Skip to main content

நன்னீர் மீன் வளர்ப்பில் நீர் மற்றும் மண் மேலாண்மை

Water and soil management in freshwater aquaculture



மீன் வளர்ப்பில் , மீன் இருப்பு செய்யப் பட்டுள்ள குளத்தின் நீர் மற்றும் மண்ணின் தன்மை முக்கிய பங்கு வகிக்கின்றன . நீர் மற்றும் மண் ஆகியவற்றில் ஏற்படும் இயற்வேதியல் மாற்றங்கள் பலவகை களில் மீன் வளர்ச்சியினைப் பாதிப்பதாக அமைந்து விடுகின்றன . மீன்களின் வளர்ச்சிக்கும் , பிழைப்புத் திறனுக்கும் , குளத்தின் நீர் மற்றும் மண்ணின் தரத்தை பராமரிப்பது மிகவும் அவசியமானதாகும் . எனவே , மீன் வளர்ப்புக் குளத்தில் நீர் மற்றும் மண்ணின் தரத்தை அறிவது மிக முக்கியமானதாகும் .


 குளத்து நீரின் தரம்:


 வெப்பநிலை :


மீன்கள் குளிர் இரத்த பிராணிகளாகும் . வெப்ப இரத்த பிராணிகளைப் போல் அல்லாமல் இவைகள் சூழ்நிலைக்கேற்ப தன் உடல் வெப்ப நிலையை மாற்றிக் கொள்ள முடியும் . மீன்களுக்கு 28 செ . முதல் 30 செ . வரை உள்ள வெப்பநிலையில் இருப்பது ஏற்றதாகும் . வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை மேற்கொள்ள கீழ்க்காணும் யுத்திகளைக் கையாளலாம் . 


1.தண்ணீரின் நிறத்தின் தரத்தைப் பராமரித்தல்
2. தண்ணீரின் ஆழத்தைக் கூட்டுவதற்கு நீரின் கொள்ளளவை அதிகப்படுத்துதல்.
3.காற்றுப் புகுத்திகளை பயன்படுத்துதல் 


தண்ணீரின் கார அமிலத் தன்மை PH:


 கார அமிலத் தன்மை என்பது தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் அயனிகளின் அளவை குறிப்பதால் குளத்து நீரின் அமிலத் தன்மையையோ அல்லது காரத்தன்மையையோ தெரிந்து கொள்ளப் பயன்படுகிறது . மீன்களின் வளர்ச்சிக்கும் , உற்பத்திக்கும் ஏற்ற கார அமில அளவு ( 6 முதல் 8.5 வரை ) ஏற்படுத்தப்பட வேண்டும் . மேலும் , குறைந்த கார அமிலத் தன்மையில் கரியமில வாயு மேலோங்கிய கார்பனாக இருப்பதால் கார்பனேட்டுகள் 
மற்றும் பைகார்பனேட்டுகளின் அளவு கூடும் . ஒளிச் சேர்க்கையின் போது அதிகளவு கரியமிலவாயு பயன்படுத்துவதால் மதிய வேளையில் கார அமிலத்தன்மை குறைகிறது . எனவே , கார அமிலத்தன்மை இதற்கேற்றவாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் . கார அமிலத் தன்மையில் ஏற்படும் திடீர் மாற்றம் மீன்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கும் . நாளொன்றுக்கு 0.4 என்ற வித்தியாசத்தில் கார அமிலத்தன்மை மாறலாம் .


 உயிர்வளி ( Oxygen ):


 வளர்ச்சியை அதிகம் பாதிக்கும் காரணிகளுள் மிக முக்கியமானது பிராணவாயு அல்லது உயிர்வளி ஆகும் . அநேக ஊட்டப் பொருட்களின் அளவு மற்றும் கரைதிறனை உயிர்வளி நேரடியாக பாதிக்கிறது . குறைந்த பிராணவாயு மீன்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் . எனவே , உயிர்வளி அளவு எப்போதும் 3.5 பி.பி.எம் . என்ற அளவுக்கு மேல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம் . பிராணவாயு உற்பத்திக்கு சேர்க்கை அதிக பங்களிக்கிறது . அதிக ஜீவன்கள் பிராணவாயுவை சுவாசத்திற்குப் பயன்படுத்துகின்றன . பிராணவாயு மதிய நேரங்களில் அதிகரித்தும் , இரவு நேரங்களில் குறைந்தும் , இரட்டை நிலையில் காணப் படுகிறது . நுண்ணுயிர் மிதவைத் தாவரங்கள் குறைந்து காணப்படுவது , உண்ணப்படாத உணவு மற்றும் பிற கழிவுகள் அடி மண்ணில் அதிகரிப்பது போன்றவை மறைமுகமாக உயிர்வளி தேவையை கூட்டுகிறது . இதனால் , குளத்து நீரின் அடிப்பகுதியில் பிராணவாயு தேவை அதிகரித்து , ஊடுருவும் ஒளியின் அளவும் ஒளிச்குறைந்து , கீழ்மட்ட நிலையில் கரைந்துள்ள உயிர்வளியின் அளவு குறைக்கப்படுவதற்கு ஏதுவாகிறது . பாசி மற்றும் நுண்ணுயிர் மிதவைகள் அதிக அளவில் மடியும்போதும் உயிர்வளி உற்பத்தி குறைகிறது . உயிர்வளி குறைவு ஏற்படும் போது பொதுவாக மீன்கள் தண்ணீரின் மேல் மட்டத்தில் வருவதை கவனிக்கலாம் . இக்குறையினை நீக்கிட இறந்த நுண்ணுயிர் மிதவைகளை நீருடன் அகற்றி புதிய நீரினைச் சேர்த்தல் வேண்டும் .


 நீர் கலங்கள்:


 நீர் நிலையில் ஒளி ஊடுருவலைத் தடுக்கும் பொருட்களின் அளவே நீர் கலங்களைக் குறிக்கிறது . வளர்ப்பு குளங்களில் நுண்ணுயிர்களின் காரணமாகவோ , மிதக்கும் மண் துகள்களின் காரணமாகவோ , நீர் கலங்கல் ஏற்படலாம் . நீர் கலங்கல் ஊடுருவும் ஒளியைக் குறைப்பதன் மூலம் ஒளிச்சேர்க்கையின் அளவைத் தடுக்கிறது . கலங்கல் அதிகமாகும் போது உயிர்வளி அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது . நுண்ணுயிர்கள் மிதமான அளவில் இருப்பது விரும்பத்தக்கது என்றாலும் , களிமண் துகள்கள் காணப்படுவது நல்லதல்ல . ஏனென்றால் , இது மீன்களின் செவுளை அடைத்து சுவாசத்துக்கு பங்கம் விளைவிக்கலாம் . மண் அரிப்பு ஏற்படுவதால் அதிக களிமண் துகள்கள் நீரில் காணப் படுவதற்கு பிரதான காரணமாகிறது . ஆலமும் ( Alum ) , ஜிப்சமும் ( Gypsum ) இந்த களிமண் துகள்களை நீக்குவதற்கு சிறந்த இடுபொருட்கள் ஆகும் . ஆலமும் , ஜிப்சமும் இடும்போது , அது அமிலத் தன்மையை ஏற்படுத்துமாதலால் , சுண்ணாம்போடு சேர்த்து பயன்படுத்துவது நன்மை பயக்கும் . மீன் வளர்ப்பு குளங்களில் 25 - 40 செ.மீ. செச்சி தட்டு என்ற அளவில் நீர்கலங்கல் இருப்பது நல்லது . அதிக செச்சி தட்டு அளவுகள் குறைவான உற்பத்திக்கு வழிவகுக்கும் . ஆகவே , குளத்தில் உரமிடுதல் வேண்டும் . அதே நேரம் , மிகக் குறைவான செச்சி தட்டு அளவுகள் அதிக உயிர் பொருட்களைக் கொண்டிருந்து உயிர்வளி குறைவுக்கு வழிவகுக்கும் . ஆகவே , குளத்து நீர் மாற்றம் செய்ய வேண்டும் .


 நீரின் நிறம்:


 குளத்து நீரின் நிறம் அதில் அடங்கியுள்ள நுண்ணுயிர்கள் , கரைந்த தாதுக்கள் , களிமண் துகள்கள் , அங்ககப் பொருட்கள் மற்றும் நிறமிகள் போன்றவைகளின் மீது சூரிய ஒளி படுவதினால் காணப்படுகிறது . ஆய்வகக் கருவிகள் இல்லாத பட்சத்தில் நீரின் நிறத்தை வைத்து , அதன் தரத் தன்மையை மதிப்பீடு செய்யலாம் . இளம் பழுப்பு மற்றும் மஞ்சள் பழுப்பு நிறம் , இளம் பச்சை , அடர் பச்சை மற்றும் இருண்ட பச்சை , அடர் பழுப்பு இளம் மஞ்சள் புகைத் தன்மையுடைய வெள்ளை கலங்கிய நீர் மற்றும் தெளிவான நீர் ஆகிய பல நிறங்களில் நீர் காணப்படலாம் . இவற்றுள் , இளம் பழுப்பு , மஞ்சள் பழுப்பு நிறமுள்ள நீரில் மீன்கள் நன்கு வளரும் . அதே நேரம் இளம் பச்சை நிறமுள்ள நீரை எளிதாக பராமரிப்பு செய்யலாம் . மேலே குறிப்பிடப்பட்டுள்ள , மற்ற நிறமுள்ள குளத்து நீர் மீன் வளர்ப்புக்கு சிறந்ததாக அமையாது . 


குளத்து மண்ணின் தரம்:


 மண்ணின் கார அமிலத்தன்மை ( pH ) :


மண்ணில் கார அமில அளவு 6-8.5 ஆக இருத்தல் வேண்டும் . இந்த அளவு குறையும் போது மண்ணின் தேவைக்கேற்ப சுண்ணாம்பு இட வேண்டும் . மண்ணின் கார அமில அளவு 6-7 ஆக இருந்தால் 0.3-0.5 டன் / எக்டர் என்ற அளவில் சுண்ணாம்பு இட வேண்டும் .


 குளத்தின் அடிமண்:


 குளத்தின் அடிமட்டத்தில் பயன்படாத உணவுகள் , உயிரிகளின் கழிவுகள் ஆகியவை படிந்து காணப்படும் . குளத்தின் அடியில் தரமான மண் இருந்தால் தாதுப் பொருட்களின் ( Mineralisation ) இயக்கத்தால் சத்துப் பொருட்கள் தொடர்ந்து மண்ணிலிருந்து வெளிப்படும் . இச்செயலுக்கு உயிர்வளி தேவைப்படுகிறது . குளத்தில் அனங்ககப் பொருட்களின் அளவு அதிகரித்தால் மண்ணில் உயிர்வளி அளவு குறைந்து ஹைட்ரஜன் சல்பைடு , அம்மோனியா , மீத்தேன் ஆகிய வாயுக்கள் உருவாகின்றன . களிமண் கலந்த மணலினை அடிமட்டமாகக் கொண்ட குளத்தில் , மீன் வளர்ப்பு ஒரே சீராக இருக்கும் . ஒரு நல்ல மீன் வளர்ப்பிற்கு குளத்தின் மண் , சத்துப்பொருட்கள் நிறைந்ததாகவும் , தாதுப் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடியதாகவும் , உணவு சங்கிலியை ( Food Chain ) தொடர்ந்து நிகழ்விப்பதாகவும் இருக்க வேண்டும் . 


மீன் வளர்ச்சிக்கு குளத்தின் மண் மற்றும் நீரின் முக்கியத்துவத்தினை உணர்ந்து உரமிடுதல் , செயற்கை உணவிடுதல் , நீர் மாற்றம் ஆகிய மேலாண்மை நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் . எனவே , மீன் வளர்ப்பு குளங்களின் நீர் மற்றும் மண் வளத்தினை நன்கு ஆராய்ந்து அவைகளை சீரான மீன் வளர்ச்சிக்கு உகந்தவையாக மாற்றினால் மீன் உற்பத்தியினை அதிகப்படுத்தலாம் .


Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...