Skip to main content

பயிர்களில் வைரஸ் நோய் தாக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்



பயிர்களில் வைரஸ் நோய் தாக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்


தமிழகத்தில் பெரும்பாலும் இறவயில் பயிரிடப்படும் பயிர்களிலும் மானாவாரியாக பயிரிடப்படும் பயறுவகை பயிர்களில் மற்றும் தோட்டக்கலை பயிர்களான பப்பாளி முதலிய பயிர்களிலும் மிகவும் எதிரியாக இருப்பது வைரஸ் நோய் தாக்கம் ஆகும்.


எந்த ஒரு பயிருக்கும் முறையான அடியுரம், ஆரம்பகால பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட எந்த ஒரு பயிரிலும் வைரஸ் நோய் தாக்காது . கொறானா வைரஸ் கூட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மனிதர்களையே பெரிதும் தாக்கியது. அதுபோலதான் பயிர்களிலும்.

1)ஒவ்வொரு பயிருக்கும் பயிர் செய்யும் முன்பு நிலத்தினை முறையாக முக்கால் அடி ஆழம் வரை இறங்குமாறு உழவேண்டும் .இதனால் மண்ணில் அரை அடி ஆழத்தில் இருக்கும் வைரஸ் கிருமிகளின் கிருமிகளை வெயிலில் வைத்து அழித்து விடலாம். 

2)நிலத்தின் தன்மைக்கேற்ப அடி உரம் கொடுக்க வேண்டும்.
அடி உரம் கொடுக்கும்போது *முறையான அளவு வேப்பம் புண்ணாக்கு(100 கிலோ ஒரு ஏக்கருக்கு) சூடோமோனஸ்,(2 கிலோ)* போன்றவற்றை கலந்து தரைவழிப் பரப்பி, உழுது பின்பு விதை நடவேண்டும்.


3) நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுத்து நடவேண்டும். வீரியமற்ற வயதான பழைய நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத விதைகளை அல்லது கன்றுகளை பயிரிடுவதால் எளிமையாக வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகும்.


4)விதைத்த அல்லது கன்று நட்ட நாளிலிருந்து முறையான இயற்கை இடுபொருட்களை தொடர்ந்து தரை வழி தர வேண்டும். பெரும்பாலான பயறுவகை பயிர்களில் நிறைய பகுதிகளில் முதல் 20 நாட்கள் வரையும் பப்பாளி போன்ற தோட்டக்கலை சாகுபடியில் மூன்று மாதம் வரைகூட எந்த இடு பொருளும் கொடுக்காமல் விவசாயிகள் வளர்க்கின்றனர் . மண்ணில் சத்து கிடைக்காத போது காற்றின் மூலம் பரவும் மற்றும் நிலத்தில் ஏற்கனவே தங்கியுள்ள வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு பயிர்கள் சாகின்றன.
எனவே *வைரஸ் நோய் வராமல் தடுக்க முறையான உழவு, நல்ல திடமான விதை தேர்வு ,நல்ல போதுமான அளவு ஊட்டச்சத்து மேலாண்மை,முறையான பாசனம்* போன்றவை முக்கியம்.

*வைரஸ் கிருமிகளை தீர்ப்பதற்கு*


முதலில் நிலத்தில் எறும்புகள் இருந்தாலும் அவற்றை வசம்பு கரைசல் தெளித்து அகற்றிவிடவேண்டும். எறும்பு புற்றுகள் இருந்தால் சுடு தண்ணீர் ஊற்றி அளிக்கலாம். ஏனெனில் எறும்புகளே வைரஸ் கிருமிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்பவை ஆகும்.
2) ஆரம்பகால பாதுகாப்புக்காக ஐந்தரை லிட்டர் தண்ணீருடன் *முக்கால் கிலோ அளவுள்ள வேகவைக்காத மஞ்சளை* அரை லிட்டர் தண்ணீர் சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்து ஆற வைத்து அதிலிருந்து *அரை லிட்டர் திரவத்தை 10 லிட்டர் தண்ணீருடன்* கலந்து செடிகள் மேல் தெளிக்கலாம். இதனை *ஐந்து நாட்களுக்கு ஒருமுறை* செய்வது நல்லது.ஆரம்பகால வைரஸ் தாக்கத்திற்கு இது பெரிதும் எதிர்பாக அமையும்.


3) மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிர்களில் 

*பெர்பெக்ட்(perfect)* எனப்படும் தாவர சாறு கரைசலை *லிட்டருக்கு 2 மில்லி* என்ற வீதத்தில் கலந்து தெளிக்கலாம். இதையும் *ஐந்து நாட்களுக்கு ஒரு முறை* தொடர்ந்து தெளிக்க வேண்டும் .இம்முறைகளை கடைபிடிக்கும் போது போதுமான அளவு மீன் அமிலம், இஎம் கரைசல், பஞ்சகாவியா ,ஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருட்களை *வாரமிருமுறை தொடர்ந்து தரைவழி தரவேண்டும்*. பத்து லிட்டருக்கு அரை லிட்டர் என கலந்து பஞ்சகாவியா வையும் 75 மில்லி என மீன் அமிலத்தையும் கலந்து தெளிக்கலாம்




Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...