Skip to main content

Posts

Showing posts from February, 2024

மாடித்தோட்டத்துக்கு ஏற்ற மாம்பழ ரகங்கள் எவை, வளர்ப்பது எப்படி?

மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு மக்களிடத்தில் எப்போதும் தாளாத ஈர்ப்பு உண்டு. இதோ, இந்த சீசனுக்கு வழக்கம்போல மாந்தோப்புகளில் மாம்பூக்கள், பிஞ்சுகளாக மாறி, காய்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லோருக்குமே தோட்டத்தில் மாம்பழங்களை விளைவித்துச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், சிலர் மாடித்தோட்டங்களில் மாம்பழங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் வளர்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், மாடித்தோட்டங்களில் என்ன விதமான மாம்பழங்களை விளைவிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . இந்த ரகங்கள் எல்லாம் சிறப்பு! ``இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. இவற்றில் வணிக ரீதியாக 20 ரகங்கள் மட்டுமே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. வட இந்தியாவில் தஷேஹரி, லாங்கரா, பாம்பே கிரீன் வகைகள்; தென் இந்தியாவில் பங்கனப்பள்ளி, நீலம், காலாபாடி, ருமானி மற்றும் மல்கோவா வகைகள்; மேற்கு இந்தியாவில் அல்போன்சா, கேசர், மான்குராட், வன்ரான், லாங்க்ரா வகைகள்; கிழக்கு இந்தியாவில் சர்தாலு, சௌசா, மால்டா போன்ற வகைகள் வ

நன்மை தரும் பூச்சிகள் -1

விவசாயத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி தீமை விளைவிக்கும் பூச்சிகளை அழித்து நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன. பயிர்களை பாதிக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சிகள் இயற்கை எதிரிகள் என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, இந்த நன்மை செய்யும் பூச்சிகளை விவசாயிகள் அறிந்து, அவற்றைப்பாதுகாப்பது அவசியம். தீமை செய்யும் பூச்சிகளை தாக்கி அழிக்கும் இயற்கை எதிரிப் பூச்சிகள் சிலவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்    இரை விழுங்கி அல்லது ஊன் விழுங்கி காட்டில் புலி மானை வேட்டையாடி சாப்பிடுவது போல சில நன்மை செய்யும் பூச்சிகள் நம் விளை நிலங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் தீமை செய்யும் பூச்சிகளை வேட்டையாடி தன் உணவாக எடுத்துக் கொள்கிறது. இப்படிப்பட்ட நன்மை செய்யும் பூச்சிகள் இரை விழுங்கி அல்லது ஊன் உண்ணி என்று  அழைக்கப்படுகிறது. பின்வரும் பூச்சிகள் இரை விழுங்கி அல்லது  ஊன் விழுங்கிகளுக்கான சில உதாரணங்களாகும். கிரைசோபா: இவ்வகை பூச்சிகளில் ஆண் பூச்சிகள் 10 முதல் 12 நாளும், பெண் பூச்சிகள் 35 நாளும் உயிர்வாழும். 500 முதல் 600 முட்டைவரை இடும். இது குஞ்சுப் பருவம

கத்தரியில் குருத்து மற்றும் காய்துளைப்பான் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

  கத்தரி, சோலானம் மெலான்சினா தெற்காசியாவின்  மூன்று முக்கி ய காய்கறி பயிர்களில் ஒன்றாகும், இது உலகின் பரப்பளவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் சாகுபடி செய்யப்படுகின்றது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, கத்தரிக்காய் உற்பத்தியில்  இந்திய  இரண்டாவது இடம் வகிக்கின்றது  இது இந்தியாவில் வணிக மற் றும்தோட்டப்பயிராகவும் வளர்க்கப்படுகிறது. இது ‘ காய்கறிகளின் அரசன் ’ என்றும் ஏழைகளின் காய்கறி ’ என்றும்  அழைக்கப்படுகின்றது. 35 க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களால் கத்திரி பயிர்,நாற்றங்காலில் இருந்து அறுவடை வரை தாக்கப்படுகிறது. இவற்றில், கத்தரிக்காய் குருத்து மற் றும் காய் துளைப்பான் , லியூசினோடஸ் ஆர்போனாலிஸ், 50-90 % அளவில் கத்திரி பயிரில் பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு பயிர்பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாத போது 90% மேல் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. கத்தரி பயிரின் இன்றியமையாமையை கருத்தில் கொண்டும், கத்தரியின் குருத்து மற்றும் காய் துளைப்பான் அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தாலும் இவற்றின் வாழ்க்கை  சுழற்சி மற்றும் எளிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை  முறைமைகளும்

பணம் கொடுக்கும் விவசாயம் - 1

                                   நீங்கள் போய்  ஒரு விவசாயிடம் உங்களுடைய விவசாயம் உங்களுக்கு லாபகரமாக இருக்கிறதா என்று கேட்டால் நம்மை ஏற இறங்க பார்த்துவிட்டு ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு செல்வார் ஆனால் உண்மை நிலை இதைவிட மோசமாகத்தான் இருக்கும் . பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தில் கணக்கு பார்ப்பதில்லை ஏன் என்றால் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது விவசாயிக்கு தெரியும் . விவசாயம் கூட  ஒரு ஷேர் மார்க்கெட் மாதிரிதான் கொஞ்சம் கொஞ்சம் ஆக போட்டு பெரிய லாபம் எடுக்கலாம் . அதற்கு சரியான நுணுக்கம் தெரிந்திருக்க வேண்டும் . இல்லையென்றால் பாதாளத்தில் விழவேண்டியதுதான் . நீங்கள் 5 சென்ட் நிலம் வைத்திருந்தாலும் 50 ஏக்கர் வைத்திருந்தாலும் சரியான நுணுக்கம் தெரிந்திருந்தால் விவசாயமும் உங்களுக்கு பணம் கொடுக்கும் . விவசாயம் மட்டுமல்ல நீங்கள் எந்த ஒரு தொழிலை எடுத்துக்கொண்டாலும் முக்கியமாக மூன்று விஷயங்களை கவனிக்கவேண்டும் முதலாவது மூலதனம் எந்த ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டுமென்றால் பணம் தேவை என்பது மிக முக்கியம் அது எந்த இடத்தில அதிகம் தேவை எந்த இடத்தில் குறைவாக தேவை என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக

விவசாயமும் ட்ரோன்களின் பயன்பாடும்

இன்றய காலகட்டத்தில் விவசாயத்தில் டெக்னாலஜி என்பது தவிர்க்க முடியதாகிவிட்டது . இதற்கு முக்கிய காரணம் ஆட்கள் பற்றாக்குறை  மற்றும் உரங்கள் , பூச்சி விரட்டிகள் சரியான நேரத்திற்கு செய்யவேண்டிய சூழ்நிலை . இதை தவிர்பதற்குத்தான் ட்ரோன்களை பயன்படுத்தி தெளிக்கப்படுகிறது . குறைந்த நேரத்தில் வேலைகளை முடிப்பதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் ட்ரோன்களை பயன்படுத்த ஊக்குவிக்கிறது . சாதாரண தெளிப்பான்களை பயன்படுத்தும்போது நேர விரயம் அதிகமாகிறது . மேலும் மருந்து தெளிக்கும்போது விவசாயிகள் பூச்சிக்கொல்லியுடன் நேரடி தொடர்பில் இருப்பார்கள் . அதுவே நாம் ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும்போது அறவே அது தடுக்கப்படுகிறது . ட்ரோன்கள் மூலம் தெளிக்கும்போது  காலநிலை மாற்றங்களை சமாளித்து எதிர்காலவேளாண் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது . ட்ரோன் மூலம் மருந்துமற்றும் உரம் தெளிக்க ஒரு ஏக்கருக்கு 10 நிமிடம் மட்டுமே. தேவைப்படுகிறது. மேலும் 90%தண்ணீர் உபயோகத்தையும், 40% பூச்சிக்கொல்லி மருந்தின் அளவையும் கணிசமாக குறைக்க நம்மால் முடியும் . ட்ரோன் மூலம்  தாவரங்களின்மேல் சரியான அளவில் சீராக மருந்துதெளிக்கப்படுவதால் பய