Skip to main content

Why should the palm tree grow

பனை மரம் 




பனை மரம் என்று சொன்னவுடன் நமக்கு ஞாபகம்  வருவது கோடை காலத்தில் சாப்பிடும் நுங்கு சிலருக்கு சிறுவயதில் பனை மரம் ஏறியது  ஞாபகம் வரலாம் , சிலருக்கு அதன் மருத்துவ குணம் ஞாபகம் வரலாம் , சிலருக்கு தெய்வமாய் வழிபட்டது ஞாபகம் வரலாம் 90 - குழந்தைகளுக்கு ஒற்றை பனையில்  முனி பேய் இருந்தது ஞாபகம் வரலாம்  சிலருக்கு பனை விசிறி ஞாபகம் வரலாம் , சிலருக்கு பனை வெள்ளம் , சிலருக்கு பனை ஓலையில் செய்யப்பட்ட கொட்டான் கூட ஞாபகம் வரலாம் , ஏன் , பல நூற்றாண்டுகளாக நாம் பனை ஓலைகளில்தான் செய்திகளை பரிமாறி உள்ளோம் . அந்த அளவிற்கு  பனை நம் வாழ்வில் ஒன்றாக பின்னி பிணைந்தது , இந்த பனை மரத்தை பற்றி நாம் இந்த கட்டுரையில் பாப்போம் .


பனை மனிதனோடு பயணம் 



தமிழ் நாட்டின் மாநில மரமாக பனை இருக்கிறது , பனை பற்றி சற்று கூர்ந்து கவனித்தால் அது மனிதனின் வாழ்விட பகுதியை சுற்றியே காணப்படும் . தென்னையை போன்று காட்டு பகுதி அல்லது தீவு பகுதிகளிலோ இருக்காது அதே சமயம் இது பயிரிட படுவதில்லை , இயற்கையாகவே வளரக்கூடியது . ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட பனை ,அங்கு வாழ்ந்த ஆதி மனிதர்களால் பனை விதைகளை தங்கள் கைகளுடன் எடுத்து செல்லப்பட்டதால் அடர் காடுகளில் இல்லாமல் ஊரை சுற்றியே இந்த பனை மரங்கள் காணப்படுகின்றன . ஆன் மற்றும் பெண் பனை என இரண்டு வகை உள்ளன , பெரும்பாலும் பூ வந்த பிறகுதான் பனை அடையாளம் காண முடிகிறது . பனை பத்து வருடங்களில் 15 அடி உயரம் வளரும் பனைக்கு மனிதனின் சராசரி வயதை விட இதன் வயது அதிகம் .


பனை மரங்கள் ஆசிய நாடுகளில்தான் அதிகம் காணப்படுகின்றன , இந்தியா , இலங்கை , இந்தோனேசியா , சீனா , வியட்நாம்  போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன . கதர்  மற்றும் சிற்றூர் தொழில் குழுமம் எடுத்த கணக்கின் படி இந்தியாவில் பத்து கோடிக்கு மேல் பனை மரங்கள் இருக்கலாம் . தமிழகத்தில் மட்டும் சுமார் 5 கோடி பனை மரங்கள் இருக்கும். அதுவும் , இதில் 50   விழுக்காடு  மரங்கள்  திருநெல்வேலி , தூத்துக்குடி , ராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாகவும் , சிவகங்கை , சேலம், சென்னை , செங்கற்பட்டு மாவட்டங்களில் அதிக அளவும் , பிற மாவட்டங்களில் 30 லச்சத்திற்கு குறைவாகவும் உள்ளன  


பனையின் பயன்கள் 



பனை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலவனாக 200 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது . பெரும்பாலும் அமெரிக்க ,ஜெர்மனி , பிரிட்டன் , பிரான்ஸ் , இத்தாலி , ஆஸ்திரேலிய , ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது .  பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை உணவு பொருட்கள் மற்றும் உணவு அற்ற பொருட்கள் என பிரிக்கலாம் . பதநீர் ,கருப்பட்டி , வெல்லம் , பனஞ்சீனி , பங்கற்கண்டு , பனமிட்டாய், பனங்கூழ் போன்றவற்றை உணவு பொருட்களாகவும், பனந்தும்பு , காலிகள் , மரம் , பனை ஓலை பொருட்கள் , அலங்கார பொருட்கள் , மற்றும் மரப்பொருட்கள்  போன்றவற்றை நாம் உணவற்ற பனை பொருட்கள் மரத்தில் இருந்து கிடைக்கின்றன .


உயிர் வேலி 


பனை மரத்தை சிறந்த உயிர் வேலி  என்று சொல்லலாம் . ஏன் இது உயிர் வேலியாக இருந்தால் யானை கூட உள்ளே வர முடியாது . ஆடு மாடு தின்னாமல் பார்த்துக்கொண்டால் ஓரளவு நீர் வசதியுள்ள பகுதிகளில் எட்டு ஆண்டுகளில் பலன்தரக்கூடியது .தென்னை பிற்கால மரபு பயிர் ஆனால் , பனை சங்ககாலம் முதல் தமிழ் நாட்டில் தோன்றிய மரம் 


பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு 
சுண்ணாம்பு கலவாவது  கள்  என்ப்படும் 


உடல் குளிர்ச்சி வயித்துப்புண்  போன்றவற்றுக்கு பால் நல்லது 


நுங்கு வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க சாப்பிடலாம் ,


பனம்பழம் சிறந்த சத்துணவாகும் . உயிர் சத்து அதிகம் உள்ளது , பித்தம் வரலாம் அதனால் இதனை சுட்டு சாப்பிடுவது நல்லது  


By


     Smart Vivasayi 





Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...