை உரிச்சு பாருங்கள் எந்தவித மாற்றம் இல்லாமல் தோல் மட்டுமே கருப்பாக இருந்தால் ஒரு விதமான பழத்தோட வெளிப்பாடு அதிகமான வெயில் மற்றும் பனிக்காலத்தில் பழத்தில் இருக்கக்கூடிய அந்த ஆசிட் இனிப்பு திரவமா வெளியில் வருவது கருப்பாக படியும் . அது என்ன சொல்ல வருதுன்னா அதிகமான இனிப்பு வெளி வந்து கருப்பாக படியும் . ஆந்த்ரோணக்ஸ் அப்படி இல்லாமல் கருப்பு மோல்டு மேல வந்து அதுமட்டுமில்லாமல் பழத்தை உரித்து பார்க்கும் பொழுது உள்ளே ஆரஞ்சு நிறத்திலோ , அல்லது மஞ்சள் நிறத்திலோ அல்லது கல்லு மாதிரியாகவோ அது "ஆந்த்ரோணக்ஸ்" என்னும் பூஞ்சையால்  வந்ததாகும்   இந்த நோய் கொஞ்சம் தீர்க்க முடியாத பிரச்சனைதான் . பூஞ்சாண நோய்களில் ஒரு பதினோரு வகை இருக்கு அதில் கடேசி வகை இந்த  ஆந்த்ரோணக்ஸ். சூடோமோனஸ் விரிடி வாழைமர சாகுபடியில் பழங்கள் உருவான உதாரணமா 11 மாத வாழை என்றால் 9வது மாதத்திலிருந்து பூஞ்சாண கொல்லிகளை தெளிப்பது நல்லது சூடோமோனஸ் விரிடி ,பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் , தெளிக்க வேண்டும் , இப்ப

கிசான் கிரெடிட் கார்டு

How to Apply for    Kisan Credit Card  in 2021 விவசாயிகளின் மத்தியில் ஒரு பிரபலாமான திட்டமாகும் . 2020 டிசம்பர் வரை இத்திட்டத்தில் 6 1/2 விவசாயிகள் இணைந்துள்ளனர் . இதற்க்கு முக்கியமான காரணம் , இந்திய அரசாங்கம் இதற்க்காக மூன்று டாக்குமெண்ட்ஸ் மட்டும் கொடுத்தால் போதும்மென அறிவித்துள்ளது  1) ஆதார் கார்டு  2) பான் கார்டு  3) உங்களது தற்போதைய புகைப்படம்  இது மூன்று இருந்தால் நீங்கள் தாராளமாக கே .சி .சி எடுக்கலாம் மேலும், நீங்கள் வேறு எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள பிரமாணப் பத்திரம் வழங்கப்பட வேண்டும் எந்த வங்கிகள் கே.சி.சி கடன் வசதி செய்து கொடுக்கிகிறது  1) கூட்டுறவு வங்கி  2) ரீஜினல் ரூரல் பேங்க்  3) நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப்  இந்தியா  4) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 5) பாங்க் ஆப் இந்தியா 6) இண்டஸ்ட்ரியல் டெவெலப்மென்ட்  பாங்க் ஆப் இந்தியா இன்ட்ரெஸ்ட் ரேட்  KYC  கே.சி.சி யிலிருந்து விவசாயிகளுக்கு ரூ .3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கடனுக்கான வட்டி விகிதம் 9 சதவீதம் என்றாலும், கே.சி.சி-யில், அரசாங்கம் இரண்டு சதவீத மானியத்தை வழங்குகிறது அதே சமயம் , விவ

மரமுருங்கை நடவு முறை

Tree drumstick planting method நன்கு உழ வேண்டும் மர முருங்கை என்பது நிலம் முழுவதும் ஆக்கிரமித்து வளரக்கூடியது குறைந்தபச்சம் 12 முதல் 15 ஆதி அகலத்தில் வளரக்கூடியது . நடும்பொழுது 20*20 அடி  இடைவெளியில் நடவேண்டும் நடுவதற்க்கு முன் நிலத்தை ஒருதடவைக்கு மூணுதடவை நன்கு உழ வேண்டும் இரண்டு தேவை ஐந்து கை  கலப்பையும் ஒருதடவை ஒம்பது கை  கலப்பையும்  போட்டு உழவேண்டும் மேல் மண்ணை நன்றாக பொலபொலப்பாக்கிவிட்டு நடலாம் இப்படி செய்வதால் வேர்கள் நன்றாக பரவி கிளைகள் நன்றாக வளர்ந்து காய்கள் நிறைய பிடிக்கும் . ஏழு நாட்கள் நிலத்தை ஆரவைத்துவிட்டு உழுத பின்பு வெயில் அதிகமாக இருந்தால் இரண்டு நாள்கள் கம்மியாக இருந்தால் ஏழு நாட்கள் நிலத்தை ஆரவைத்துவிட்டு  பின்னர்  20*20 இடைவெளியில் 3*3 அடி குழி எடுத்து தோண்டிய மண்ணை முக்கால் குழி  உள்ளே இழுத்துவிட்டு மூணாவது அடி விளிம்புல  குழிக்குள்ள 5 கிலோ மக்கள் தொழு உரத்தை தூள் தூளாக்கி சுற்றி வர போட்டுவிட்டு அதாவது மரமுருங்கை செடியை நடுவில் வைத்துவிட்டு  குழியின் ஓரத்தில் சுற்றி போட வேண்டும் . தொழு உரத்துடன் பவுடராக இருந்தால் 20 கிராம் திரவமாக இருந்தால் 10 மில்லி சூடோமோனஸ் கலந்