Skip to main content

துலக்கமல்லி (செண்டுமல்லி) பயிரிடும் முறை மற்றும் பயன்கள் - Cultivation method and uses of Tulakkamalli (Sentumalli)

Cultivation method and uses of Tulakkamalli (Sentumalli)





செண்டுமல்லி வளர்ப்பதற்கு மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும்.

சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது.

துலக்கமல்லி எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :




எம்.டி.யு 1, உள்ளூர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வகைகள், பூசா நரங்கி கெய்ன்டா, பூசா பசந்தி கெய்ன்டா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

துலக்கமல்லியை அக்டோபர் – ஜனவரி மாதங்கள் வரை பயிர் செய்யலாம்.

மண்




மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண்ணுக்கு மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.

விதையளவு

ஒரு எக்டருக்கு 1.5 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதைநேர்த்தி




விதைகளை 200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றங்கால் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கடைசி உழவின் போது மக்கிய தொழு உரம் இட்டு மண்ணோடு நன்கு கலக்கி விடவேண்டும். விதைநேர்த்தி செய்த விதைகளை 15 செ.மீ இடைவெளியில் வரிசையாக பாத்திகளில் விதைத்து மண் கொண்டு மூடி, உடனடியாக நீர்ப் பாய்ச்சவேண்டும். 7 நாட்களில் முளைப்பு வந்து விடும்.




நிலம் தயாரித்தல்

சாகுபடி நிலத்தில், ஒன்றரை டன் அளவுக்கு மண்புழு உரம் அல்லது குப்பை எருவை இட்டு, இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பின்பு, நிலத்தின் அமைப்பிற்கு ஏற்ப பார் அமைக்க வேண்டும்.

விதைத்தல்

ஒரு மாத வயதான நாற்றுக்களை தான் நடவிற்கு பயன்படுத்த வேண்டும். வரிசைக்கு வரிசை 45 செ.மீ, செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்




நட்டவுடன் ஒரு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். நிலத்தில் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

துலக்கமல்லி உரங்கள்:

ஒரு எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

நட்ட 45 நாட்கள் கழித்து எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தினை இட்டு மண் அணைக்கவேண்டும் அல்லது களை எடுக்கும் போது ஒரு கைப்பிடி அளவு மண்புழு உரத்தை வேர் பகுதியில் வைத்து, மண் அணைக்க வேண்டும்.

துலக்கமல்லி பாதுகாப்பு முறைகள்:

களை நிர்வாகம்

8 மற்றும் 30-ம் நாட்களில் களையெடுக்க வேண்டும். பின்பு தேவைக்கேற்ப களை எடுக்க வேண்டும். நட்ட 30 நாட்களில் செடியின் நுனிப்பகுதி அல்லது முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் கிளைகள் அதிகம் தோன்றி அதிகமான பூ மொட்டுகள் உண்டாகும்.

பயிர் பாதுகாப்பு

வேர் அழுகல் நோய்

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு, 1 கிராம் பெவிஸ்டின் மருந்து கலந்து செடியினைச் சுற்றி ஊற்றிவிடவேண்டும்.

இலைப்புள்ளி நோய்

இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த பெவிஸ்டின் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

சிவப்பு சிலந்தி பூச்சிகள்

சிவப்பு சிலந்தி பூச்சிகளை கட்டுப்படுத்த கெல்தேன் என்ற மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு, ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை

நட்ட 60ம் நாளில் இருந்து பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். 80 முதல் 90 சதவீதம் வரை மலர்ந்த பூக்களை 3 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 18 டன் பூக்கள் வரை மகசூல் கிடைக்கும்.

பயன்கள்

துலக்கமல்லியை கொள்முதல் செய்து அதை பதப்படுத்தி ஆயிலாக மாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
துலக்கமல்லி பொடி மருந்து தயாரிக்க உதவுகிறது. இதன்மூலம் தயாரிக்கப்படும் மாத்திரை கண் பாதிப்பை குணமாக்குகின்றது.
துலக்கமல்லி பூ கர்நாடகா மாநிலத்தில் அனைத்து விழாக்களுக்கும் முக்கிய பூவாக கருதப்படுகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்திற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  19)  மீன் வளர்ப்பு - Click Here   20) மரம்_வளர்ப்போம்_பணம்_பெறுவோம்_விகடன் - Click Here 

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளரும் நமக்கு அதிக தக்காளியும் தரும் . சரியான குரோபேக் தேர்ந்தெடுக்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.