குறுகிய கால கடன் குறுகிய கால கடன் இதை பயிர்க்கடன் என்றும் கூறலாம் , இந்த கடன் ஒரு பருவ பயிர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த வகை கடன்களை கோ-ஆபரேட்டிவ் வங்கி , கிராம வங்கி மற்றும் வணிக வங்கிகளிடம் பெறலாம். இந்த வகை கடன் வாங்குவதற்கு உங்கள் நில பத்திரத்தை அடமானமாக காண்பிக்க வேண்டும் . இந்த லோன் உங்கள் பயிர் உற்பத்தியை பெருக்கவும் , உங்களுடைய வேளாண் தேவையை பூர்த்தி செய்யவும் , புதிய விவசாய முறைகளை செய்யவும் தரப்படுகிறது . தோட்டக்கலை மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கும் கொடுக்கப்படுகிறது . அப்புறம் இந்த லோன் ஒரு பருவத்திற்கு மட்டும் கொடுக்கப்படுகிறது . திரும்ப செலுத்தும் காலம் என்று பார்த்தால் ஒரு வருடம் அல்லது அறுவடை முடிந்த பின்பு செலுத்தலாம் . மேலும் ஒவ்வொரு பருவத்திற்கும் இதே முறையில் கடன் வாங்கலாம் . நடுத்தர மற்றும் நீண்ட கால கடன்கள் இந்த வகை கடன்கள் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள பயிர்களுக்கு கொடுக்கப்படுகிறது. குறிப்பாக எதற்க்கு தருகிறார்கள் என்றால் உங்கள் வயலில் போர்வெல் போடுவதற்கு , நிலத்தை சமன் படுத்து