
• விதை நேர்த்திக்கு விதைகளை டிரைக்கோடெர்மா விரிடே 4 கிராம் (அ) சூடோமோனாஸ் ப்ளுரோசென்ஸ் மற்றும் 10 கிராம் (அ) கார்பெண்டாசிம் 2 கிராம்/கிலோ விதை.
• மஞ்சள் தேமல் நச்சுயிரி நோயை பரப்பும் வெள்ளை ஈயை கட்டுப்படடுத்த விதை நேர்த்திக்கு இமிடாகுளோப்ரிட் 5 மிலி/கிலோ விதை.
• விதை கடினமாக்ககுதலுக்கு 100 பிபிஎம் ஜிங்சல்பேட் (10 கிராம்/1000 லிட்டர் தண்ணீர்) கரைசலில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதில் 1/3 பங்கு தண்ணீர் விதை முளைப்பதை அதிகரிக்கும் மற்றும் வறட்சியை தாங்கும்.
• போதிய அளவு பயிர்களின் எண்ணிக்கையை பராமரிக்க விதைப்பு இயந்திரம் மூலம் விதைக்க வேண்டும்.
• காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கு பயிரிடவும்.
• சிறிய நீர் தெளிப்பான்களை அமைக்க வேண்டும். (மத்திய/மாநில அரசுகளின் மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தில் கொடுக்கப்படும்)
• களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லி தெளித்தல் (அ) விதைத்து 15-20 நாட்களுக்கு முன்பு ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.
• பூச்சிகளை கண்காணிக்க விளக்கு பொறி (1 பொறி/ஏக்கர்) வைக்க வேண்டும்.
• நன்கு பூ எடுக்கும் தருணத்தில் இலைவழியாக தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழக பயறு அதிசயம் (Pulse Wonder) 2 கிலோ/ஏக்கர் தெளிக்க வேண்டும்.
• மஞ்சள் தேமல் நச்சுயிரி நோயை பரப்பும் வெள்ளை ஈயை கட்டுப்படடுத்த இமிடாகுளோப்ரிட் 17.8 SL 100 மிலி/ஏக்கர் (அ) தையாமீத்தாக்ஸாம் 75 WS 1 கிராம்/3 லிட்டர் தெளிக்கவும்.
• காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த குளோராட்ரானில் பிரோல் 18.5% SC 60 மிலி/ ஏக்கர் தெளிக்கவும். 10% பொருளாதார சேத நிலையை தாண்டும் போது இது பரிந்துரைக்கப்படுகிறது.
• வறட்சி மேலாண்மைக்கு 2 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு + 100 பிபிஎம் போரிக் அமிலம் பரிந்துரைக்கப்படுகிறது (அ) இலை வழியாக பிபிஎப்எம் 1 சதவிகித கரைசல் (10 மிலி/லிட்டர் தண்ணீர்) தெளிப்பதன் மூலம் மானாவாரி சாகுபடியில் வறட்சியை கட்டுப்படுத்தலாம்.
0 Comments
Smart vivasayi