Ad Code

தென்னை வைத்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் புதிதாக இலைகள் வரவில்லை. என்ன செய்ய வேண்டும்













தென்னை கன்று  பருவத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது
தூரில் மண் எடுத்து விட்டு தேங்காய் மேலே தெரியும் படி நடவு செய்யனும் குருத்து வருவது கால தாமதம் ஆகும் இந்த கண்ணு நல்லா இருக்கு..காத்திருக்கவும் அதிகமாக தண்ணீர் கொடுக்க கூடாது அவசரப்பட்டு உரம் போட்டுடாதீங்க மழை காலம் வரட்டும்

பயப்பட வேண்டாம் இது மழை காலம். இப்படித்தான் இருக்கும். சரியாகிவிடும் மீண்டும் தழைக்கும்.

வைத்து 1மாதம் தானே ஆகிறது.வேர்பிடித்து வளர சிறிது காலம் ஆகும்

இப்போதைக்கு எந்த உரமும் வேண்டாம்.மண்ணை லேசாக கிளறி விடவும்.

குருத்தில் மண் விழுந்து அடைக்காமல் பார்த்துக்கொள்ளவும். தென்னம்பிள்ளை நடவு போடும் போது வெளியே வந்த வேர்களை அறுத்து விட்டு நடவு செய்தால் புது வேர் விரைவில் வரும். வளர்ச்சி நன்கு இருந்தால்
மாதம் ஒரு முறை ஒரு புது இலை வரும்

 நீர்பாசனம் அதிகம் செய்கிறீர்கள், 2 அடி தள்ளி 1 அடி சதுரம் 1.5 அடி ஆழம் உள்ள சதுர குழி எடுக்கவும்.

குழியினுள் வெடிப்பு குடுத்த பின்பு குழியில் நீர்பாசனம் செய்யவும்.

ஈரம் தேங்காமல் இருக்க வட்டப்பாத்தி கட்டி விடவும்!

Post a Comment

0 Comments