Ad Code

தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை சுருள் பூச்சி- உயிரியல் கட்டுப்பாடு

coconut cultivation - rugose pest  management 



தென்னை விவசாயிகள் கடந்த சில வருடங்களாக அதிகம் உச்சரிக்கும் வார்த்தை ரூகோஸ் என்ற வெள்ளை சுருள் பூச்சி. இதன் தாக்கம் தென்னையில் பெருமளவு மகசூலை குறைத்திருக்குகிறது அதே சமயம் தென்னை மட்டுமின்றி  வாழை மற்றும் சப்போட்டா போன்ற பழப்பயிர்களையும் தாக்குகிறது .


இந்த வெள்ளை சுருள் பூச்சி தென்னை ஓலைகளில் பரவி வேகமாக இனப்பெருக்கம் செய்து தென்னை மரம் முழுவதும் பரவி ஓலையில் உள்ள சாற்றினை உறுஞ்சி ஒரு மெழுகு ஒரு தேன் திரவத்தை வெளியிடுகின்றன இது மட்டை முழுவதும் பரவி அதன் மேல் கேப்னோடியம் என்னும் கரும்பூஞ்சாணம் படா்கிறது. இதனால் ஒளிசேர்க்கை நடைபெறாமல் மரத்தின் சத்துக்கள் குறைவதுடன் தேங்காயின் அளவு மற்றும் தரம் குறைந்து மகசூலும் குறைகிறது அதே சமயம் பெரும்பாலும் இந்த பூச்சி குட்டை மற்றும் நெட்டை வீரிய ஒட்டு ரகங்களை அதிகம் தாக்குகிறது.


கிரைசோபெர்லா இரை விழுங்கி 


இந்த சமயத்தில் இந்த உயிரியல் முறை கட்டுப்பாடு மட்டுமே சிறந்த பலன்களை தருகிறது  இதன் தாள்களை ஸ்டாப்லர் பின் வைத்து தென்னை ஓலையில் பின் செய்துவிட்டால் மூன்றே நாட்களில் பொரித்து பெருமளவு இனப்பெருக்கம் செய்து வெள்ளை சுருள் பூச்சிகளை அழித்துவிடும் 



கிடைக்கும் இடங்கள் 


 தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் பிரிவில் கிரைசோபெர்லா முட்டைகள் தயார்நிலையில் உள்ளது. (1எக்டருக்கு 1000முட்டைகள் ). 1எக்டருக்கான கிரைசோபெர்லா முட்டைகளின் விலை ரூ. 300 மட்டுமே.. முட்டைகள் தேவைப்படும் விவசாயிகள் 9594939508 என்ற எண்ணிற்கு Dr.செல்வராஜ் அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் விவசாயிகளுக்கு உடன் அனுப்பித்தரப்படும் என தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் Dr.சாந்தி அவர்கள் தெரிவிக்கிறார். இந்த கிரைசோபெர்லா முட்டைகளை தென்னை மரங்கள் மட்டுமன்றி மற்ற எல்லா பயிர்களையும் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் அதன் முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்களையும் அளிக்க பயன்படுத்தலாம்.

Post a Comment

0 Comments