Skip to main content

Posts

Showing posts with the label கத்தரிக்காய்

கத்தரியில் குருத்து மற்றும் காய்துளைப்பான் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

  கத்தரி, சோலானம் மெலான்சினா தெற்காசியாவின்  மூன்று முக்கி ய காய்கறி பயிர்களில் ஒன்றாகும், இது உலகின் பரப்பளவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் சாகுபடி செய்யப்படுகின்றது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, கத்தரிக்காய் உற்பத்தியில்  இந்திய  இரண்டாவது இடம் வகிக்கின்றது  இது இந்தியாவில் வணிக மற் றும்தோட்டப்பயிராகவும் வளர்க்கப்படுகிறது. இது ‘ காய்கறிகளின் அரசன் ’ என்றும் ஏழைகளின் காய்கறி ’ என்றும்  அழைக்கப்படுகின்றது. 35 க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களால் கத்திரி பயிர்,நாற்றங்காலில் இருந்து அறுவடை வரை தாக்கப்படுகிறது. இவற்றில், கத்தரிக்காய் குருத்து மற் றும் காய் துளைப்பான் , லியூசினோடஸ் ஆர்போனாலிஸ், 50-90 % அளவில் கத்திரி பயிரில் பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு பயிர்பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாத போது 90% மேல் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. கத்தரி பயிரின் இன்றியமையாமையை கருத்தில் கொண்டும், கத்தரியின் குருத்து மற்றும் காய் துளைப்பான் அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தாலும் இவற்றின் வாழ்க்கை  சுழற்சி மற்றும் எளிய ஒருங்கிண...

கத்தரிக்காய் - ஆந்தராக்னோஸ் மற்றும் நுன்னூட்ட சத்து குறைபாடு

Cultivation of brinjal கத்தரி செடிகளோட இருக்கக்கூடிய கலைச்செடிகளில் இருந்து பரவக்கூடிய அதிக பூஞ்சிகளால இந்த கத்தரிக்காய் செடி தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது செடிகளுக்கு மேல் தண்ணீர் பாய்ச்சுவது , ஸ்ப்ரிங்ளர் மூலம் அல்லது தெளிக்கும் போதோ நாம் தெளிக்கும் தண்ணீர் சரியாக காயாமல் இருந்தால் இந்த பூஞ்சைகளோட தாக்கம் இருக்கும் இது கொஞ்சம் வேகமாக பரவக்கூடிய பூஞ்சை தாக்கமாகும் . கட்டுப்படுத்த வேளைகளில் தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்கலாம் காலை நேரத்தில் நீர் பாய்ச்சலாம் இப்படி செய்வதால் பயிருக்கு தேவையான நீர் போக மற்றவை ஆவியாகிவிடும் ஈரம் இருக்காது அதனால் பூஞ்சை தொற்றும்  இருக்காது . Related post    கத்தரிக்காய் Pest And diseases  Vegetables சூடோமோனாஸ் , விரிடி, பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இந்த முன்றில் ஏதாவது இரண்டு முக்கியமா சூடோமோனஸ் மற்றும் ட்ரைகோடெர்மா விரிடி அல்லது சூடோமோனஸ் மற்றும் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இப்படி ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் 25 +25 மில்லி கலந்து தெளிக்கலாம் இதுவே கொஞ்சம் அதிகம் வந்துவிட்டது எனில் 50+50 மில்லி கலந்து ஸ்ப்ரே பண்ணலாம்  ஒரு ஏக்கருக்கு ஒரு ல...

கத்திரிசாகுபடி ஒர் அறிமுகம்

முன்னுரை வருடமுழுவதும் நில மூடாக்கு (மல்ச்சிங் ஷீட்) முறையில் செட்டுநீர் பாசனம் அமைத்து கத்தரிக்காய் சாகுபடி செய்யலாம். இதனால் குறைந்த செலவில் அதிக லாபம் எடுக்க முடியும். நில மூடாக்கு  முறையால் களை செடிகள் முளைப்பது கட்டுப்படுத்தப்படுவதால் வேலை ஆட்களின் தேவை குறைவே. மேலும் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய முடியும்.  பட்டம் தை பட்டத்தில் (ஜனவரி-பிப்ரவரி) நடவு செய்யலாம்.  நிலத்தின் கார அமிலத்தன்மை 6.5 - 7.5 ல் இருக்க வேண்டும்.   நிலம் தயாரிப்பு நிலத்தை மண்கட்டிகள் இல்லாமல் 3-4 உழவு ஓட்ட வேண்டும்.  கடைசி உழவின் போது ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் அல்லது 2 டன் மண்புழு உரம், 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ பாஸ்போ பாக்டிரியா, 2 கிலோ வேம், 2 கிலோ டிரைக்கோடெர்ம்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து நிலத்தில் சீராக தூவி விட்டு உழவு ஓட்ட வேண்டும்.  மூடாக்கு அமைக்கும் முறை ஒரு ஏக்கரில் மூடாக்கு அமைக்க 30 மைக்ரான் சீட் 90 கிலோ தேவைப்படும். அதேபோன்று சொட்டு நீர் பாசனம் அமைக்க 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும். ஒரேமாதிரியான பார்கள் அமைக்க வேண்டும். ...