Skip to main content

உழவோன் -2

                               2. வேட்டையாடிகள்



அப்பொழுது வாழ்ந்த மனிதனுக்கு உணவு என்பது பெரும்பாலும் வேட்டையாடி உண்பதுதான் அல்லது வேறு ஏதாவது விலங்கு வேட்டையாடி சாப்பிட்ட மிச்சத்தை  எடுத்து வந்து சாப்பிடுவது . அவ்வப்பொழுது அந்த பகுதியில் கிடைக்கும் பழங்கள் . நாடோடியாக  நடக்க ஆரம்பித்த பொழுது எல்லா நேரமும் உணவு கிடைப்பதில்லை . அப்பொழுது மாற்றுவழியாக பழங்கள் , காய்கறிகளை உன்ன ஆரம்பித்தான் . ஆனால் அதிலும் சிக்கல் ஓன்று இருந்தது . எது நல்ல காய்கறி , எது விஷமற்ற பழம் என்று கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது . இதை கண்டுபிடிக்க முடியாமல் இறந்த மனிதர்கள் ஏராளம் இன்றைக்கு நீங்கள் கத்தரிக்காய் சாம்பார் சாப்பிட்டு நீங்கள் சாகவில்லையென்றால் அதற்கான உயிர் இழப்பு என்பது லச்சக்கணக்கில் என்பதை மறந்துவிடாதீர்கள் . எப்படி நல்ல உணவு என்பது கண்டுபிடிப்பது . உட்காந்து யோசித்தான் இயற்கை உதவி செய்தது . பறவைகளை  பார்த்தான் அது எந்த மரங்களில் உட்காந்து பழங்களை சாப்பிட்டதோ அதை சாப்பிட்டான் . எந்த மரத்தில் அணில் உட்கார்ந்து பழங்களை சாப்பிட்டதோ , அதை சாப்பிட்டு அணில் கடித்த பழம் மிகவும் சுவை என்றோம் . சாப்பிட்டு அதன் விதையை போட்டால் திரும்ப முளைக்கும் என்பது தெரியாது . அப்போதைய பசி தீர்ந்தால் சரி அடுத்த இடத்தை பார்த்து நகர்ந்து கொண்டிருந்தான் .


 


மனிதன் உலகின் அனைத்து இடத்திற்கும் சென்றுவிட்டான் என்று நினைத்த இயற்கை கிட்டத்தட்ட  இருபதாயிரம் வருடங்களுக்கு ஒரு ஆட்டம் ஆடியது தன்னுடைய வெப்ப நிலையை ஒரு இரண்டு டிகிரி  கூட்டியது  . விளைவு பணிகள் உருக ஆரம்பித்தன பனி உருகி நதிகள் உருவாக ஆரம்பித்தன . கண்டங்கள் பிரிய ஆரம்பித்தன , அமெரிக்க அதோடு காணாமல் போனது . அமெரிக்க வெஸ்புகியோ அல்லது கொலம்பஸ்ஸோ வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான் . இங்கே ஆஸ்திரேலியாவிற்கு அதே நிலைமைதான்

 

பருவநிலை மாற்றத்தின் விளைவாக தொடர்ந்து அவனால் நடக்க முடியவில்லை . என்ன செய்யலாம் ஓர் இடத்தில் தங்கலாம் என முடிவெடுத்தான் . இவ்வாறு மூணு லட்சம் வருடங்களுக்கு முன்னால் தொடங்கிய பயணம் ஒருவராக பதினைந்தாயிரம் வருடங்களுக்கு முன் நிறைவு பெற்றது . ஒரு விஷயத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது என்பது மனிதனிடம் இயற்கையாகவே இருந்தது . ஒரு மானை எப்படி வேட்டையாடுவது , அதே போன்று யாணை , எருமை போன்றவற்றையும் எப்படி கொல்வது போன்றவற்றை குகையில் ஓவியமாக வரைந்து வைத்தான் . தீயை எப்படி உருவாக்கலாம் ஓவியங்கள் வரைந்தான் , எல்லா இடங்களிலும் சிக்கி முக்கி கல் கிடைக்காது . ஒரு குச்சியை எடுத்து மரத்துகள்கள் இடையே வைத்து தேய்த்தான் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டாலும் அதிலிருந்து அவனுக்கு நெருப்பு கிடைத்தது . அதையும் அவன்  ஓவியமாக தேய்த்தான் .

 


குளிர் பயங்கரமாக இருந்தது , பரிணாம வளர்ச்சி காரணமாக அவனை காத்து வந்த ரோமம் உதிர்ந்திருந்தது , என்ன செய்யலாம் இறந்து கிடந்த விலங்குகளின் தோலை எடுத்து ஒடுத்திக்கொண்டான் . அதே சமயம் மனிதனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான் அவன் பெயர் நாய் . ஆரம்பத்தில் அவனை பார்த்து குறைத்து துரத்தியது . அவன் சாப்பிட்ட மிச்ச உணவை நாய்க்கு போட்டான்  அதை சாப்பிட்டு அவனுக்கு வாலாட்டியது . ஆபத்தான விலங்குகள் வந்தால் ஆக்ரோஷமாக குரைத்தது , நன்கு நாய்கள் ஓன்று சேர்ந்து அந்த விலங்கை துரத்தியது அன்று முதல்  மனிதனும் நாயும் முஸ்தபா முஸ்தபா என்று பாட்டு பாடினார்கள் .

 

ஒரு இடத்தில் தங்கலாம் ஆனால்  எங்கே தங்குவது இனிமேல் குகையிலும் தங்க முடியாது குடும்பம் பெரிதாகிவிட்டது அதேசமயம் வெட்ட வெளியிலும் தங்க முடியாது  மழை வெயில் , விலங்குகள் ஆபத்து உண்டு . ஒரு பாதுகாப்பு கூடாரமாக இருந்தால் , இலை  தழைகளை கொண்டு ஒரு கூடாரம் அமைத்தான் , வெய்யில் மழைக்கு சரி குளிருக்கு , பெரிய மாமத் வகை யானைகளை கொன்று அதன் தோல் பயன்படுத்தப்பட்டது . அடுத்த பிரச்சனை நீர், நீர் நிலைகள் , ஆறுகளின் அருகில் கூடாரங்களை அமைத்தான் . இதனால் இரண்டு வசதிகள் கிடைத்தன ஓன்று நீர் , மற்றொன்று நீரை தேடி வரும் விலங்குகளை  வேட்டையாடினான் .

 

வேட்டையாடி மிருகங்களும் இவனை தாக்க  வருமல்லவா  அவர்கள் தங்கியிருக்கும் பகுதியை சுற்றி வேலியை அமைத்தார்கள். அப்படியிருந்தும் அவனை மிருகங்கள் தாக்க வந்தன  , இரவு நேரத்திலும் காவல் தேவை என்று உணர்ந்த மனிதன் கையில் தீப்பந்தத்தோடு இரவு பகலாய் காவல் காக்க ஆரம்பித்தான். எல்லாம் சரி அவனுடைய மொழி எப்படி இருந்திருக்கும் , எப்பொழுது அவன் பேச ஆரம்பித்திருப்பான் . சமீபத்திய ஆய்வின்படி நியாண்டர்த்தல்  மற்றும் சேபியன்ஸ் இரண்டு இணங்களுமே பேச தெரிந்தவர்களாக இருந்தனர் சுமார் ஒரு லட்சம் ஆரம்பித்து ஐம்பதாயிரம்  வருடங்கள் வரை நன்றாக பேச தெரிந்த மனிதர்களாக உருமாறி இருந்தனர் .  நாம் இப்பொழுது பயன்படுத்தப்படும்  சில வார்த்தைகள் ஆதி காலத்திலிருந்தே பயன்படுத்தியதை ஆகும் . உஸ்ஸ்... எதாவது விலங்குகள் வந்தால்  அமைதியாக இருங்கள் பயன்படுத்தப்பட்டது . ஹே , ப்ச்ச்,  போன்ற வார்த்தைகளை ஆரம்பகால மனிதன் பயன்படுத்திருக்கலாம் . பறவைகளோட சப்தங்களும் மனிதன் பேச ஆரம்பிப்பதற்கு ஒரு உந்துதலாக இருந்திருக்கலாம் .

 

அதே சமயத்தில் இந்த காலகட்டத்தில் எழுத்து என்பது உருப்பெறவில்லை அனைத்துமே அவை ஓவியங்களாகத்தான் இருந்தன . அதே நேரம் புள்ளிகள் அங்கங்கே ஓவியங்களின் அடியில் தென்பட ஆரம்பித்தன . அதுவே பிற்காலத்தில் கோட்டோவியங்களாகி  எழுத்துக்களாக உருமாறின

 


எவ்வளவு நாட்கள்தான்  நாம்  வேட்டையாட போவது . வேட்டையாடினாலும் , அந்த உணவை எடுத்து வருவதற்குள் போதும் போதும்  என்றாகிவிடுகிறது . கழுகு முதல் கழுதைப்புலி வரை போராடவேண்டும் . கழுகு கூட பரவ இல்லை கழுதைப்புலி கடைசி வரை சண்டைபோட்டு இரையை தூக்கி கொண்டு ஓடிவிடும் . இதற்கு என்ன வழி செய்யலாம் என்று விட்டத்தை பார்த்து யோசித்து கொண்டிருந்த ஒருவனிடம், அவன் மனைவி எருமை மாடு இப்படி  விட்டத்தை பார்த்து உட்காந்திருப்பதற்க்கு பதிலா எதையாவது வேட்டையாடி கொண்டு வரலாம்ல என்று கேட்டிருப்பானு நினைக்கிறேன் . டக்குனு அந்த ஐடியா அவனுக்கு வந்துருச்சு . ஏன் சாஃப்ட் ஆன  விலங்குகளை நமே வளர்க்கலாமே , அமைதியான விலங்குகள் என்று எதுவுமே கிடையாது , கண்டவுடன் அவனை மாடுகள் தாக்காது . நான்கு பேர் சேர்ந்து துரத்தி பிடித்துவிடலாம்

அப்புறம் என்ன பல வழிகளில் மாடுகளை பிடிக்க முயற்சி செய்தான் சில இழப்புகளுக்கு பின் மாடு வளர்ப்பும் அவனுக்கு கை கூடியது உலகத்தில் முதல் தொழில் மாடு வளர்ப்பு இனிதே தொடங்கியது . அடுத்து ஆடு , கோழி , பன்றி  இப்படி அடுத்த கட்டத்திற்கு நகர தொடங்கினான் .  இப்படி ஆற்றங்கரை ஓரமாக நாகரிகம் வளர ஆரம்பித்தது . இது வரைக்கும் மனித நாகரிகம் மெதுவாகத்தான் வளர்ந்தது . அடுத்து அவன் கண்டுபிடித்த ஒரு முக்கியமான கண்டுபிடிப்பால் நாகரிகம் ராக்கெட் வேகத்தில் பறக்க போகிறது . அந்த கண்டுபிடிப்பின் பெயர் சக்கரம் . அதுக்கு முன்னாடி நாம ஒருத்தவங்களை பார்க்க வேண்டியுள்ளது அவர்கள் பெயர் ஹோமோ லெஸ்பியன்ஸ் - தமிழில் சொல்ல வேண்டுமென்றால் பெண்கள் .


Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...