Ad Code

Ticker

6/recent/ticker-posts

பறவை காய்ச்சல் நோய் வந்தால் என்ன செய்வது

What to do if bird flu comes


கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் பறவை காய்ச்சலும் நோயும் தாக்க ஆரம்பித்துள்ளது . தற்போது வரை பஞ்சாப் ,ராஜஸ்தான் , கேரளா போன்ற மாநிலங்கள் பறவை காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . ராஜஸ்தானில் மயில்கள் காகங்கள் திடீரென இறந்ததற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது .

 What is bird flu?


இந்தவகை காய்ச்சல் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா A வகை வைரசால் ஏற்படுகிறது . இதனால் பலவகையான பறவைகள் பாதிக்கப்படுகின்றன காட்டில் வாழக்கூடிய பறவைகள் , வான் கோழி , காடை , கோழி மற்றும் வாத்துகள் இநோய்யால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன 


எப்படி பரவுகின்றது 



பறவைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறைவைகளிடமிருந்து வெளிப்படும் எச்சில் , மலம்  போன்றவற்றால் எளிதில் பரவும்  மேலும் நன்றாக உள்ள பறவைகளுக்கு  நோய் பாதிக்கப்பட்ட உணவு , நீர் , மற்றும் பொருட்கள் மூலமும் பரவும் .
இந்த நோய் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. ஆனால், பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் பணிபுரியும் நபர்கள் முறையான  சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் இதை தடுக்கலாம் .

 

பண்ணையில் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் 


கோழி மற்றும் முட்டையை நன்கு வேகவைத்து  உண்ணவேண்டும் 70 C   இவ்வகை வைரஸ்களை அழித்துவிடும். பாதிக்கப்பட்ட பண்ணையிலிருந்து மற்றொரு பண்ணைக்கு வண்டிகள் மூலமும் பரவுகிறது . இதனை கவனமாக கையாளவேண்டும் 
உங்கள் பண்ணைக்கு அருகில் புலம்பெயர்ந்த பறவையோ அல்லது காட்டில் வாழும் பறவையோ இறந்து கிடந்தால் அதை வெறும் கையால் தூக்க கூடாது . கையுறை  , முகக்கவசம் , மற்றும் கண்ணாடி அணிந்து குழிதோண்டி புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்யலாம்.

நீங்கள் தண்ணீர் கொடுக்கும் டேங்க் மாற்றப்பறவைகள் அருந்தாதவாறு மூடிவைக்க வேண்டும். உங்கள்  பண்ணையை சுற்றி அடர்த்தியான மரங்கள் இருந்தால் prune செய்து விடுங்கள் பண்ணையை எப்பொழுதும் சுத்தமாக வைக்கவேண்டும் .

Post a Comment

0 Comments