Skip to main content

Posts

Showing posts from May, 2020

தோட்டக்கலை கேள்வி-பதில்

Plantation கேள்வி - பதில் பழங்கள் கேள்வி-பதில் காய்கறிகள் கேள்வி - பதில் மரம் கேள்வி - பதில் மலர்கள் கேள்வி-பதில் தோட்டத்தில்  உள்ள எலியை கட்டுப்படுத்துவது எப்படி ? 

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சாகுபடி பற்றிய சந்தேகங்கள்

Horticulture and cultivation of hill crops  1)  தென்னை மலைப்பயிர்களில் முக்கியமானது தென்னை . தமிழ்நாட்டை பொறுத்தவரை பத்தில் ஆறு பேர் வீட்டிற்காவது குறைந்தது ஒரு தென்னை மரமாவது இருக்கும் அல்லது ஒரு தென்னை மரமாவது வளர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும் எப்படி வளர்க்கவேண்டும் என்ன   செய்யலாம் போன்ற கேள்விகளுக்கு பதில் கிழே  உள்ளது  தென்னை

விவசாய கடன்களும் மானியங்களும் - 2

குறுகிய கால கடன்                             குறுகிய கால கடன் இதை பயிர்க்கடன் என்றும் கூறலாம் , இந்த கடன் ஒரு பருவ பயிர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த வகை கடன்களை  கோ-ஆபரேட்டிவ்  வங்கி , கிராம வங்கி மற்றும் வணிக வங்கிகளிடம் பெறலாம். இந்த வகை கடன் வாங்குவதற்கு உங்கள் நில பத்திரத்தை அடமானமாக காண்பிக்க வேண்டும் . இந்த லோன் உங்கள் பயிர் உற்பத்தியை பெருக்கவும் , உங்களுடைய வேளாண் தேவையை பூர்த்தி செய்யவும் , புதிய விவசாய முறைகளை செய்யவும் தரப்படுகிறது . தோட்டக்கலை மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கும் கொடுக்கப்படுகிறது .            அப்புறம் இந்த லோன் ஒரு பருவத்திற்கு மட்டும் கொடுக்கப்படுகிறது . திரும்ப செலுத்தும் காலம் என்று பார்த்தால் ஒரு வருடம் அல்லது அறுவடை முடிந்த பின்பு செலுத்தலாம் . மேலும் ஒவ்வொரு பருவத்திற்கும் இதே முறையில் கடன் வாங்கலாம் .   நடுத்தர மற்றும் நீண்ட கால கடன்கள்           இந்த வகை கடன்கள் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள பயிர்களுக்கு கொடுக்கப்படுகிறது.  குறிப்பாக எதற்க்கு தருகிறார்கள் என்றால் உங்கள் வயலில் போர்வெல் போடுவதற்கு , நிலத்தை சமன் படுத்து

ஆர்கானிக் விவசாயி - 7

பண்ணைக்கு வெளியில் இருந்து பெறப்படும் இடுபொருட்கள்ளுக்கு முன் அனுமதி பெறுதல்      தற்சார்பு முறையில் இயற்கை விவசாயம் செய்யும் வரை இந்த படிவம் தேவை இருக்காது. அதே சமயம் உங்களிடம் தேவையான இடுபொருட்கள் இல்லையெனில் வெளியிலிருந்து வாங்க வேண்டியது வரும் அப்படி வாங்குவதற்கு TNOCD யிடம் அனுமதி வாங்கவேண்டும் . அதற்காக தனியாக படிவம் உள்ளது அதை பற்றி பார்ப்போம் 1) பெயர் மற்றும் விலாசம் தொலைபேசி என்னுடன் கொடுக்க வேண்டும் 2) பதிவு என் கொடுக்கவேண்டும் 3) அங்கீகரிக்கப்பட வேண்டிய உரங்கள்         அ) உரத்தின் பெயர் , சேர்மான கலவை மற்றும் வகை பற்றி குறிப்பிட வேண்டும்.           ஆ) விநியோகஸ்தரின் முகவரி எழுத வேண்டும்          இ) வாங்கப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் அளவு .         ஈ) எவ்வளவு காலம் பயன்படுத்துவீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும் 4)         4)    பரப்பு           அ) வயல் என் இயற்கை விவசாயம் செய்யும் மொத்த பரப்பளவு             ஆ) பயிரின் பெயர்           இ ) பயன்படுத்தும் உரம் பற்றி சொல்ல வேண்டும்              ஈ ) பயன்படுத்தும் காலம்   மற்றும் எவ்வளவு பயன் படுத்துகிறீ

களைகள் என்பது என்ன-2

வேர்களை வைத்து களைகள் பற்றி சென்ற தொடரில் எனக்கு தெரிந்த வரை பதிவு செய்தேன். விடுபட்ட ஒரு செய்தி. ஆழமாக வேர் செல்லும் களைகள் இன்னுமொரு அற்புதத்தை அடி மண்ணில் நடத்துகிறது.   களைகளின் வேர் பகுதி அந்த ஆழமான பகுதியில் சிதைந்து மக்கு நிலையை உருவாக்குறது என்பது தான் அந்த செய்தி. வளர்ந்த களைகள் மண்ணின் கலக்கும் போது அதில் உள்ள சத்துக்களை மண்ணில் கலந்து விடுகிறது என பார்த்தோம். இது மண்ணை வளமாக்குகிறது. இந்த களை செடிகள் முளைத்து நான்கு இலை நிலையில் மண்ணில் கலந்தால் அது நுண்ணுயிர்களுக்கு பிடித்தமான உணவாகிறது. இது நுண்ணுயிர்கள் பெருக்கத்தை அதிகரிக்கும். அதற்கு தான் அந்த காலத்தில் "போக்கு போக உழவு என சொல்லுவார்கள் ". அதாவது களைகள் முளைக்க,முளைக்க உழவு செய்வது. இதில் இரண்டு நன்மைகள். ஒன்று மேலே சொன்னது போல நுண்ணுயிர் பெருக்கம். இரண்டு களைகளின் விதைகள் அழிவது மூலம் களை கட்டுப்பாட்டில் இருக்கும். இங்கே இன்னுமொரு ஆச்சரியமான செய்தி. களைகளின் சந்ததி தொடர இயற்கை அதற்கு எப்படி உதவுகிறது என பாருங்கள். ஒருமுறை உருவாகும் விதைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் முளைப்பதில்லையாம். அந்த விதைகள் கொஞ்சம் கொஞ்சம

களைகள் என்பது என்ன - 1

பயிர்களுக்கு நட்பா, மாற்றா? களைகள் மண்ணின் மருத்துவர் என சொல்லுவார்கள். ஏன், எப்படி?! உங்கள் வயலில் என்ன என்ன களைகள் வளர்ந்திருக்கிறது, பக்கத்து தோட்டத்தில் என்ன என்ன வளர்ந்து வருகிறது என பொறுமையுடன் கவனியுங்கள். சில களைகள் பொதுவானதாக இருக்கும். ஆனால் உங்கள் வயலில் இருக்கும் மற்ற களைகள், அடுத்த வயலில் உள்ள களைகளுக்கு மாறுபடும். ஏன் ஒரு வயலுக்கும், அடுத்த வயலுக்கும் களைகள் வித்தியாசப் படுகிறது என யோசித்தது உண்டா? பொதுவாக மண்ணை மேம்படுத்தும் வகையில் தான் களைகள் தோன்றும். எந்த சத்துக்கள் குறைந்து இருக்கிறதோ அதை ஈடு செய்யும் வகையில் தான் களைகள் தோன்றும். அடுத்து திரு அரசூர் செல்வம் அவர்கள் ஒருமுறை சொன்னதை கேட்டிருக்கிறேன். களைகளை வேரின் அமைப்பை கொண்டும் பகுத்து பார்க்கலாம். 1. ஆணிவேர் உள்ளவைகள். 2. கிளைவேர்கள் உள்ளது. 3. இந்த இரண்டும் அல்லாத சல்லிவேர்களை கொண்டதாக இருக்கும். கவனித்துப் பாருங்கள். சில வயல்களில் ஆணி வேர் களைகள் அதிகம் தோன்றும். இதன் வேர்கள் அதிக ஆழம் செல்லக் கூடியது. சில வயல்களில் ஆணி வேர் களைகளை பார்க்க இயலாது. கிளை வேர்கள் உடைய களைகள் அதிகம் இருக்கும். சில வயல்களில் இந்த இர

பயிர் பாதுகாப்பு -தென்னை

பயிர் பாதுகாப்பு -தென்னை நம் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நிறைய பாதிப்பிற்கு உள்ளாகிறது. அதில் ஒரு பாதிப்பாக கருவண்டு தாக்குதல் இருக்கிறது. இந்த வண்டு தா க்குதலை இயற்கை முறையில் தவிர்க்க நொதித்த ஆமணக்கு கரைசலை பயன்படுத்தலாம். கரைசல் தயாரிப்பு:   5 கிலோ ஆமணக்கு விதைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து மண்பானை அல்லது தொட்டிகளில் 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும். பின் 10 நாட்கள் கழித்து இந்த கலவையில் இருந்து துர்நாற்றம் தோன்றும் . பயன்படுத்தும் முறை: 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பானையில் 2 லிட்டர் நொதி வந்த கலவையுடன் 3 லிட்டர் நீர் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறாக ஒரு ஏக்கருக்கு 5 மண் பானைகள் தேவைப்படும். மண்பானையின் வாய்ப்பகுதி மட்டும் தெரியும் அளவு புதைத்து வைக்க வேண்டும் தென்னந்தோப்பு, பாக்குத்தோப்புகளில் மரத்தின் அருகே புதைத்து வைத்தால் வண்டுகள் பானையை நோக்கி வந்து விழுந்து அழிந்து விடும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வண்டுகளை துாக்கி எறிந்து விட்டு மீண்டும் அதே கரைசலை பயன்படுத்தலாம். கட்டுப்படும் வண்டுகள்,பூச்சிகள்: கூன் வண்டு, சாம்பல் நிற வண்டு, காண்டாமிரு

மண்புழு உரம் தயாரிக்கும் முறை

பத்து சத்துக்கள் அடங்கிய பக்காவான இயற்கை உரம்… மகசூலும் அதிகரிக்க வேண்டும்; மண்வளமும் பாதுகாக்கப்பட வேண்டுமா? அதற்கு ஒரே வழி இயற்கை உரங்கள்தான். அந்த இயற்கை உரங ்களில் மிகச் சிறந்தது எது என்றால் மண்புழு உரம்தான். விவசாயிகளுக்காக இரவு பகல் என 24 மணி நேரமும் உழைக்கும் உயிரினம். அதனை நாம் பக்குவமாகப் பயன்படுத்தினால் பலமடங்கு பயன் அடையலாம். அதைத்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்து வருகிறார், திப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா மொடக்குபட்டியைச் சேர்ந்த திரு. எம். ஜெயபிரகாஷ். தமது தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்காக ஆரம்பித்து சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பயன்படும் விதத்தில் உற்பத்தியை அதிகரித்துள்ளார். மண்புழு உரம் தயாரிக்கும் முறை உரம் தயாரிப்பதற்கு ஏற்ற அளவு தொட்டி கட்டி அதில் ஒரு அடி உயரம் வரைக்கும் தேங்காய் மட்டைகள் அடுக்கப்படுகிறது. ஒரு அடி வரைக்கும் பண்ணைக்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், தென்னை நார்க் கழிவுகளில் ஏதாவது மக்கும் கழிவுகளை ஒன்றும், பின்பு அரையடி அளவுக்கு மாட்டுச் சாணமும் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு தொட்டியளவுக்கேற்றவாறு மாற்றி, மாற்றி மேலிருந்து அரையடியளவு இடை

அதிக முட்டையிடும் கோழி இனம் எது,ஆண்டிற்கு எத்தனை முட்டையிடும், கோழி எங்கு கிடைக்கும்,விலை எவ்வளவு கேள்வி-பதில்

பதில்-1  முட்டைக்கான இந்திய ரகம் கிராமபிரியா  ( கைராளி) ,கிரிராஜா,அசில் கிராஸ்,கிராமலட்சுமி,கைராலி சுமார் 200 முட்டை வரை போடும் . நீங்க உங்க மாவட்டத்திற்கு அருகிலுள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி துறையின் இலவச பயிற்சி மேற்கொள்ளவும் பதில்-2 என்னதான் கலப்பின நாட்டுகோழிகளை வளர்த்தாலும் அவை 50%பிராய்லர் இறைச்சி முட்டைபோலத்தான் இருக்கும் விவரம் தெரிந்தவர்கள் வாங்கமாட்டார்கள் நமது பாரம்பரிய சிறுவிடை பெருவிடை கிரேப் இவைதான் ருசியில் முட்டையில் 100% உன்மையாய் இருக்கும் பதில்-3 வனராஜா கோழிகள் ஒன்றரை வருடத்தில் 110 முட்டைகள்வரை இடும். கிராமப்பிரியா கோழி ஒன்றரை வருடத்தில் 200 முதல் 230 முட்டைகள்வரை இடக்கூடியது. அதேபோல இவை 6 மாதங்களில் சராசரியாக 2 கிலோ எடையைப் பெற்றுவிடுகின்றன. நல்ல, திடகாத்திரமான கோழிகள் விரைவில் இறைச்சிக்குத் தயாராகிவிடு