Skip to main content

தென்னை வளர்ப்பு முறைகள் மற்றும் உரமிடுதல்

Coconut Cultivation Methods and Fertilization



மரத்தை சுற்றி தரைப்பகுதியில்:






1.ஒவ்வொரு மரத்திற்கும் குறைந்தபட்சம் 10 அடி விட்டமுள்ள வட்ட பாத்தி எடுத்துக் கொள்ள வேண்டும் .அந்த வட்ட பார்த்தியின் உள்பகுதியில் உள்ள கடைசி தூரத்தில் சிறிதாக குழிதோண்டி ஒரு மரத்திற்கு குறைந்தபட்சம் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு தூளை 3 மாதங்களுக்கு ஒரு முறை உள்ளே போட்டு மூடி விடவும்.


2.  ஒவ்வொரு தென்னை மரத்திற்கு குறைந்த அளவாக  10 கிலோ ஊட்டம் ஏற்றிய  தொழு உரம்


மரத்திலிருந்து ஐந்தடி அல்லது 4 அடி தொலைவில் சிறிதாகத் தோண்டி உள்ளே போட்டு மூடி தண்ணீர் கொடுக்கவும். இதை  மாதம் ஒரு தடவை  அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை  செய்யலாம் செய்யலாம்.


3.  வாரத்திற்கு  ஒரு தடவை  தண்ணீர் தருவதாக இருந்தால், இரண்டு முறை மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரலாம்.ஒருமுறை இ.எம் கரைசல் 30 ml ஒரு முறை மீன் அமிலம் 30 ml என தேவையான தண்ணீரில் கலந்து தரைவழி தரவும்.


5 நாட்களுக்கு ஒரு தடவை  பாசனம் தருவதாக இருந்தால் மாதம் இருமுறை ஜீவாமிர்தம், இரு முறை மீன் அமிலம் ,இருமுறை இஎம் கரைசல் தரைவழி தரவேண்டும்.


4. 15 நாட்களுக்கு ஒருமுறை எருக்கு கரைசல் ஒரு மரத்திற்கு 5 லிட்டர் வீதம் மாதம் இருமுறை அல்லது வாய்ப்பு கிடைத்தால் மூன்று முறை தரைவழி தரலாம்.


5. 200 லிட்டர் டிரம்மில் 180 லிட்டர் தண்ணீருடன் 20 கிலோ கடலைப்புண்ணாக்கு கலந்து 3 நாட்கள் ஊற




வைக்க வேண்டும். அந்த கரைசல் நன்கு ஊறல் எடுத்து அழுகிய வாடை வீசும் நிலையில் அதனை கலக்கிவிட்டு ஒரு மரத்திற்கு 3 லிட்டர் வீதம் தரைவழி தரவும்.


6.  மாதம் மாதம் தவறாமல் ஒரு மரத்திற்கு குறைந்தபட்சம் 10 மில்லி அல்லது 10 கிராம் அளவுள்ள சூடோமோனாஸ் என்ற பூஞ்சாணக் கொல்லியை போதுமான தண்ணீரில் பாசன நீராக கலந்து மரத்தை சுற்றி ஊற்றி விடவும்.


7.  காண்டாமிருக வண்டு தாக்கத்தை குறைக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை  ஆமணக்கு பொறியை ஒரு ஏக்கருக்கு 7 எண்ணிக்கையில் வைக்க வேண்டும். 


8. ஒரு வயதுள்ள மா தென்னை மரங்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் மட்டுமே தண்ணீர் தரவும் அதற்குமேல் உள்ள மரங்களுக்கு அதிகபட்சம் செம்மண் நிலங்களாக இருந்தால் 60 லிட்டர் தண்ணீரும் களிமண்ணாக இருந்தால் 40 லிட்டர் தண்ணீரும் தரலாம் .அடுத்த தடவை  நீர் பாய்ச்சும்போது குறைந்து  விட்டதை உறுதிப்படுத்திய பின்பு மீண்டும் பாசனம் செய்யவும்.


தென்னை மரத்தின்மேல்:


1. 2 மாதத்திற்கு ஒருமுறை வெட்டு முடிந்த பின்பு ஒரு மரத்திற்கு 10 மில்லி சூடோமோனஸ் திரவத்தை 5 லிட்டர் தண்ணீருடன் கலந்து மட்டைகள், குருத்து மற்றும் பாலை உள்ள மரத்தின் மேல் பகுதியில் தெளித்து விடவும்.


2. குறைந்த பட்சம் மூன்று லிட்டர் எருக்கு கரைசலை இந்தப் பகுதியில் தெளித்து விடலாம்.


3.  ஒவ்வொரு தென்னை மரத்திற்கும்  2 கிலோ வேப்பம் புண்ணாக்கு தூளை மட்டைகளின் உள்பகுதியில் பிரித்து கொட்டி விடவும்.


4. தற்பொழுது காய்க்கும் மரம் என்றால் ஒரு மரத்திற்கு ஒரு கிலோ கல் உப்புடன் 100 கிராம் மஞ்சள் தூள் கலந்த கலவையை 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டைகளின் உள்பகுதியில் கொட்டி விடலாம்.

5. தவறாமல் வருஷத்திற்க்கு ஒரு தடவையாவது அல்லது இரண்டு முறையாவது  மரத்தை பழுதுபார்த்து கசடுகளை நீக்க வேண்டும்.


6. அதிக கருப்பு காண்டாமிருக வண்டு அல்லது சிவப்பு கூன்வண்டு தாக்கமுள்ள பகுதிகளில் ஒரு மரத்திற்கு 10 மில்லி மெட்டாரைசியம் 10 மில்லி சூடோமோனாஸ் திரவத்தை 3 லிட்டர் தண்ணீருடன் கலந்து மரத்தின் குழிகளில் ஊற்றி 


Comments

  1. தென்னை வளர்ப்புக் கட்டுரைகள்! - https://pachaiboomi.in/tag/coconut/

    ReplyDelete

Post a Comment

Smart vivasayi

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...