Ad Code

காய்கறியில் அசுவினி தாக்குதலுக்கு, பிரண்டை கசாயம்


 காய்கறியில்  அசுவினி 




இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள்  இலையின் அடிப்பாகத்திலும் குருத்துப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். பெரும்பாலும் ஆண்டு முழுவதும் காணப்படும் இப்பூச்சி,  மஞ்சள்  கலந்த பச்சை நிறமாகக் காணப்படும். இளம் தாவரங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவை இலைச் சாற்றை உறிஞ்சுவதால் தாக்கப்பட்ட இளங்குருத்து மற்றும் இலைகள்  சிறுத்தும், சுருங்கியும், தடித்தும் வளைந்தும்  காணப்படும். பூச்சிகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் பரப்பில்  மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும். இதனால் எறும்புகளின் நடமாட்டம் தாக்கப்பட்ட செடிகளில்  அதிகமாகக் காணப்படும்.


இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறையில் பிரண்டை  கசாயம் மூலம் கட்டுப்படுத்தலாம் அதை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம் 
 *தேவையான பொருட்கள்*



பிரண்டை - 3 கிலோ
சோற்றுக் கற்றாழை- 3 கிலோ 
புகையிலை -1/2 கிலோ.
கோமியம்     -10 லிட்டர்







 *செய்முறை*

மேற்கண்ட அளவுகளில் இந்த மூன்றையும் உரலில் நன்கு இடித்து, 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியத்துடன் கலந்து, மூன்று நாட்களுக்கு ஊற வைக்கவும், மூன்று நாட்களும் காலை மாலை இருவேளையும் வலது புறமாக  கலக்கி விடவும்.

 *பயன்படுத்தும் முறை* 
மூன்று நாட்கள் கழித்து 10 லிட்டர் டேங்கிற்கு,நன்கு வடிகட்டி 300 மில்லி லிட்டர் அளவில் கலந்து தெளிக்கவும். பூச்சித் தாக்குதல் பொறுத்து,ஒரு தெளிப்பிற்கும் மறு தெளிப்பிற்கும் இடையே மூன்று நாள் இடைவெளி விட்டு மூன்று முறை வரை தெளித்தால், அஸ்வினி பாதிப்பிலிருந்து பயிர் களை மீட்கலாம்.பிரன்டை கசாயத்தினை ஆறு மாத காலம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

Post a Comment

0 Comments