Skip to main content

Featured Post

மாடித்தோட்டத்துக்கு ஏற்ற மாம்பழ ரகங்கள் எவை, வளர்ப்பது எப்படி?

மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு மக்களிடத்தில் எப்போதும் தாளாத ஈர்ப்பு உண்டு. இதோ, இந்த சீசனுக்கு வழக்கம்போல மாந்தோப்புகளில் மாம்பூக்கள், பிஞ்சுகளாக மாறி, காய்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லோருக்குமே தோட்டத்தில் மாம்பழங்களை விளைவித்துச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், சிலர் மாடித்தோட்டங்களில் மாம்பழங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் வளர்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், மாடித்தோட்டங்களில் என்ன விதமான மாம்பழங்களை விளைவிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . இந்த ரகங்கள் எல்லாம் சிறப்பு! ``இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. இவற்றில் வணிக ரீதியாக 20 ரகங்கள் மட்டுமே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. வட இந்தியாவில் தஷேஹரி, லாங்கரா, பாம்பே கிரீன் வகைகள்; தென் இந்தியாவில் பங்கனப்பள்ளி, நீலம், காலாபாடி, ருமானி மற்றும் மல்கோவா வகைகள்; மேற்கு இந்தியாவில் அல்போன்சா, கேசர், மான்குராட், வன்ரான், லாங்க்ரா வகைகள்; கிழக்கு இந்தியாவில் சர்தாலு, சௌசா, மால்டா போன்ற வகைகள் வ

மாடித்தோட்டத்தில் அதிக விளைச்சலுக்கு 7 நாள் கவனிப்பு

terrace farming at home



இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சின்னதா மாடிதோட்டம் வைக்கவேண்டும் என்று எல்லாரிடமும் ஆசை உள்ளது . அடுக்கு மடியில் உள்ளவர்கள் கூட பால்கனியில் சின்னதாக தோட்டம் வைக்க ஆசை படுகின்றனர் . இது ஆசைக்காக மட்டுமில்லாமல் இயற்கையாக விளைந்த காய்கறிகளை உன்ன வேண்டும் என்ற விழிப்புணர்வையே காட்டுகிறது . நாம் இந்த கட்டுரையில் மாடி தோட்டத்தில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் மற்றும் அதிக மகசூல் எடுக்க 7 நாள் கவனிப்பு பற்றியும் பார்ப்போம் .




புதிதாக மாடி தோட்டம் ஆரம்பிப்பவர்களுக்கு  - terrace farming 


குரோ பேக் - Grow bag



புதுசா ஆரம்பிக்க போரிங்கான முதலில் குரோ பேக் கவனம் செலுத்துங்கள் எந்த செடி வைக்கபோகிறீர்களோ அதற்கேற்றாற்போல் தேர்ந்தெடுங்கள் , அடுத்ததாக சரியான மண் கலவை இடுங்கள் , குரோ பேக்ல் போட்டவுடன் நடுவதை விட இரண்டு நாட்கள் நீர் ஊற்றி பின்பு நட்டால் நன்றாக இருக்கும் . இந்த குரோ பேக்கை நேரடியாக தரையில் வைக்காமல் மரப்பலகை , செங்கல் வைத்து அதன் மேல் வைக்கலாம் 


ஷேடு நெட்  - shade net 


மாடித்தோட்டம் வைக்கும் பெரும்பாலோர் வெயில் அதிகம் இருக்கும் என்று ஷேடு நெட் வைப்பார்கள் , ஒரு செடி வளர்வதற்கு தேவை வெயில்தான் . பின்பு ஏன் ஷேடு நெட் போடவேண்டும்மென்றால் முதல் இரண்டு வாரத்தில் சின்ன செடிகளால் நேரடி வெயிலை தாங்கமுடியாது , மேலும் உங்களால் நீர் வாரத்திற்கு இரண்டு தடவைதான் நீர் கொடுக்க முடியும் என்ற நிலையில் வெயில் அதிகம் அடிக்கும்போது நீர் மற்றும் அதனுடன் நாம் கொடுக்கும் உரங்களும் ஆவியாகும் அதை தவிர்க்க போடலாம். 


அதிக காய்கறிகள் வர 7 நாள் கவனிப்பு 



முதல் நாள் 


இந்த முதல் நாள் உங்கள் மாடி தோட்ட பயிர்களுக்கு இயற்கை உரம் கொடுக்கவேண்டும் . இந்த இயற்கை உரத்தை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம் . 10 கிலோ மாட்டு சாணம் அதனுடன் 1 கிலோ கடலை புண்ணாக்கு , வேப்பம் புண்ணாக்கு , போன் மீல் , போன்றவற்றை தண்ணீரில் கலந்து ஒரு சின்ன ட்ரம்மில் போட்டு மூடி வைக்கவேண்டும் . தினமும் கலக்கி விட வேண்டும் 4 நான்கு நாள்களில் உங்கள் இயற்கை உரம் தயாராகி விடும் . 


இந்த உரத்தை 1 லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் ஊற்றி செடிகளுக்கு ஊற்றலாம் மாலை வேளைகளில் ஊற்றுவது நன்று காலையில் ஊற்றினால் உரம் ஆவியாகி விடும்  



இரண்டாம் நாள் 


எதுவும் தேவை இல்லை நீர் மட்டும் கொடுக்கலாம் 


மூன்றாம் நாள் 


சூடோமோனாஸ் பிளோரோசென்ஸ் இது திரவ வடிவிலோ அல்லது பவுடர் வடிவிலோ கடைகளில் கிடைக்கும் 20 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் செடிகளுக்கு ஊற்றலாம் . திரவமாக இருந்தால் 5 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து ஊற்றலாம் . இந்த சூடோமோனாஸ் செடிகளின் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது , வேர் வளர்ச்சி  மற்றும் வேர்கள் சத்துக்களை எளிதாக எடுத்துக்கொள்ள உதவும் . blight மற்றும் பூஞ்சாண நோய்கள் வராமல் கட்டுப்படுத்துகிறது மாதம் ஒரு முறை இதை செய்யலாம் .


நான்காவது நாள் 


இந்த நாள் வேப்ப இலைக்கரைசல் அல்லது வேப்ப எண்ணெய் அதனுடன் காதி சோப் கலந்து தெளிக்கலாம் 20 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம் செடிகளை தாக்கும் அணைத்து பூச்சிகளும் கட்டுப்படுத்தும் . அனால் காய்கறிகள் அறுவடை செய்யும் 7 நாட்களுக்கு முன்பு இதை தெளிக்கவேண்டாம்  ஏன் எனில் இதன் கசப்புத்தன்மை நாம் சாப்பிடும்போது கசப்புத்தன்மை தெரிய வாய்ப்புண்டு .


ஐந்தாவது நாள் 


இந்த நாள் மீன் அமிலம் கொடுக்கலாம் நாமே தயாரித்தும் கொடுக்கலாம் கடைகளிலும் கிடைக்கும் . நீங்களே தயாரிக்கிறீர்கள் என்றால் ஒரு சின்ன டிரம்மில் 1 கிலோ மீன் அமிலம் 1 கிலோ வெல்லம் கலந்து மூடி விடவும் 15 நாட்கள் கழித்து , திரவம் உருவாகியிருக்கும் அதை வடிகட்டி 2 மில்லி கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம் (எப்படி தயாரிக்கலாம் என நிறைய விடியோக்கள் உள்ளன ) இந்த மீன் அமிலம் பூச்சி நோய்  கட்டுப்படுத்துகிறது , பூக்கள் கிழே விழாமல் இருப்பதற்கு அதிகம் காய் பிடிக்க மற்றும் காய்கள் நல்ல நிறத்துடன் பெரிதாக வளர பயன்படுகிறது .


ஆறாவது நாள் 


இந்த நாளில் நீர் மட்டும் விட்டால் போதும் 


ஏழாவது நாள் 


இந்த நாள் உங்கள் காய்கறி செடியில் தேவை இல்லாத கிளைகள் குப்பைகள் இருந்தால் அகற்றிவிடுங்கள் . உங்கள் செடியை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள் , நல்ல மகசூல் கிடைக்கும் . 


உங்கள் மாடித்தோட்டத்தில் செடிகள் வளர்ப்பதற்கு மண் தேவையில்லை , அதை தவித்து கோகோ பிட் , காயர் பிட் , போன்றவற்றை பயன்படுத்தலாம் 


by

Smart Vivasayi







Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  19)  மீன் வளர்ப்பு - Click Here   20) மரம்_வளர்ப்போம்_பணம்_பெறுவோம்_விகடன் - Click Here 

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் மூலம் உழுது பத்

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளரும் நமக்கு அதிக தக்காளியும் தரும் . சரியான குரோபேக் தேர்ந்தெடுக்