Ad Code

கோடையில் மலர்கள் பராமரிப்பும் பாதுகாப்பும் செய்ய வேண்டியவை என்ன

What to do for the care and protection of flowers in the summer



மல்லிகை பூ  (Jasmine)

மல்லிகை செடி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூக்க துவங்கும் . செடிகளை முதலாண்டில் நட்டு பூக்கள் மகசூல் எடுத்திருந்தாலும் இரண்டாவது ஆண்டிலிருந்துதான் ஒரு அளவான மகசூல் இருக்கும் நல்ல வளர்ச்சியான மொட்டுக்களை அதிகாலையில்தான் பறிக்கவேண்டும் . இந்த நேரத்தில் மொட்டில் அல்லது இளம் மொட்டில் புழுக்களின் தாக்கம் அதிகம் இருக்கும் இதனை கட்டுப்படுத்த 10 லிட்டருக்கு 50 மில்லி பெவேரியா பேசியான தெளிக்கலாம் .


கனகாம்பரம் பூ (Kanakambaram flower)

பெதுவாக இந்த காலகட்டத்தில் கனகாம்பரத்தில் அசுவினி பூச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஒன்றுடன் ஓன்று ஒட்டி ஒரு அடைபோல் ஒட்டி சாற்றினை உறுஞ்சி எடுத்துவிடும்  இதை கட்டுப்படுத்த வெர்டிசிலியம் லக்கானி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம் .  அடுத்து வாடல் நோய் கனகாம்பர பூச்செடியில் தென்பட்டால் சூடோமோனஸ் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து கொடுக்கவேண்டும் . 


முல்லை பூ 

இந்த காலகட்டத்தில் இலை தின்னும் புழுக்களின் தாக்கம் இருக்கும் அதனை கட்டுப்படுத்த பேசில்ஸ் துருஞ்சியன்சிஸ்  10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து கொடுக்கவேண்டும்



செண்டு மல்லி

சிவப்பு சிலந்தி பூச்சிகளோடு தாக்குதல் தென்படலாம் இவை செண்டுமல்லி பூக்களின் சாற்றை உறிஞ்சும்  இதனை கட்டுப்படுத்த வெர்டிசீலியம் லக்கானி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து கொடுக்கவேண்டும் . மேலும் சிவப்பு நிறத்தில் இலை புள்ளி நோய் தாக்கம் இருந்தால் சூடோமோனஸ் தெளிக்கலாம் .


மேற்கூறிய அனைத்தும் தெளித்த ஏழாவது மற்றும் பதினாலாவது நாளும்  மற்றும் மாலை 4 மணிக்கு மேல் தெளிப்பது நல்ல பலன்களை தரும் 

Post a Comment

0 Comments