Skip to main content

நாட்டுக்கோழிகளில் இளங்குஞ்சு பராமரிப்பு






1. நாட்டுக்கோழிகளில் இளங்குஞ்சுக் காலமானது 0.8 வார காலமாகும் .

2.தாய்க் கோழிகளுடன் உள்ள ' குஞ்சுகளுக்குத் தனியாக வெட்டம் (brooder)அளிக்கத் தேவையில்லை . தாய்க் கோழி அரவணைப்பில் மற்றும் சூட்டில் அது வாழத் துவங்கிவிடும் .

3.ஆனால் பண்ணையாக நாம் அமைக்கும் பொழுது , குஞ்சுக்கூடு ( Brooder ) வசதி செய்து கொடுக்க வேண்டும் . அட்டைகள் அல்லது தகரம் கொண்டு வட்ட வடிவக் குஞ்சுக்கூடு உருவாக்க வேண்டும் . இதனுள் செய்தித்தாளைப் பரப்பி விட வேண்டும் .

4. மின்சார விளக்குக் கொண்டு சூடு கொடுக்கலாம் . ஒரு கோழிக் குஞ்சிசுக்கு ஒரு வாட் என்ற அளவில் வெப்பம் அளிக்க வேண்டும் .

5. மின்சாரம் சரிவர கிடைக்காத இடங்களில் கரி அல்லது மண்ணெண்ணெய் அடுப்புகள் மூலம் சூடு கொடுக்கலாம் . இதற்கான பிரத்தியேகமாக உள்ள மண்பாணைகளில் அடுப்புக் கரி கொண்டு தணல் மூட்டியும் , செயற்கை வெப்பம் அளிக்கலாம் . இந்த அடுப்புகளின் மேல் இரும்புத் தட்டுகளைச்
சுற்றிலும் கம்பிவலையிலான தடுப்புகளைம் அமைப்பதால் குஞ்சுகளுக்கு நெருப்பினால் வரும் அபாயங்களைத் தவிர்க்கலாம் .

6. வெப்பம் கொடுக்கும் நேரம் மற்றும் அளவு , தட்பவெட்ப நிலைக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளவேண்டும் . வெயில் காலங்களில் சற்று வெப்பம் குறைத்தே கொடுக்கலாம் . மழை மற்றும் பனிக் காலங்களில் முழு நேரம் வெப்பம் கொடுக்க வேண்டும் .

7. இந்த மின் விளக்கு மூலம் வெளிச்சம் கொடுப்பதால் தாய்க் கோழிகளைப் போல் சூடு கிடைக்கிறது ,

8.முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளியே வரும் போது சிறுதளவு மஞ்சள் கரு உள்ளே எடுத்து வருகிறது . இந்த மஞ்சள் கரு ஒரு வாரத்தில் கறைந்து விடும் . முதல் இரண்டு நாள்களுக்கு இது குஞ்சுகளுக்கு உணவாகவும் பயன்படும் . இந்த மஞ்சள் கரு கறைவதற்கும் இந்தக் குஞ்சுக்கூடு தேவைபடுகிறது . இது போல் வளர்த்தபடும் கோழிக் குஞ்சுகள் முட்டையிடும் பருவத்தைச் சரியான நேரத்தில் அடைந்து விடுகின்றன .

9. குடிநீர் மற்றும் தீவனம் வைக்கும் கலன்களை நன்றாகக் கழுவி , வெயிலில் காய வைத்துத் தயார் நிலையில் வைக்கவும் . ஆனால் இது அனைத்தும் குஞ்சுகள் வருவதற்கு முன் சரி செய்து வைக்க வேண்டும் .

10. முதல் வாரம் , தண்ணீரைக் காய வைத்துக் கோழிக் குஞ்சுகளுக்குப் பருகக் கொடுக்கலாம் . குளுக்கோஸ் அல்லது கருப்பட்டியை சேர்த்துக் கொடுக்க வேண்டும் .

11. தேவையில்லாமல் மருந்துகள் எதுவும் கொடுக்க வேண்டாம் .

12. குஞ்சுகளுக்கு முதலில் தீவனத்தை , தீவனத்தொட்டியில் அளிக்கத் தேவையில்லை . அதற்குப் பதிலாக ரவை மற்றும் குஞ்சுத் தீவனத்தைச் செய்தித்தாளின் மேல் தூவி விடவேண்டும் .

13. சூடேற்றும் உபகரனங்கள் மூலம் முதல் இரண்டு அல்லது மூன்று வாரம் வெப்பம் கொடுக்க வேண்டும் .

14. முதல் மூன்று நாள்களுக்குக் கோழி முட்டைகளை நன்றாக வேக வைத்துத் , தோலை உரித்து நன்றாகப் பிசைந்து அளிக்க வேண்டும் , இதனுடன் அரைத்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கலவையாக்க வேண்டும் .
இதனைத் தினமும் இரண்டு முறை குஞ்சுகளுக்கு அளித்து வந்தால் நலிந்த மற்றும் சோர்வாகக் காணப்படும் குஞ்சுகளில் மாற்றம் காணப்படும் .

15. தினமும் செய்தித்தாள்களை மாற்றி விட வேண்டும் .

16. அதிக நாள்கள் செய்தித்தாள் உபயோகம் செய்தால் , கோழிகளின் கால்கள் வழுக்கத் தொடங்கி விடும் . முடங்கி விடும் .

17. முதல் வாரத்தில் குஞ்சுகள் எச்சம் போட குப்பைமேனி இலை மற்றும் கீழாநெல்லி இலை முடியாமல் இறப்பதை நாம் பார்க்கலாம் . இந்த நிலையைச் சால்மோனேல்லோஸில் எனப்படும் .
இது தாய்க் கோழிகளிலிருந்து , முட்டைக்குப் பரவி , குஞ்சுகளுக்குத் தொற்றிக்கொள்ளும் . இந்த நோயிக்குச் சிகிச்சை அளிக்கும் போது , தாய்க் கோழிகள் மற்றும் குஞ்சுகளுக்கும் சேர்த்துச் சிகிச்சை அளிக்க வேண்டும் . மஞ் சன் கரு சரியாகக் கரையாமல் தங்கிவிட்டாலும் , கோழிக் குஞ்சுகளில் தொட்டள் அழற்சி ஏற்பட்டு இறக்க நேரிடலாம் .

18. வெள்ளைக்கழிச்சல் நோய் ( இராணிக்கட் ) வராமல் தடுக்க 7 ம் நாள் RDVF1 , 28 வது நாள் லசோட்டா போன்ற தடுப்பூசி மருந்துகளைக் கண்ணில் சொட்டு மருந்தாகவும் 8 வது வாரம் RDVK ( அ R2B தடுப்பூசியைப் போடவேண்டும் . வெள்ளைக் கழிச்சல் நோய் , கோழியினங்களைத் தாக்கி மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நச்சுயிரி நோயாகும் . முதல் வாரத்திலும் அதனைத் தொடர்ந்தும் வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்புச் செய்ய வேண்டும் .

19. நோய் கண்ட நிலையில் கீழ்கண்ட மூலிகை மருத்துவம் பயன்படுத்தலாம் . கீழாநெல்லி - 50 கிராம் , சின்ன வெங்காயம் - 5 , சீரகம் - 10 கிராம் , 100 கிராம் வெல்லத்துடன் அரைத்து ஒரு நாளைக்கு மூன்று முறையென மூன்று நாளைக்கு வாய் வழியாகக் கொடுக்க வேண்டும் . இந்தக் கலவை 10 கோழிகளுக்குப் போதுமானது .
நோய்க் கண்ட கோழிகளிலும் இது நல்ல பலனை அளிக்கும் .

29. 15 கிராம் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி அதனைக் கோழிகளுக்குப் பருகக் கொடுக்க வேண்டும் . மேலும் 5-10 மில்லி லிட்டர் பூண்டுச் சாறு 1 லி தண்ணீரில் கலந்து கோழிக் கொட்டகையில் தெளிக்கவும் ,

21. வாழைத் தண்டை நன்றாக அறைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் கோழிகளுக்குக் கொடுப்பதால் கழிச்சலைக் கட்டுப்படுத்தலாம் . எலக்டரால் பொடி அல்லது குளுகோசு கலந்த தண்ணீரைக் கோழிகளுக்குக் கொடுப்பது கழிச்சல் நேரத்தில் தேவையான சத்தைக்
கொடுக்கும் .

22. குப்பைமேனி இலை மற்றும் கீழாநெல்லி இலை போன்றவற்றைக் கோழிகளுக்குக் கொடுப்பது , வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு நல்ல தீர்வாகும் . சீரகம் மற்றும் கீழாநெல்லியை இடித்துப் பின்பு இக்கலவையைத் தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கவும் .

23. மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்குச் சிறு சிறு உருண்டைகளாக ஊட்ட வேண்டும் . தொடர்ந்து மூன்று முதல் ஐந்து நாள்கள் கொடுக்க வேண்டும் . கோடை மற்றும் மழைப் பருவங்களில் ஏற்படும் தட்ப வெட்ப மாற்றங்களில் இந்த நோயின் தீவிரம் அதிகரிக்கும் . இதனைத் தடுக்க மேற்கண்ட மருத்துவம் முன்கூட்டியே செய்யலாம் . இவ்வாறு கடைபிடித்து வந்தால் , தீவன உற்பத்திச் செலவைக் குறைத்துக் கோழி ஒன்றுக்குக் கிடைக்கின்ற நிகர இலாபத்தை அதிகரித்து இத்தொழிலை நிலைநாட்டலாம்

Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...