Ad Code

Ticker

6/recent/ticker-posts

நம் வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இயற்கை பூச்சி விரட்டிகள்.

natural pesticides



ஒரு பூச்சி கொல்லி பயன்படுத்துவதால் தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிட முடியுமென்றால் முற்றிலுமாக முடியாது , அதிலிருந்து தப்பும் பூச்சிகள் பூச்சிகளை அழிக்க நாம் மறுபடியும் தெளிக்க வேண்டிவரும் , இப்படியே செய்தால் பூச்சிகள் எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்டு அழிக்கமுடியதாகிவிடும் . இப்படி பூச்சிக்கொல்லிகளை அடிக்கடி தெளிப்பதால் , மண் மலடாகிவிடும் ,நன்மை செய்யும் உயிரினங்கள் இருக்காது, சுற்றுசூழல் பாதிக்கப்படும் , மேலும் அதில் விளைந்த காய்கறிகளை சாப்பிடும் நமக்கும் கேடு வரும் . இது வீட்டு  மற்றும் மாடி தோட்டத்திற்கும் பொருந்தும் . இதையெல்லாம் தவிப்பதற்கு நாம் இயற்கை விவசாயத்திற்கு மாறலாம் , இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம் . நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுலபமாக எப்படி பூச்சி விரட்டி தயாரிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம் ,



வேப்ப இலை 



இயற்கை பூச்சி விரட்டி என்றவுடன் முதலில் நமக்கு தோன்றுவது வேப்பமரம்தான் , இது மருத்துவரீதியாகவும் , பூச்சி மற்றும் புழுக்களை விரட்டவும் பயன்படுகிறது . இது விலங்குகள் , பறவைகள் , செடிகளுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை . இந்த பூச்சிவிரட்டியை  மூணு விதமா தயாரிக்கலாம் . ஒன்னு நுனி வேப்ப இலையை நீர்ல போட்டு அதை செடிகளுக்கு தெளிக்கலாம் , வேப்பங்கோட்டை வைத்து கரைசல் செய்து பயன்படுத்தலாம் , கடைசியாக வேப்பஎண்ணெய் அதனுடன் சோப் கலந்து நீங்களே தயாரித்து தெளிக்கலாம் .


உப்பு கரைசல் 


குறைந்த செலவில் பூச்சியை விரட்டுவதில் இந்த உப்புக்கரைசல் . மிக சிறந்தது ஒரு வாளியில் நீரில் உப்பை கலந்து உங்கள் வீட்டுத்தோட்ட செடிகளுக்கு தெளிக்கலாம் (தெளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தவும் மறந்தும் செடிக்கு ஊற்றிவிடாதீர்கள் ) 


வெங்காய -பூண்டு கரைசல் 



வெங்காயத்தையும் , பூண்டையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடுங்கள் அதில் தண்ணீர் சேருங்கள் . கூட சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து காலையில் வையுங்கள் . மாலையில் பூச்சி விரட்டி தயாரிகிவிடும் . இதன் வாசம் பூச்சிகளை செடிகளிடம் நெருங்கவிடாது .



சாமந்தி பூ 


இந்த பூவில் பைரந்திரம் என்ற இயற்கையான வேதிப்பொருள் உள்ளது . வேப்பெண்ணை கரைசல் தெளிக்கும்போது அது பூச்சிகளின் செக்ஸ்வல் பகுதியை தாக்கி முட்டையிடாதபடி செய்யும்   ஆனால் இந்த சாமந்தி பூ கரைசலை தெளிக்கும்போது அது நரம்பு மண்டலத்தை தாக்கி பூச்சிகளையோ புழுக்களையோ உடனடியாக கொள்ளும் .  காய்ந்த சாமந்தி பூக்களை எடுத்துக்கொள்ளுங்கள் நீரில் பூட்டு 20 நிமிடம் கொதிக்க வையுங்கள் , சூடு குறைந்த பின்பு பாட்டிலில் போட்டு தெளிக்கலாம் . இதனுடன் வேப்பஎண்ணெய் கலந்து தெளிக்கும்போது நல்ல பலன் தரும் .


G.M

Smart Vivasayi








Post a Comment

0 Comments