Skip to main content

Featured Post

மாடித்தோட்டத்துக்கு ஏற்ற மாம்பழ ரகங்கள் எவை, வளர்ப்பது எப்படி?

மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு மக்களிடத்தில் எப்போதும் தாளாத ஈர்ப்பு உண்டு. இதோ, இந்த சீசனுக்கு வழக்கம்போல மாந்தோப்புகளில் மாம்பூக்கள், பிஞ்சுகளாக மாறி, காய்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லோருக்குமே தோட்டத்தில் மாம்பழங்களை விளைவித்துச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், சிலர் மாடித்தோட்டங்களில் மாம்பழங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் வளர்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், மாடித்தோட்டங்களில் என்ன விதமான மாம்பழங்களை விளைவிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . இந்த ரகங்கள் எல்லாம் சிறப்பு! ``இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. இவற்றில் வணிக ரீதியாக 20 ரகங்கள் மட்டுமே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. வட இந்தியாவில் தஷேஹரி, லாங்கரா, பாம்பே கிரீன் வகைகள்; தென் இந்தியாவில் பங்கனப்பள்ளி, நீலம், காலாபாடி, ருமானி மற்றும் மல்கோவா வகைகள்; மேற்கு இந்தியாவில் அல்போன்சா, கேசர், மான்குராட், வன்ரான், லாங்க்ரா வகைகள்; கிழக்கு இந்தியாவில் சர்தாலு, சௌசா, மால்டா போன்ற வகைகள் வ

விவசாயிகளின் வருமானத்தை எப்படி பெருக்கலாம்

Organic farming  in india 



இந்தியாவை பொறுத்தவரை சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம் . நம் மாநிலத்திலும் அதே நிலைதான் . சராசரியாக இந்தியாவில் ஒவ்வொரு விவசாயிகளிடமும் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது , இந்த அளவு விவசாய நிலத்தில் எப்படி அதிக வருமானம் பெற முடியும் என்பதை நாம் இந்த கட்டுரையில் பார்ப்போம் .


விவசாய  செலவுகளை குறைக்க இயற்கை விவசாயத்திற்கு மாறுங்கள் 


விவசாயத்தை பொறுத்தவரை உழவு செய்யும் ட்ராக்டரிலிருந்து கடைசியாக அறுவடை செய்யும் எந்திரம் வரை பணம் அதிகம் செலவு வரும் . இந்த மாதிரியான இயந்திர செலவுகளை குறைக்க அரசாங்க திட்டங்களை பயன்படுத்தலாம் . இயற்கை விவசாயமாக செய்யும் போது பல இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகளை நாமே தயாரிப்பதால் செலவு குறையும் . இதை ஒரு குழுவாகவோ அல்லது FPO கள் மூலமாகவோ செய்யும்போது இன்னும் டிராக்டர் மற்றும் இடு பொருட்கள்  செலவு இன்னும் குறையும்  நமக்கு வருமானமும் பெருகும் .


தேனீ கட்டாயமாக வளர்க்க வேண்டும் - Honebee rearing 


இயற்கை விவசாயத்தில்  தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது . தேனீ பெட்டி வைத்து வளர்க்கும் போது நமக்கு இரண்டு லாபம் ஓன்று நமக்குக்கு மகசூல் அதிகம் கிடைக்கும் அடுத்து நல்ல தேன் கிடைக்கும் . இதை விற்பனையும் செய்யலாம் தேன் கெட்டு போகாத உணவு என்பதால் பல நாட்கள் கூட வைத்திருக்கலாம். ஒரு ஏக்கருக்கு குறைந்தது 3 தேனீ பெட்டியை வாங்கி வைக்கலாம் . உங்களிடம் நிறைய இடம் இருந்தால் தேனீ வளர்ப்பை துணை தொழிலாக செய்யலாம் . 


பயிர் சுழற்சி 


இயற்கை விவசாயத்தில் லாபம் பெற பயிற்சுழற்சி முறையை கையாளுங்கள் . இது உங்கள் மண் வளத்தை காப்பாற்றும் . தொடர்ந்து ஒரே பயிரை பயிர் செய்தால் பூச்சி நோய் தாக்கங்கள் அதிகமாகலாம் , அதேசமயம் வெவ்வேறு பயிர்களை பயிர் செய்யும் போது நமக்கு வருமானம் கிடைக்கும் .


மதிப்பு கூட்டி  விற்பனை செய்லாம் - agriculture exports from india 


இயற்கை விவசாயத்தில் நீங்கள் அதிகம் லாபம் எடுக்க மதிப்பு கூட்டி விற்பனை செய்வது மிக முக்கியம் . இயற்கை விவசாயமும் மதிப்புகூட்டலும்  ஒரு சின்ன விளக்கம் . அமெரிக்காவில் விவசாய பொருட்களை இங்கிருந்து ஏற்றுமதி செய்ய சட்ட திட்டங்கள் உண்டு . இந்த பூச்சி கொள்ளிதான் பயன் படுத்தவேண்டும் இவ்வளவுதான் பயன்படுத்தவேண்டும் என்று மேற்சொன்ன சட்டப்படி ஒருவர் மரவள்ளியை பயிர் செய்து மதிப்புக்கூட்டி வைத்துள்ளார் , அதையே  நீங்கள் மரவள்ளி பயிர்ரில்  இயற்கை விவசாயம் செய்து  மதிப்பு கூட்டி வைத்துளீர்கள் என்றால் உங்களுடைய பொருள் சுலபமாக ஏற்றுமதி ஆகும் அதிக வருமானமும் கிடைக்கும் இதனால்தான் அரசாங்கத்தால் இயற்கை விவசாயம் செய்ய அதிகம் வலியுறுத்தப்படுகிறது .  


திட்டமிட்டு பயிரிடுங்கள் 


அடுத்து எந்த பயிர் தேவை அதிகம் இருக்கும் என்பதை அறிந்து அந்த பயிர்களை பயிர் செய்யலாம் உதாரணமாக நம் எல்லோருக்கும் தெரிந்தது வெங்காயம் , எப்பொழுது வேண்டுமானாலும் விலையேறும் , எனவே திட்டமிட்டு பயிரிடுங்கள் 


விவசாயமும் மாடுவளர்ப்பும் 


ஒரு மாடு இல்லாமல் இயற்கை விவசாயம் முழுமை பெறாது . விவசாயத்தில் 40 % செலவை குறைக்கும் கடேசி உழவின் போது தொழு உரம் தேவைப்படும் நம்மிடம் ஒரு மாடு இருந்தால் அது தேவை இருக்காது பூச்சி விரட்டி தயாரிக்கலாம் , பயிர் வளர்ச்சியூக்கி, தயாரிக்கலாம் நமக்கு தேவையான பால் கிடைக்கும். வியாபாரம் நோக்கமில்லாமல்  விவசாயத்திற்காக வாங்குவதால் ஒரு நாட்டு மாடு அல்லது கலப்பின மாட்டை வாங்கலாம்  கூட கொஞ்சம் காசு இருந்தால் இன்னொரு மாடு வாங்கலாம் . கன்றுகள் மூலம் நமக்கு வருமானம் கிடைக்கும் 


G.M
Smart Vivasayi



Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  19)  மீன் வளர்ப்பு - Click Here   20) மரம்_வளர்ப்போம்_பணம்_பெறுவோம்_விகடன் - Click Here 

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் மூலம் உழுது பத்

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளரும் நமக்கு அதிக தக்காளியும் தரும் . சரியான குரோபேக் தேர்ந்தெடுக்