Skip to main content

விவசாய கடன்களும் மானியங்களும் - 2


குறுகிய கால கடன்

                            குறுகிய கால கடன் இதை பயிர்க்கடன் என்றும் கூறலாம் , இந்த கடன் ஒரு பருவ பயிர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த வகை கடன்களை  கோ-ஆபரேட்டிவ்  வங்கி , கிராம வங்கி மற்றும் வணிக வங்கிகளிடம் பெறலாம். இந்த வகை கடன் வாங்குவதற்கு உங்கள் நில பத்திரத்தை அடமானமாக காண்பிக்க வேண்டும் . இந்த லோன் உங்கள் பயிர் உற்பத்தியை பெருக்கவும் , உங்களுடைய வேளாண் தேவையை பூர்த்தி செய்யவும் , புதிய விவசாய முறைகளை செய்யவும் தரப்படுகிறது . தோட்டக்கலை மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கும் கொடுக்கப்படுகிறது .

 

         அப்புறம் இந்த லோன் ஒரு பருவத்திற்கு மட்டும் கொடுக்கப்படுகிறது . திரும்ப செலுத்தும் காலம் என்று பார்த்தால் ஒரு வருடம் அல்லது அறுவடை முடிந்த பின்பு செலுத்தலாம் . மேலும் ஒவ்வொரு பருவத்திற்கும் இதே முறையில் கடன் வாங்கலாம் .

 

நடுத்தர மற்றும் நீண்ட கால கடன்கள்


தொழில் முனைவோருக்கு உதவும் ...

 

        இந்த வகை கடன்கள் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள பயிர்களுக்கு கொடுக்கப்படுகிறது.  குறிப்பாக எதற்க்கு தருகிறார்கள் என்றால் உங்கள் வயலில் போர்வெல் போடுவதற்கு , நிலத்தை சமன் படுத்துவதற்கு, வேலி அமைப்பதற்கு , இயந்திரங்கள் வாங்க  டிராக்டர்ஸ் , அறுவடை இயந்திரம் , அல்லது மற்ற பண்ணை சார்ந்த இயந்திரங்கள் வாங்க , மற்றும் பழத்தோட்டம் அமைக்க அல்லது மேம்படுத்த தரப்படுகிறது .

 

   பயிக்கடனுடன் இதை ஒப்பிடும்போது இதற்கான சட்ட திட்டங்கள்
 வேறுவிதமாக இருக்கும் ஏன் என்றால் கொடுக்கப்படும் கடன் அளவு 

அதிகமா இருக்கும் . நீண்ட காலக்கடன் என்பதால்

வட்டி கம்மியாக இருக்கும். அதே சமயம் சரியான

நேரத்திற்கு வட்டி கட்ட வேண்டும் என்பதையும்

நினைவில் கொள்ள வேண்டும் .


 


இந்த வகை கடன் வாங்குவதற்கான நடைமுறை என்று பார்த்தால் , முதலில்  எந்த கடன் தேவையோ அந்த கடனிற்க்கு  உங்களுடைய விண்ணப்பத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் . சமர்ப்பித்த பிறகு வங்கி கடன் அதிகாரியோ அல்லது ஆய்வாளரோ உங்களுடைய விண்ணப்பத்தை ஆய்வு செய்து பின்பு உனக்கல நிலத்தை ஆய்வு செய்து எதற்காக கடன் வாங்குகிறீர்கள் என்பதாகி உறுதி செய்வார்கள். மேலும் உங்களிடம் பொருளாதார நம்பகத்தன்மை, கடன் திரும்ப செலுத்தம் நம்பகத்தன்மை, போன்றவற்றையும் உறுதி செய்து உங்களுக்கான கடனை வங்கி  வழங்கும் .


 


இதுவரைக்கும் விவசாயக்கடன்களும் அதன் வகைகள் பற்றி பார்த்தோம் அடுத்து ஒவ்வொரு விவசாய கடன்கள் பற்றிய முழு விவரங்களை பற்றி பார்ப்போம் .


1) விவசாய தங்க நகை கடன்


 இது ஒரு  குறுகிய காலக்கடன் ஆகும் .(12 மாதம் ) மிகவும் எளிதாகவும் சீக்கிரமாகவும் கிடைக்கக்கூடிய கடன் இதுவாகும் அதனாலே அதிக விவசாயிகள் இந்தக்கடனை வாங்குவார்கள் . அதே சமயம் தற்பொழுது அணைத்து வங்கிகளிலும் கிடைப்பதில்லை 2019 டிசம்பர் முதல் விவசாய தங்க நகை கடன் கொடுப்பது நிறுத்தப்பட்டுவிட்டன . ஆனால்  சில வங்கிகளில் வேறு பெயரில் கொடுக்கப்படுகிறது உதாரணமாக  பல்நோக்கு தங்கக் கடன். விவசாய நகை கடன் திட்டம்.

தங்க நகை கடனில் மொத்த தங்கத்திற்கு என்பது சதவீதம் பணம் கொடுக்கப்படுகிறது . அதாவது எட்டு கிராமிற்கு (ஒரு பவுன் ) ஆறு கிராம் அளவிற்க்கு பணம் கொடுக்கப்படும் . அன்றய தேதியில் தங்கம் கிராம் 

என்ன விலை இருக்கிறதோ  அந்த அளவு பணம் தருவார்கள்  அதாவது நூறு ரூபாய் பெறுமானமுள்ள தங்கத்தை அடமானம் வைத்தால் 70 முதல் 80 ரூபாய் கிடைக்கும். ( தயவு செய்து உங்களுக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு பணம் மட்டும் கடனாக பெறுங்கள் )

 

  வாங்கிவாரியாக தங்க நகை கடன் பற்றி பார்ப்போம். பொதுவா அணைத்து வங்கிகளிலும் சட்ட திட்டங்களும் ஒன்றாக இருக்கும் ஒரு சில வங்கிகளில் மட்டும் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது.

Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...