Skip to main content

இயற்கை முறையில் தர்பூசணி சாகுபடியில் கவனிக்க வேண்டியவை

Things to look out for in watermelon cultivation Organically 




தர்பூசணி - Watermelon



தர்பூசணி ஊடுபயிராக 10 டன்னும் அதுவே தனிப்பயிராக 15 டன்னும் மகசூல் வரும் நிறைவான வருமானத்தை கொடுக்கக்கூடியது . கோடையில் அறுவடைக்கு வருவதுபோல் பயிரிட்டால் மேலும் நாள் வருமானம் கிடைக்கும் .

தர்பூசணி ரகங்கள் - Varieties of watermelon




தர்பூசணி ரகங்கள் என்றுபார்த்தால் பூசா பேதனா, அம்ருத் அர்கா, மானிக், நியூ ஹாம்ப்ஷைர், மிட்ஜெட், சுகர் பேபி, அஷாஹ ஜயமாடோ, அர்கா ராஜஹன்ஸ், துர்காபுரா மீதா, கேசர், அர்கா போன்ற ரகங்கள் உள்ளன 

தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய குளம் தர்பூசணி ரகம் உள்ளது இதை PKM -1 ரகம் என்றும் அழைக்கப்படுகிறது இது ஒரு அதிக மகசூல் தரக்கூடிய ரகமாகும் 

இயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி





1. டிசம்பர் மாதம் கடைசி வாரம் முதல் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை நடவு செய்யலாம். நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 1.75 கிலோ விதைகள் தேவைப்படும். அந்த விதைகளை ஒரு கிலோவிற்கு 10 கிராம் சூடோமோனாஸ் மற்றும் 30 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் அரிசி வடிகட்டிய கஞ்சியுடன் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து நடவு செய்யலாம்.

2.நடவு வயலில் அடியுரமாக இரண்டு முதல் நான்கு டிராக்டர் லோடு மட்கிய தொழுவுரம் மற்றும் 60 கிலோ சாம்பல் , 2 கிலோ சூடோமோனாஸ் கலந்து பரப்பி முறையாக இரண்டு தடவை உழுத பின்பு 4 அடி அகலமும் ஒரு அடி உயரமும் உள்ள மேட்டுப்பாத்தி அமைக்கலாம்.





3.சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் அதன் தொடர்ச்சியாக வைரஸ் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், எட்டு நாட்களுக்கு ஒருமுறை ஆரம்பம் முதல் முடிவு வரை
 பூச்சி விரட்டிகளை (வேப்ப எண்ணெய் கரைசல், பொன்னீம் கரைசல், ஐந்திலைக் கசாயம், கற்பூர கரைசல் ,அக்னி அஸ்திரம்) பயன்படுத்துவது நல்லது.

4.கருவாட்டுப் பொறி (20 ) ,
பழ ஈ காண பொறி(7) மற்றும் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி(2) வைப்பது மிகவும் நல்லது.

5.போதுமான அளவு சாம்பல்சத்து கொடுப்பது பழத்தின் சிறப்பான வளர்ச்சிக்கும், சுவைக்கும் காரணமாக அமையும். நல்ல சாம்பல் தூளை
20 நாட்களுக்கு ஒரு முறை இலைகள் மேல் காலை பணி முடிந்தவுடன் தூவி விடுவது  நல்லது.

6.பழ ஈ தாக்கத்தை குறைக்க பாதிக்கப்பட்ட பழங்களை உடனடியாக நிலத்தில் இருந்து அப்புறப்படுத்துவதும் அதற்கான பாதுகாப்பு திரவங்களை உடனடியாக தெளிப்பது பழ ஈ தாக்கத்தை குறைத்து நல்ல பழம் கிடைக்க உதவும்.

7.ஒரு ஏக்கரில் குறைந்தபட்சம் 10 டன் பழங்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுவது மிகவும் சிறந்தது.

Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...