Skip to main content

நம் வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இயற்கை பூச்சி விரட்டிகள்.

natural pesticides



ஒரு பூச்சி கொல்லி பயன்படுத்துவதால் தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிட முடியுமென்றால் முற்றிலுமாக முடியாது , அதிலிருந்து தப்பும் பூச்சிகள் பூச்சிகளை அழிக்க நாம் மறுபடியும் தெளிக்க வேண்டிவரும் , இப்படியே செய்தால் பூச்சிகள் எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்டு அழிக்கமுடியதாகிவிடும் . இப்படி பூச்சிக்கொல்லிகளை அடிக்கடி தெளிப்பதால் , மண் மலடாகிவிடும் ,நன்மை செய்யும் உயிரினங்கள் இருக்காது, சுற்றுசூழல் பாதிக்கப்படும் , மேலும் அதில் விளைந்த காய்கறிகளை சாப்பிடும் நமக்கும் கேடு வரும் . இது வீட்டு  மற்றும் மாடி தோட்டத்திற்கும் பொருந்தும் . இதையெல்லாம் தவிப்பதற்கு நாம் இயற்கை விவசாயத்திற்கு மாறலாம் , இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம் . நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுலபமாக எப்படி பூச்சி விரட்டி தயாரிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம் ,



வேப்ப இலை 



இயற்கை பூச்சி விரட்டி என்றவுடன் முதலில் நமக்கு தோன்றுவது வேப்பமரம்தான் , இது மருத்துவரீதியாகவும் , பூச்சி மற்றும் புழுக்களை விரட்டவும் பயன்படுகிறது . இது விலங்குகள் , பறவைகள் , செடிகளுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை . இந்த பூச்சிவிரட்டியை  மூணு விதமா தயாரிக்கலாம் . ஒன்னு நுனி வேப்ப இலையை நீர்ல போட்டு அதை செடிகளுக்கு தெளிக்கலாம் , வேப்பங்கோட்டை வைத்து கரைசல் செய்து பயன்படுத்தலாம் , கடைசியாக வேப்பஎண்ணெய் அதனுடன் சோப் கலந்து நீங்களே தயாரித்து தெளிக்கலாம் .


உப்பு கரைசல் 


குறைந்த செலவில் பூச்சியை விரட்டுவதில் இந்த உப்புக்கரைசல் . மிக சிறந்தது ஒரு வாளியில் நீரில் உப்பை கலந்து உங்கள் வீட்டுத்தோட்ட செடிகளுக்கு தெளிக்கலாம் (தெளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தவும் மறந்தும் செடிக்கு ஊற்றிவிடாதீர்கள் ) 


வெங்காய -பூண்டு கரைசல் 



வெங்காயத்தையும் , பூண்டையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடுங்கள் அதில் தண்ணீர் சேருங்கள் . கூட சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து காலையில் வையுங்கள் . மாலையில் பூச்சி விரட்டி தயாரிகிவிடும் . இதன் வாசம் பூச்சிகளை செடிகளிடம் நெருங்கவிடாது .



சாமந்தி பூ 


இந்த பூவில் பைரந்திரம் என்ற இயற்கையான வேதிப்பொருள் உள்ளது . வேப்பெண்ணை கரைசல் தெளிக்கும்போது அது பூச்சிகளின் செக்ஸ்வல் பகுதியை தாக்கி முட்டையிடாதபடி செய்யும்   ஆனால் இந்த சாமந்தி பூ கரைசலை தெளிக்கும்போது அது நரம்பு மண்டலத்தை தாக்கி பூச்சிகளையோ புழுக்களையோ உடனடியாக கொள்ளும் .  காய்ந்த சாமந்தி பூக்களை எடுத்துக்கொள்ளுங்கள் நீரில் பூட்டு 20 நிமிடம் கொதிக்க வையுங்கள் , சூடு குறைந்த பின்பு பாட்டிலில் போட்டு தெளிக்கலாம் . இதனுடன் வேப்பஎண்ணெய் கலந்து தெளிக்கும்போது நல்ல பலன் தரும் .


G.M

Smart Vivasayi








Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  19)  மீன் வளர்ப்பு - Click Here   20) மரம்_வளர்ப்போம்_பணம்_பெறுவோம்_விகடன் - Click Here 

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளரும் நமக்கு அதிக தக்காளியும் தரும் . சரியான குரோபேக் தேர்ந்தெடுக்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.