Skip to main content

தென்னை- கேள்வி - பதில்

 



நான் எனது தோட்டத்தில் தென்னை மரம் ஒரு ஏக்கரில் நடலாம் என முடிவெடுத்துள்ளேன் ஆனால் அதைப்பற்றி எனக்கு தெளிவான செய்முறை இல்லை எனக்கு உதவுங்கள்.

பதில்-1 


தூய நாட்டு கன்றுகளை நடுங்கள். பல வருடங்கள் ஆனாலும் வறட்சி மற்றும் நோய் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளஉம். 25 அடி விட்டு நடவும். ஓரத்தில் இருக்கும் மரங்கள் நெருக்கமாக நடலாம். அருகாமையில் வேறு வீடோ மற்றவர்கள் இடமோ இருந்தால் கொஞ்சும் தள்ளி நடுங்கள்.
முடிந்தவரை மாட்டு சாணம் போன்ற இயற்கை உரங்களை போட்டு வரவும்.

தென்னை கன்று வளரும் நேரத்தில் ஊடு பயிராக மக்கா சோளம் விதைக் கலாம்.

பதில்-2


மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
இது பல்லாண்டு பயிர் என்பதால் அவசர அவசரமாக செய்யக்கூடாது.


1. நாற்றை நாமே உருவாக்க வேண்டும்.
அந்த பகுதியில் உள்ள நல்ல மரத்திலிருந்து நெற்றுகளை சேகரித்து நாற்று தயாரிக்க வேண்டும்.
நல்ல மரம் என்றால் குறைந்தது 15 ஆண்டு வயதானதாகவும், எப்போதும் சுமாராக 35 மட்டைகளோடு வருடம் முழுவதும் பாளை விடும் மரமாக இருப்பது நல்லது.

நாற்று விடும்போது படுக்கை வாக்கில் தேங்காயை வைத்தால் முளைப்பு திறன் அதிகம்.
நாற்று நான்காவது இலை வந்தபின் நடவு செய்யுங்கள்.

2. குழிகள் எடுப்பதிலும் கவனம் வேண்டும். நல்ல ஆழம் அகலம் வேண்டும்.
3'×3' என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை 4'×4' சிறந்தது.
ஆழமாக தோண்டப்பட்ட குழிகளில் விரைவில் பலனை கொடுக்கும்.
(2 1/2' குழி மரங்கள் பலன் கொடுக்க 5 வருடங்கள் ஆகுமாம். அதே கன்று 3' குழி என்றால் 3 1/2 ஆண்டுகளில் பலன் கொடுக்கும். இது விவசாய கல்லூரி பரிந்துரை. )

3. இடைவெளி 25' என்பது பொதுவானது.
ஆனால் 30' சிறந்தது. எல்லா மரங்களும் சீராக காய்க்கும்.


பதில்-3

ஒரு ஏக்கருக்கு 70 கன்றுகள் தேவைப்படும்
25அடிக்கு 25 அடி இடைவெளியில் 3 அடிx3அடிx3அடிக்கு குழிகள் எடுக்கவும் குழிகள் 15 நாட்கள் காய வைக்கவும்

பின்பு 2 அடி உயரத்திற்கு குழி எடுத்த மண்ணுடன் 5 கிலோ தொழு உரம் அல்லது கம்போஸ்ட் உரம் ( குறிப்பு சாணி உரமெனில் நன்கு மக்கி இருக்க வேண்டும் இல்லையெனில் காண்டாமிருக வண்டு தாக்கும்) 1/2கிலோ வெப்பம் புண்ணாக்கு ஒரு கிலோ கல் உப்பு
கரையான் உள்ள பகுதி யெனில் 50 கிராம் மாலத்தியான் 5% பவுடர் கலந்து
2 அடி உயர்த்திற்கு குடியை நிரப்பி நன்றாக மிதித்து விடுங்கள்
கன்றுகள் தேர்வு
நாட்டு ரகங்கள் பூச்சி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை
இல்லையெனில் குட்டைxநெட்டை ( DXT)ரகம் தேர்வு செய்யவும்
மெலே சொன்னவைகள் கிடைக்கவில்லையெனில் நெட்டைxகுட்டை TxD ( இந்த ரகத்தில் மட்டைகள் தேங்காய் பாரம் தாங்காமல் சரியும் குறை உள்ளது)
தேர்வு செய்யப்படும் கண்றுகளின் நெற்றுக்கள்
மிகவும் பெரிதாகவும் மிகவு சிறியதாக இல்லாமல் நடுத்தரமானதாக இருக்கும் கண்றுகளை தேர்வு செய்யவும்
மேலும் நெற்றிலிருந்து குருத்து வெளிவரும் பகுதி அடிப்பகுதி ந்ன்றாக தடிமனாக இருக்க வேண்டும்
நன்கு வளர்ந்த ஒரு மட்டை விரிந்த ஓராண்டு வளர்ந்த கண்றுகளை தேர்வு செய்யவும்
கன்றுகள் வாங்கி வ்ந்தவுடன் உடனே நடவு செய்ய வேண்டாம் நிழலில் 4நாட்கள் வைத்து நீர் ஊற்றி transport shock நீக்கிய பின் நடவு செய்யவும்
நடவு
மண் நிரப்புக குழியில் நெற்று அளவிற்க்கு குழி பறித்து நெற்றில் குருத்து வெளிவரும் இடம்வரை புதைத்து நன்றாக மண்ணை மிதித்து விடுங்கள்
கன்றுகள் கற்றில் ஆடா வண்ணம் ஒவ்வொறு கண்றுக்கும் இரண்டு குச்சி களை நட்டு கண்றுகள் ஆடாவண்ணம் கட்டி விடுங்கள் குழியினை நிரப்ப வேண்டாம்
நீர் பாய்ச்சுங்கள்
மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீர் பயச்சவும்
மழை பெய்தால் நீர் பாய்ச்ச வேண்டாம்

பதில்-3

1 அடிசதுர குழி 1.5 அடி ஆழமாக எடுத்து குறைந்தது 1 மாதம் ஆற விடவும்.

கன்று வைக்கும் போது கன்றின் தண்டு ஆரம்பிக்கும் பகுதி தரை பகுதியில் இருக்க வேண்டும், வேர்பகுதி மட்டுமே மண்ணிற்கு உள்ளே இருக்க வேண்டும்.


குழிக்கு உள்ளே கன்று வைப்பது போன்று செய்யக்கூடாது.

சிறிய வட்டம் போட்டு நீர்பாசனம் செய்யலாம் ஆரம்பத்தில்.

3 அடி தள்ளி 1க்கு 1.5 ஆழ சதுரக்குழி எடுத்து அதில் நீர்பாசனம் செய்தால் பயிர் எடுக்கிறதா என்று கவனித்து எடுத்துக்கொண்டால் அருகில் தரையில் நீர்பாசனத்தை நிறுத்தி விட்டு குழியில் நீர்பாசனம் செய்யலாம்.

குழிமுறை ஈரப்பதம் அதிக நாட்கள் தாக்குபிடிக்கும், வாரம் ஓரு முறை நீர்பாசனம் செய்தால் கூட போதுமானது, குறைந்த நீரை பயிரை ஆரோக்கியமான முறையில் வளர்க்கலாம்.


மேலும் மரம் வளர வளர குழியை நகர்த்தி நகர்த்தி 12 அடி வரை அதாவது தென்னை மட்டை நிழல் படும் பரப்பை தாண்டி நன்கு வெயில் படும் பகுதிக்கு குழியை கொண்டு சென்று விடலாம், மரம் நன்கு வளர்ந்த பின்பு குழி ஓரே இடத்திலேயே இருக்கும், குழியை நகர்த்த வேண்டிய தேவை இருக்காது.
புரட்டாசி மாத முடிவில் குழியை மூட வேண்டும் மீண்டும் தை மாதத்தில் குழியை திறக்க வேண்டும்.

பதில்-4

60 அடிக்கு ஒருமரம்

+ + + + +

60 அடிக்கு ஒன்று
+ + + + + +
முதல் 30 அடி மற்றது 60 அடி கடைசி 30
+60 + + + +
+ + + + + +

23 மரம் ஏக்கருக்கு.

இடையில் 6 அடிக்கு ஒன்று பாக்கு ஆறு லைன் (30 அடி இடைவெளி பாதி பதினைந்து ,தென்னையில் இருந்து 12 ,18 அடியில் வரிசைக்கு 30+30=60*3=180
தென்னைக்கு தென்னை இடையில் கோகோ
° ° ° ° ° ° ° °
° ° ° ° ° ° ° °
-
+ - - +
-
° ° ° ° ° ° °
° ° ° ° ° ° °
100 மரம்

4 கோகோ மத்தியில் ஒரு முருங்கை மொத்தம் 125

இப்படி கலப்பு பயிராக கூட்டுபண்ணை அமைக்கலாம்.

ஆண்டு வருமானம் தென்னை23×2000=46000
பாக்கு 180×1000=180000
கோகோ 125 ×2000=250000
முருங்கை 125+1200=150000
ஆக 6,25,000... வெறும் தென்னை எனில் 64×2000=128000₹
கூட்டுபண்ணை 5 லட்சம் கூடுதல் வருமானம்





Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...