Ad Code

Ticker

6/recent/ticker-posts

துளசி செடி - நீங்கள் நல்ல வருமானத்தை ஈட்டலாம்

Basil - You can earn a good income



மூலிகை செடியின் ராணி என்று அழைக்கப்படுகிறது. பல பயன்பாடுகளுக்காக பல நூற்றாண்டுகளாக பயிர் செய்யப்பட்டு வருகிறது .கிராம்பை போன்று இதிலும் யூஜெனோல்என்னை இருக்கிறது அதை விட 70 சதவீதம் அதிகம் இருக்கிறது . துளசி இலைகள் பல மருத்துவ பயன்பாட்டிற்க்காக அதிகம் தேவைபடுகிறது.


இந்தியாவில் பல மாநிலங்களில் துளசி வளர்க்கப்படுகிறது . இந்த துளசி செடியை மருந்துக்காக பயிர் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கிறது . குறைந்த நேரம் குறைந்த செலவு அதிக லாபம் எடுக்கலாம்  மூன்றே மாதத்தில் 15 முதல் 20000 வரை செலவு செய்து அதிகமாக  லாபம் எடுக்க முடியும் 


 மருந்து மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு தேவை என்பதால் துளசியின் தேவை எப்பொழுதுமே இருந்துகொண்டிருக்கும் . ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயிர் செய்யப்படுகிறது . செடியாகவும் அல்லது நாற்றாகவும் பயிர்செய்யப்படுகிறது . ஒரு ஹெக்ட்டருக்கு 10 கிலோ விதை தேவைப்படும் துளசி இயற்கையிலே மருத்துவகுணம் இருப்பதால் பூச்சி நலிதக்கம் அதிகம் இருக்காது .


நீங்கள் நல்ல வருமானத்தை ஈட்டலாம்


துளசி செடியில் இரண்டு விதமாக வருமானம் ஈட்டலாம்  ஓன்று விதை மற்றோன்று இலை . விதை எடுத்து விற்றால் நீங்களே மார்க்கெட் அல்லது ஆன்லைன்னில் விற்கலாம் . இலையை விற்கலாம் அல்லது எண்ணையாக மாற்றி விற்கலாம் எண்ணையாக விற்கும்பொழுது . விதை கிலோவாக விற்கும்பொழுது 150 முதல் 200 ரூபாய்க்கும் என்னை 700 முதல் 800 வரை கிலோ விற்கப்படுகிறது . அதிக கார , உப்பு தன்மையுள்ள நிலம்  மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நல்ல விளைச்சல் தராது. நல்ல இயற்கை உரங்கள் போடுவதால் நல்ல பலன் 
 கிடைக்கும் .


துளசி செடியின்  வகைகள் 


கிருஷ்ணா துளசி (Ocimum sanctum)



இந்தியாவின் அணைத்து பகுதிகளிலும் காணலாம் கிருஷ்ணா துளசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்களையும்  தருகிறது. இந்த வகை துளசி எண்ணெயை தயாரிக்க பயன்படுகிறது, இது கொசு விரட்டியாகும், மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படுகிறது 


ட்ருத்ரிஹா துளசி  (Drudriha Tulsi)


இந்த வகை முக்கியமாக வங்காளம், நேபாளம், சட்கான் மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் காணப்படுகிறது. இது தொண்டை வறட்சியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது கை, கால்களின் வீக்கம் மற்றும் வாத நோயை குணப்படுத்துகிறது.


ராம் / காளி துளசி (Ram/Kali Tulsi)


சீனா, பிரேசில், கிழக்கு நேபாளம் மற்றும் வங்காளம், பீகார்,  மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் இவ்வகை துளசி காணப்படுகிறது. தண்டு ஊதா மற்றும் இலைகள் பச்சை நிறத்தில் இருக்கும்  மற்றும் இத்துளசி அதிக நறுமணமுள்ளவை. இது அதிக மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது, அதாவது அவை அடாப்டோஜெனிக், பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. இது வெப்ப  பகுதிகளில் நன்றாக வளர்கிறது.


பாபி துளசி: (Babi Tulsi)



பஞ்சாபில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களில்  காணப்படுகிறது. தாவரத்தின் உயரம் 1-2 அடி உயரம். இலைகள் 1-2 அங்குல நீளம், ஓவல் மற்றும் கூர்மையானவை. இதன்  சுவை கிராம்பு போன்று இருக்கும் .


துகாஷ்மியா துளசி: (Tukashmiya Tulsi)


இந்தியா மற்றும் பெர்சியாவின் மேற்கு பகுதிகளில் காணப்படுகிறது. தொண்டை கோளாறுகள், அமிலத்தன்மை மற்றும் தொழுநோய் ஆகியவற்றைக் குணப்படுத்த இது பயன்படுகிறது.


அமிர்தா துளசி: (Amrita Tulsi)


இந்தியா முழுவதும் காணப்படுகிறது. இது அடர்த்தியாக இருக்கும் இருண்ட ஊதா இலைகளைக் கொண்டுள்ளது. இது புற்றுநோய், இதய நோய், கீல்வாதம், நீரிழிவு நோய் மற்றும் முதுமை மறதி சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.


வன துளசி (ஓசிமம் கிராடிசிம்): (Vana Tulsi)



இந்தியாவின் இமயமலை மற்றும் சமவெளிகளில் காணப்படுகிறது. தாவரத்தின் உயரம் மற்ற வகைகளை விட உயரமாக இருக்கும். இது மன அழுத்தத்தைக் குறைத்தல், நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது மற்றும் வயிற்றுப் புண்களுக்கு எதிர்ப்பை மேம்படுத்துதல் போன்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இலைகள் காரமான  கிராம்பு போன்ற சுவைதரும் .


கபூர் துளசி (Kapoor Tulsi)


இது  முக்கியமாக அமெரிக்காவில் வளர்க்கப்படுகிறது, ஆனால் பண்டைய காலங்களிலிருந்து இந்தியாவிலும் பயிரிடப்படுகிறது. இது முக்கியமாக மிதமான காலநிலையில் வளர்க்கப்படுகிறது மற்றும் வளர எளிதானது. உலர்ந்த இலைகள் தேநீர் தயாரிக்கப் பயன்படுகின்றன.

Post a Comment

0 Comments