Ad Code

நெற்பயிரை தாக்கும் நோய்கள் - நெற்பழ நோய்

Diseases affecting rice crop - Rice disease


அனைத்து வகை வெப்ப மண்டலப் பகுதிகளிலும் வெப்பம் குறைந்து ஈரம் அதிகமாகும் தருணங்களில், நெற்பயிரில் பூக்கும் நேரத்தில், பூக்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று நெற்பழ எனும் நோயாகும். இளம் ஆரஞ்சு நிறத்தில் உள்ள பஞ்சுபோன்ற அமைப்புடன் நாட்கள் ஆக ஆக மஞ்சள் நிறமாக மாறும் தன்மையுள்ள இந்த நோய் 35% வரை நமக்கு விளைச்சலை கெடுக்கக்கக்கூடிய வகையில் உள்ளது. இதனை சரிசெய்ய
1. வயலை சுத்தமாக களைச்செடிகள் இன்றி வைத்திருக்கலாம்.
2.அதிகத் தண்ணீர் இல்லாமல் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நிலத்தை வைத்திருக்கலாம்.
3.அதிக தழைச்சத்து கொடுக்கக்கூடிய இடுபொருட்களை தரைவழி தராமல் இருக்கலாம்.
4.இந்தப் பூஞ்சைத் தொற்றை சரி செய்ய அரை கிலோ துளசி இலையை 10 லிட்டர் தண்ணீரில் நன்கு அரைத்த பின்பு இட்டு 12 மணி நேரம் ஊற வைத்த பின்பு வடிகட்டி, மாலை வேளையில் தெளிக்கலாம். அதனை ஐந்தாவது நாள் திரும்பவும் தெளிப்பது நல்லது.
5. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் பத்து லிட்டருக்கு 50 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது சூடோமோனஸ் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம் ஆறாவது நாள் திரும்பவும் தெளிக்கலாம்.

Post a Comment

0 Comments