Skip to main content

கோழியினங்களில் முதல் உதவி மூலிகை மருத்துவம்











கோழி அம்மை நோய் (Fowl pox)
கோழி அம்மை நோய், கோழியினங்களை தாக்கும் ஒரு நச்சுயிரி நோயாகும். இந்நோயை தடுப்பதற்கு தடுப்பு மருந்துகள் பயன்படுத்த வேண்டும். நோய் கண்ட நிலையில் மூலிகை முதல் உதவி மருத்துவம் நல்ல பலன் தரும்.
10 கோழிகள் அல்லது 5 வான்கோழிகளுக்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்
வெளிப்பூச்சுக்கான மருந்து

பூண்டு -  10 பல்துளசி இலை-  50 கிராம்வேம்பு இலை-  50 கிராம்மஞ்சள் தூள் -  10 கிராம்சூடம்  -  50 கிராம்சின்ன சீரகம் (இடித்து சலித்தது)-  20 கிராம்

சிகிச்சை முறை :
மேற்கண்ட பொருட்களை நன்கு அரைத்து அக்கலவையுடன் விளக்கெண்ணெய் – 100 மி.லி மற்றும் வேப்பஎண்ணெய் – 100 மி.லி. சம அளவில் கலந்து சிறிது சூடு காட்டி பாதிக்கப்பட்ட இடங்களில் பூச வேண்டும்.
உட் செலுத்துதல் (வாய் வழியாக)

சின்ன சீரகம் -  10 கிராம்மஞ்சள் -  5 கிராம்மிளகு -  5 எண்ணிக்கைபூண்டு-  5 பல்வேப்பிலை-  10 இலைகள்துளசி-  10 இலைகள்

சிகிச்சை முறை :
மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கவும்.மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உள்ளே செலுத்த வேண்டும்.

வெள்ளைக் கழிச்சல்  நோய் (Ranikhet Disease)
வெள்ளைக் கழிச்சல் நோய், கோழியினங்களை தாக்கி மிகவும் பாதிப்பு எற்படுத்தும் ஒரு நச்சுயிரி நோயாகும். முதல் வாரத்திலும் அதை தொடர்ந்தும் வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பு செய்ய வேண்டும். நோய் கண்ட நிலையில் கீழ்கண்ட மூலிகை மருத்துவம் பயன்படுத்தலாம்.
10 கோழிகள் அல்லது 5 வான் கோழிகளுக்குத் தேவைப்படும் மூலிகை மற்றும் பொருட்கள்:

சின்ன சீரகம் -  10 கிராம்மிளகு -  5 கிராம்மஞ்சள் தூள்-  50 கிராம்கீழாநெல்லி இலை -  50 கிராம்வெங்காயம்-  5 பல்பூண்டு -  5 பல்

சிகிச்சை முறை : வாய் வழியாக
சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்க சிறு சிறு உருண்டைகளாக உட் செலுத்த வேண்டும்.

கழிச்சல் (Enteritis)
10  கோழிகள் அல்லது 5 வான் கோழிகளுக்கு ( வாய் வழியாக)

சின்ன சீரகம் -  10 கிராம்கசகசா -  5 கிராம்வெந்தயம்-  5 கிராம்மிளகு-  5 எண்ணிக்கைமஞ்சள் தூள்-  5 கிராம்பெருங்காயம்-  5 கிராம்

மேற்கண்ட பொருட்களை கருக வறுத்து இடித்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் – 5 பல் பூண்டு – 5 பல் இவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
நன்கு அரைத்த பொருட்களை இடித்த பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையைத் தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கவும்.

Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...